என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்னி"

    • வெற்றிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
    • இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வெற்றிலை - 10

    காய்ந்த மிளகாய் - 4

    வெங்காயம் - ஒன்று

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    பூண்டுப் பல் - 3

    புளி - கோலிக்குண்டு அளவு

    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    வெற்றிலைத் துவையல்

    வெற்றிலைத் துவையல்

    செய்முறை:

    வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.

    அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.

    • அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
    • மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பூ - 1

    கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    புளி - எலுமிச்சை அளவு

    காய்ந்த மிளகாய் - 4

    துருவிய தேங்காய் - கால் கப்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை:

    வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.

    அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.

    மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.

    இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.

    • இந்த சட்னி இரண்டு நாட்கள் வரை கெட்டு போகாது.
    • இட்லி தோசைக்குக் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வரமிளகாய் - 7 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி

    வெங்காயம் - 1 பெரியது

    தக்காளி - 1 பெரியது

    புளி - சிறிது,

    பூண்டு - 5 பல்

    உப்பு- 1 /2 தேக்கரண்டி

    தாளிக்க:

    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    கடுகு - 1 தேக்கரண்டி

    உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - 1 கொத்து

    செய்முறை :

    வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

    தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

    நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிச்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த அரைத்த சட்னியில் ஊற்றி கிளறி பரிமாறவும்.

    இப்போது காரசாரமான மிளகாய் சட்னி தயார்.

    இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.

    • முருங்கை கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி துவையல் செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    துளிர் முருங்கைக் கீரை - 1 கப்

    உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி

    காய்ந்த மிளகாய் - 8

    புளி - நெல்லிக்காய் அளவு

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 5 பல்

    கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும்.

    10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.

    வதக்கிய பொருட்கள் ஆறியவுடன் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.

    இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    • இட்லி, தோசைக்கு இந்த சட்னி அருமையாக இருக்கும்.
    • இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். ருசியோ அருமை.

    தேவையான பொருட்கள்

    காய்ந்த மிளகாய் - 10

    பூண்டு பல் - 3

    புளி - நெல்லிக்காய் அளவு

    உப்பு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை

    செய்முறை

    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

    சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார்.

    இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

    • கத்திரிக்காயை வைத்து சாம்பார், புளிக்குழம்பு மட்டுமே செய்திருப்போம்.
    • இன்று கத்தரிக்காயில் அருமையான சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - கால் கிலோ

    தக்காளி - 3

    பெ. வெங்காயம் - 2

    ப. மிளகாய் - 2

    காய்ந்த மிளகாய் - 4

    கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், 1 வெங்காயம், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

    பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை மட்டும் நீக்கி கொள்ளவும்.

    தோல் நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நாம் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.

    • வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும்.
    • இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வெந்தயக் கீரை - 2 கட்டு,

    வெங்காயம் - 1,

    தக்காளி - 2,

    இஞ்சி - ஒரு துண்டு,

    காய்ந்த மிளகாய் - 8,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கடுகு - சிறிதளவு,

    கறிவேப்பிலை

    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவைக்க வேண்டும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தை சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்க வேண்டும்.

    இப்போது சூப்பரான வெந்தயக்கீரை துவையல் ரெடி.

    • உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடை செய்கிறது.
    • பாசி பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1 கப்

    தேங்காய் - 2 துண்டு

    புளி - நெல்லிக்காய் அளவு

    பூண்டு - 2 பல்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    வரமிளகாய் - 6

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    வர மிளகாய் - 2

    கறிவேப்பிலை - 1 கொத்து

    எண்ணெய் - தாளிக்க

    செய்முறை

    பச்சை பயிறை நன்கு சுத்தம் செய்து, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு அதனுடன் ஊற வைத்துள்ள பச்சை பயிறை போட்டு அதனுடன் பூண்டு, புளி, தேங்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

    பின் அதில் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    இப்போது சூப்பரான பச்சை பயறு சட்னி ரெடி!!!

    • நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
    • கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும்.

    தேவையான பொருட்கள்:

    நெல்லிக்காய் - 10

    கொத்தமல்லித்தழை - 1 கப்

    கறிவேப்பிலை - ¼ கப்

    பச்சை மிளகாய் - 7

    இஞ்சி - சிறு துண்டு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    தேங்காய் - சிறு துண்டு

    கடுகு - ½ டீஸ்பூன்

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.

    பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும்.

    கலவை ஆறியதும் பசை போல அரைத்துக்கொள்ளவும்.

    கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.

    இதை, தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறவும். இப்போது 'நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி' தயார்.

    • மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
    • முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    முட்டைகோஸ் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    இஞ்சி - 1/2 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    புளி - சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)

    துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 1

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முட்டைகோஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பிறகு அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைகோஸ் சட்னி ரெடி!!!

    • இந்த சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த சட்னி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    தக்காளி - 3,

    பெரிய வெங்காயம் - 2,

    புதினா - அரை கைப்பிடி,

    வர மிளகாய் - 5,

    புளி - ஒரு சிறு நெல்லி அளவு,

    இஞ்சி - ஒரு சிறு துண்டு,

    கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,

    சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடுகு, கறிவேப்பிலை

    செய்முறை :

    தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

    புதினா இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இஞ்சியை தோல் உரித்து கொள்ளுங்கள்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் அதில் புளி மற்றும் இஞ்சி சேர்த்து வறுக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

    தக்காளி சேர்த்த பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்.

    அடுத்து புதினா இலைகளைச் சேர்த்து சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

    இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நைஸாக அரைக்க வேண்டும்.

    ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுதாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் தக்காளி புதினா சட்னி தயார்.

    இதனுடன் சூடான இட்லி, தோசை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

    • இந்த சட்னி சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது.
    • வாழைத்தண்டு சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு (நறுக்கியது) - ஒரு கப்

    பூண்டு - 4 பல்

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்

    புளி - தேவையான அளவு

    உளுந்து - 3 டீஸ்பூன்

    தனியா(மல்லி) - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    வெள்ளை எள் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.

    செய்முறை :

    வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெறும் வாணலியில் உளுந்து, தனியா (மல்லி), சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் வெள்ளை எள்ளை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து ஆறவிடவும்.

    வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும்.

    வாழைத்தண்டு ஆறியதும், ஏற்கெனவே வதக்கிய வற்றுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல், உப்பு, புளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வாழைத்தண்டு சட்னி ரெடி.

    ×