search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train"

    • ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் நேற்று கடந்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.

    பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.

    ரெயிலில் பெண்கள், குழந்தைகளை விடுவித்த பின்னர், மீதமிருந்த 214 ஆண் பயணிகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். மேலும் குறைந்தது ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவைக்கையில் பாதுகாப்புப் படையினரால் 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு ரெயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ரெயில் கடத்தப்பட்ட பரபரப்பு வீடியோவை பலுச் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது. 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

    இதை பயன்படுத்திய கிளர்ச்சியாளர்கள் சுரங்கப்பாதை எண் 8 அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தை வெடிக்கச்செய்து ரெயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர்.

    ரெயில் தண்டவாளம் வெடிப்பது, ரெயில் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காட்சிகள் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த கடத்தல் நடத்தப்பட்டுள்ளது புலனாகிறது. 

    • ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும் ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது முன்பதிவு அல்லாத பெட்டி ஒன்றில் இருக்கைக்கு கீழே ஒரு டிராலி பேக் கிடந்தது. இதைப்பார்த்த போலீசார் உடனே பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 12 பொட்டலங்கள் கஞ்சா இருந்தன.இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த கஞ்சாவை வெளி மாநிலத்தில் இருந்து மர்ம ஆசாமிகள் கடத்தி வந்துள்ளனர். ஆனால் கஞ்சாவானது நேராக குமரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்டதா? அல்லது ரெயில் வரும் வழியில் வேறு ஏதாவது ஊருக்கு அனுப்பி வைத்ததை எடுக்காமல் விட்டதால் அது நேராக குமரி மாவட்டத்துக்கு வந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்துக்கு பிறகு, அரை-அதிவேக ரெயில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
    • இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும்.

    குஜராத் மாநிலம் காந்திநகர்- மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணியளவில்  மாடு மீது மோதியது. அதுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    மேலும் இந்த விபத்து கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறையாகும். இந்த விபத்துக்கு பிறகு, அதிவேக ரெயில் சேவை சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

    ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில், குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே அதிவேக ரெயிலான வந்தே பாரத் நான்கு எருமை மாடுகள் மீது மோதியது. பிறகு இரண்டு நாட்களில் மீண்டும் மற்றொரு மாடு மீது மோதியது.

    இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "கால்நடைகளுடன் இதுபோன்ற மோதலை தவிர்க்க முடியாது. இருப்பினும், ரயிலை வடிவமைக்கும் போது இது மனதில் வைக்கப்படும்" என்றும் கூறினார்.

    வந்தே பாரத் ரெயிலின் மூன்றாவது சேவையான இந்த ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டும் என்றும் மற்ற ரெயில்களை விட சிறந்த சேவை வசதியைக் கொண்டுள்ளது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

    • திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சென்னை, கேரளா செல்லக்கூடிய ரெயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரமான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, கேரளா செல்லக்கூடிய ெரயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மங்களூர் சென்ட்ரலில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய வெஸ்ட் கோஸ்ட் ரெயில் தினமும் காலை 8.08 மணிக்கு திருப்பூருக்கு வந்து 8.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இந்த ெரயில் இன்று 5 மணி நேரம் 30 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.அதன்படி இந்த ெரயில் திருப்பூருக்கு மதியம் 1:30 மணிக்கு வந்து 1:32க்கு புறப்படும்.

    அதேபோன்று திப்ருகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய சிறப்பு ரெயில் 6 மணி நேரம் 14 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டு இருக்கிறது.அதன்படி திருப்பூருக்கு பிற்பகல் 3.57 மணிக்கு வந்து 3.59 மணிக்கு புறப்படும். கோர்பாவில் இருந்து கொச்சுவேலி வரை செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.43 மணிக்கு வந்து 5.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 10 மணி நேரம் 23 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    அதன்படி இந்த ரெயில் மாலை 4.07 மணிக்கு திருப்பூருக்கு வந்து 4.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இதேபோன்று பல்வேறு ரெயில்கள் இன்று ஒரு மணி நேரம் ,2 மணி நேரம் தாமதமாகவே திருப்பூருக்கு வந்தது. காலை திருப்பதி மற்றும் சென்னை செல்லக்கூடிய இன்டர்சிட்டி ரெயில் 50 நிமிடங்கள் தாமதமாக திருப்பூருக்கு வந்தது. இதேபோன்று திருவனந்தபுரம் செல்லக்கூடிய கேரளா எக்ஸ்பிரஸ், சில்சர் - கோவை எக்ஸ்பிரஸ், தன்பா செல்லக்கூடிய ரெயில்களும் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    • கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந் தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.
    • கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான்.

    திருப்பூர் :

    கொரோனா காரணமா 2½ ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த, கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந்தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.2 நாள் மட்டுமே இயங்கிய நிலையில் காவேரி - ஆனங்கூர் இடையே பராமரிப்பு பணி நடந்ததால் ஜூலை 13 முதல் 24-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரெயில் ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்டு -செப்டம்பர் மாதம் ெரயில் முழுமையாக இயங்கியது. கோவை - திருப்பூர் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக அக்டோபர் 13 முதல் 30-ந்தேதி வரை 17 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

    பணி முடிந்து அக்டோபர் 31 முதல் மீண்டும் இயங்கத் துவங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவேரி - ஈரோடு இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29 வரை 30 நாட்களுக்கு முழுமையாக ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

    இது குறித்து ெரயில் பயணிகள் கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான். ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 6 நாட்கள் இயங்குவதால், ஆயிரக்கணக்கான பயணிகள், பனியன் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர். பகுதி அளவிலாவது பாசஞ்சர் ெரயிலை இயக்க வேண்டும் என்றனர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் - வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது. அதன்படி ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.13352) நாளை ஆலப்புழாவில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும். அதாவது 3 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.

    இதுபோல் எர்ணாகுளம் சந்திப்பு - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) நாளை 2½ மணி நேரம் தாமதமாக எர்ணாகுளத்தில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) நாளை மறுநாள் திருச்சியில் இருந்து 2½ மணி நேரம் தாமதமாக மதியம் 3.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் - கோவை ரெயில் (16321) நாளை மறுநாள் நாகர்கோவிலில் 2 மணி நேரம் தாமதமாக காலை 9.35 மணிக்கு புறப்படும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 134.3 கி.மீ. தூரம் உள்ள சென்னை - கூடூர் பிரிவு தங்க நாற்கர 'ஏ' பிரிவு பாதையாகும்.
    • கடந்த அக்டோபர் 5 முதல் ரெயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் முக்கிய தடங்களில் பயணிகள் ரெயில்களை அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் இயக்க தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரெயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரெயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ரெயில்களின் வேகத்தை ரெயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கி.மீ. மற்றும் 130 கி.மீ. என அதிகரிக்க முடியும்.

    134.78 கி.மீ. தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில் ரெயில்களின் வேகம் ஏற்கனவே மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ. என அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரெயில்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மற்ற 'பி' பிரிவு ரெயில் பாதைகளான அரக்கோணம் - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - போத்தனூர் மற்றும் சென்னை - திண்டுக்கல் ஆகிய பிரிவுகளில் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரிவுகளில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கி.மீட்டரில் இருந்து அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகமான மணிக்கு 130 கி.மீ. என அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக வந்தே பாரத், சதாப்தி ரெயில்கள் இயக்கப்படும் 144.54 கி.மீ. தூரம் உள்ள அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்பாட்டு பணிகளை முடித்து ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த 2022 - 23-ம் நிதியாண்டில் இதுவரை விருத்தாச்சலம் - சேலம், தஞ்சாவூர் - பொன்மலை, விழுப்புரம் - காட்பாடி, நாகர்கோவில் - திருநெல்வேலி, விழுப்புரம் - புதுச்சேரி, தஞ்சாவூர் - காரைக்கால், கோயம்புத்தூர் வடக்கு - மேட்டுப்பாளையம் ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகமான முறையே மணிக்கு 80, 100, 50-80, 100, 100, 50-90, 90 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ.-க்கு அதிகரிக்க ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் இந்த நிதியாண்டில் அரக்கோணம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - திருச்செந்தூர், தாம்பரம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - தென்காசி, சேலம் - கரூர் - நாமக்கல், கடலூர் துறைமுகம் - விருத்தாச்சலம், திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - வாஞ்சி மணியாச்சி ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகமான முறையே மணிக்கு 75/90, 70, 100, 70, 100, 60/75, 100, 100 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ.-க்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    134.3 கி.மீ. தூரம் உள்ள சென்னை - கூடூர் பிரிவு தங்க நாற்கர 'ஏ' பிரிவு பாதையாகும். இந்த பிரிவில் கடந்த அக்டோபர் 5 முதல் ரெயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. தெற்கு ரெயில்வேயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்க அனைத்து தகுதிகளும் உள்ள முதல் ரெயில் பாதை பிரிவு சென்னை - கூடுர் ஆகும். இந்த பிரிவில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முன்பு ரெயில் பாதைகளின் பலம், மின்மய அமைப்புகள், சைகை விளக்குகள், ரெயில் பெட்டிகள் ஆகியவற்றின் திறனை சோதிக்க ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்புடன் இணைந்து தெற்கு ரெயில்வே பல்வேறு ரெயில் சோதனை ஓட்டங்கள் நடத்தியது. அனைத்து சோதனைகளிலும் வெற்றி கிடைத்தவுடன் தற்போது இந்த பிரிவில் ரெயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.

    சென்னை -பெங்களூர் ரெயில் வழித்தடத்தில் ரெயில்களை மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. அதேபோல சென்னை - கூடூர், சென்னை - ரேணிகுண்டா ஆகிய பிரிவுகளில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ.-க்கு அதிகரிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வேக்களும் விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து உள்ளன.

    இந்திய ரெயில்வேயில் 8 வழித்தடங்களில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ.-க்கு அதிகரிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த தகவல்கள், தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

    • பெட்டியிலும் டிஸ்க்பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும் சரியான இடத்தில் நிறுத்த முடியும்.
    • சாதாரண ரெயில் பெட்டிகளை விட இப்பெட்டிகளில் கூடுதலாக பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்.

    திருப்பூர் :

    ரெயில் பயணிகள் வசதிக்காக நிஜாமுதீன், பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரும் அதிவிரைவு ரெயில்களில் எல்.எச்.பி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

    டெல்லி நிஜாமுதீனில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் நிஜாமுதீன் சூப்பர்பாஸ்ட் (22656), பீஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாட்னா சூப்பர்பாஸ்ட் (22670), மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் (16331) உள்ளிட்ட 12ரெயில்களின் பெட்டிகள் எல்.எச்.பி., எனப்படும் நவீனப்பெட்டிகளாக மாற்றப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    நிஜாமுதீன், பாட்னா ரெயில்களில் இந்தப்பெட்டிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் திருவனந்தபுரம் ரெயிலிலும் இணைக்கப்படுகிறது.ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் சென்னை ஐ.சி.எப்.,பில் தயாராகி வரும் எல்.எச்.பி., எனப்படும் அதிநவீன ரெயில் பெட்டிகள் நீண்ட தூர, அதிவிரைவு ரெயில்களுக்கு பொருத்தப்படுகிறது. சாதாரண ரெயில் பெட்டிகளை விட இப்பெட்டிகளில் கூடுதலாக பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்.

    பிற ரெயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் அதிவேகமாக இயக்க சவுகரியமாக இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்க்பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும் சரியான இடத்தில் நிறுத்த முடியும். விபத்தின்போது ஒரு பெட்டி மற்றொரு பெட்டியுடன் மோதி சேதமடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை-மணியாச்சி, சென்னை-திண்டுக்கல் ரெயில் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
    • 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்களில் பயணிகள் ரெயிலை அதிகபட்ச வேகத்தில் இயக்குவது என்று தென்னகரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக அந்தப் பகுதிகளில்ரெயில் பாதையை பலப்படுத்துதல், மின்மயமாக்கல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    ரெயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரெயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம்ரெயில்களின் வேகத்தை ரெயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கி.மீ. மற்றும் 130 கி.மீ. என அதிகரிக்க முடியும்.

    134.78 கி.மீ. தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில்ரெயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரெயில்களின் வேகத்தை மேலும் அதிக ரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை - திண்டுக்கல் பிரிவில் ரெயில் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கி.மீ.-ல் இருந்து 130 கி.மீ. என்று அதிகரிக்கப்பட உள்ளது. மதுரை-வாஞ்சி மணியாச்சி பிரிவில் 100 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திய ரெயில்வேயில் 8 வழித்தடங்களில்ரெயில் வேகத்தை மணிக்கு 160 கி.மீ. -க்கு அதிகரிக்கரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரெயில்வே மண்டலங்கள் பல்வேறு பிரிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து வருகின்றன.

    • தண்டவாளத்தை பலப்படுத்துவது, ஜல்லிக்கற்கள் கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது.
    • ரெயில்களின் வேகம் மணிக்கு குறைந்தது 60 முதல் அதிகபட்சம் 80கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.

    உடுமலை:

    கேரளா, தமிழகத்தை இணைக்கும் முக்கிய ரெயில் வழித்தடமாக பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடம் உள்ளது.இந்த வழித்தடத்தில் மீட்டர்கேஜ் காலத்தில், பாலக்காட்டில் இருந்து மதுரை வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. திண்டுக்கல் - மதுரை அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்ட பின், இந்த ரெயில் பாலக்காடு - திண்டுக்கல் ரெயிலாக மாற்றப்பட்டது. தொடர்ந்து பாலக்காடு - திண்டுக்கல் அகல ரெயில்பாதை பணி, 2008ல் துவங்கிய போது இந்த ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த ெரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கொரோனாவுக்கு முன் கோவை - பொள்ளாச்சி இடையே அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலை இயக்கவும், பாலக்காடு ரெயில்வே கோட்ட நிர்வாகம் ெரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-

    பாலக்காடு - திண்டுக்கல் ரெயில், பழநி, உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கோவை மாவட்ட மக்கள், தென் மாவட்டங்களுக்கு எளிதில் சென்று வர ஏதுவாக இருந்தது. இந்த ரெயில் நிறுத்தப்பட்டதால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களுக்கு வணிக ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்த ரெயிலை இயக்க பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரெயிலை திருச்சி வரை நீட்டிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வேகம் அதிகரிப்பு

    மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பழனியில் இருந்து 65 கி.மீ., தொலைவில் பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி அமைந்துள்ளது.

    இந்த வழித்தடம் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரள மாநிலம் மற்றும் கோவை உள்ளிட்ட தமிழக மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த வழித்தடத்தில் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரெயில், கோவை -மதுரை, சென்னை -பாலக்காடு, பாலக்காடு -திருச்செந்தூர் ஆகிய ெரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்வரையிலான வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் மணிக்கு குறைந்தது 60 முதல் அதிகபட்சம் 80கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.

    இதை 110 கி.மீ., ஆக அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.இதற்காக தண்டவாளத்தை பலப்படுத்துவது, ஜல்லிக்கற்கள் கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது.அதன்பின் ரெயில்களின் நேர அட்டவணையை மாற்றி ரெயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பொள்ளாச்சி- திண்டுக்கல் வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டால் 2மார்க்கங்களிலும் பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சேலம்-கோவை மெமு ெரயில் இயக்கம், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் கடந்த ஜூலை 11ந் தேதி தொடங்கப்பட்டது. இரண்டு நாள் ரெயில் இயங்கிய நிலையில் காவேரி-ஆனங்கூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 14 முதல் 24-ந்தேதி வரை, 10 நாட்களுக்கு ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

    ஆகஸ்டு-செப்டம்பர் மாதம் ரெயில் இயங்கியது. அக்டோபர் 13 முதல் 30-ந்தேதி வரை இரண்டாவது முறையாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. நவம்பர் முதல் மீண்டும் ரெயில் இயங்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவேரி-ஈரோடு இடையே பொறியியல் பணியால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 30 நாட்களுக்கு 3-வது முறையாக இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    டிசம்பர் முதலாவது ரெயில் இயங்குமென சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட பயணிகள் காத்திருந்தனர். ஆனால் சேலம் யார்டில் பணிகள் நடப்பதாக கூறி டிசம்பர் 1, 2 மற்றும், 3-ந் தேதிகளில் என 4-வது முறையாக கோவை-சேலம் மெமு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • செல்போனை வைத்து நல்லவற்றுக்கு பயன்படுத்தினால் சரிதான்.
    • கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை :

    விரல் நுனியில் உலகம்... இதுதான் இப்போதைய இளைஞர்களின் நிலை. நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்து பரிமாற்றம் உள்பட அனைத்துக்கும் அவர்களுக்கு உதவும் முக்கிய பொருளாக செல்போன் ஆகிவிட்டது. அந்த செல்போனை வைத்து நல்லவற்றுக்கு பயன்படுத்தினால் சரிதான். ஆனால் அவர்களுக்கும், பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விபரீத விளைவுகளுக்கும் திடீரென ஆளாகிவிடுகின்றனர்.

    குறிப்பாக ஓடும் ரெயில் அருகே, ஓடும் பஸ்சின் படிக்கட்டில், வெள்ளம் ஓடும் நீர்நிலைகளின் அருகில், வனவிலங்குகளின் அருகில் நின்று செல்பி எடுப்பது போன்ற அபாயகரமான செயலில் ஈடுபடுபவர்கள் தற்போது அதிகரித்துள்ளனர். இது அவர்களுக்கு சாகசமாக தெரிகிறது. ஆனால் பிரச்சினை ஏற்படும் போதுதான் அவர்களின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.

    இளைஞர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இளம்பெண்களும் ஓடும் பஸ், ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி செல்பி எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய தொடங்கி விட்டனர். இந்த நிலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம் , காரமடை, மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு அதிகளவில் வந்து செல்கிறார்கள். அதுபோன்று தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பலரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    நேற்று மதியம் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி ரெயில் சென்றது. அந்த ரெயில் கோவை -அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தை தாண்டி சென்றபோது, அந்த ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் அமர்ந்திருந்த 3 கல்லூரி மாணவிகள், திடீரென படிக்கட்டு பகுதிக்கு வந்தனர்.பின்னர் அவர்கள் ஒற்றை கையில் அங்கிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் செல்போன் மூலம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செல்பி எடுத்தது மட்டுமல்லாமல், ஒரு மாணவி தனது செல்போன் மூலம் மற்ற 2 மாணவிகளை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    கோவை -அவினாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் ரெயில் மெதுவாகதான் செல்லும். இருந்தபோதிலும் ஒற்றை கையில் கம்பியை பிடித்துக்கொண்டு செல்பி என்ற பெயரில் சாகசம் செய்யும்போது, கை நழுவினால் என்ன ஆவது?. கரணம் தப்பினால் மரணம் என்பதை இதுபோன்ற சாகசத்தில் ஈடுபடுபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டிய கல்லூரி மாணவிகளே இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா?. எனவே அவர்கள் இனியாவது இதை உணர்ந்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் 110 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    • இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து 61 கி.மீ. தூர ரெயில் பாதை அமைந்துள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 7 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இந்த 7 ரெயில்கள் பல்வேறு பகுதிக்கு செல்கின்றன. தற்போது இந்த பகுதியில் ரெயில்கள் 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடந்தன. ரெயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதையடுத்து திருநெல்வேலி-திருச்செந்தூர் ரெயில்வே பிரிவில் ரெயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பகுதியில் ரெயில்கள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.

    மேலும் செங்கோட்டை-கொல்லம், திண்டுக்கல்-பழனி-பொள்ளாச்சி, மதுரை-விருதுநகர் ஆகிய பிரிவுகளில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நேரடி ரெயில் பாதையில் இருந்து அருகில் உள்ள ரெயில் பாதையில் பயணிக்கும் போது இதுவரை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதுவும் தற்போது இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெயில்களை வேகமாக இயக்குவதால் பயணிகளின் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது.

    ×