என் மலர்
நீங்கள் தேடியது "Yarn"
- பருத்தி வரத்து குறைவு மற்றும் நூலுக்கான தேவை அதிகரிப்பை அடுத்து நூல் விலை உயர்வு
- ரூ.220 முதல் ரூ.380 வரை விற்பனையாகி வந்த நூலின் விலை அனைத்து ரகங்களிலும் ரூ.3 அதிகரிப்பு
திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.178, 16-ம் நம்பர் ரூ.188, 20-ம் நம்பர் ரூ.246, 24-ம் நம்பர் ரூ.258, 30-ம் நம்பர் ரூ.268, 34-ம் நம்பர் ரூ.286, 40-ம் நம்பர் ரூ.306, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.243, 24-ம் நம்பர் ரூ. 253, 30-ம் நம்பர் ரூ.263, 34-ம் நம்பர் ரூ. 276, 40-ம் நம்பர் ரூ.296-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்றம் இல்லாமல் சீராக இருந்தது. இந்நிலையில் திடீரென நூல் விலை ரூ.3 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் அதிர்ச்சிடைந்துள்ளனர்.
- நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
- கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர்:
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.
இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.
இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி நடப்பு மாதத்திற்கான (ஜனவரி) நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர். இதனால் திருப்பூர் ஜவுளி தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
- கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மே மாதத்திற்கான நூல் விலை மாற்றம் இல்லாமல் கடந்த மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளது.
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. நடப்பு மாதத்திற்கான (மே) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர்.
இதில் கடந்த மாத விலையே தொடரும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 30 எண்ணுக்கு அதிகமான நூல் வகைகள் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத விலையில் குறைப்பு இல்லை என்றாலும் நடப்பு மாதத்தில் விலை ஏறாமல் இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.
இதன்படி (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202க்கும், 20-வது நம்பர் ரூ.260-க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர், ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன. சமீப நாட்களாக நூல் விலை ஏற்றம் துணி உற்பத்தியாளர்களை பெரிதும் பாதித்து வருகிறது.
பஞ்சு, நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, கடந்த 22-ந் தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரை, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.
போராட்டத்தை தொடர்ந்து தினசரி 20 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜவுளி உற்பத்தியாளர்களின் இந்த போராட்டம் காரணமாக, விசைத்தறி இயக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில்:
ஜவுளி உற்பத்தியாளர் மூலம் பாவு நூல்கள் பெற்று கூலிக்கு நெசவு செய்து வருகிறோம். நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பாவு நூல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பாவு நூல்கள், ஓரிரு தினங்களுக்கு வரும். உற்பத்தி நிறுத்த போராட்டத்தால், திருப்பூர் மாவட்டத்தில் 30 சதவீதத்துக்கும் மேல் தறிகள் நின்றுள்ளன.
வரும் வாரத்தில், பாவு நூல்கள் இன்றி, தறிகள் இயக்கம் மேலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், விசைத்தறி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள், மவுனம் சாதிக்காமல், தொழில்துறையின் பிரச்சினைகளை களைய முன்வர வேண்டும் என்றனர்.
திருப்பூர்:
நடப்பு சீசனில் பருத்தி பஞ்சு விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, வரலாறு காணாத வகையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. பஞ்சு விலை உயர்வுக்கு ஏற்ப தமிழக நூற்பாலைகள் கடந்த 18 மாதங்களாக நூல் விலையை தொடர்ந்து உயர்த்திவருகின்றன.
வழக்கமாக மாதம் 5 முதல் 10 ரூபாய் உயர்த்தும் நூற்பாலைகள்தற்போது தடாலடியாக மாதம் 30 முதல் 40 ரூபாய் வரை நூல் விலையை உயர்த்தி விடுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் கிலோவுக்கு 30 ரூபாய், இம்மாதம் கிலோவுக்கு 40 ரூபாய் என இரண்டே மாதங்களில் ஒசைரி நூல் விலை கிலோவுக்கு 70 ரூபாய் உயர்ந்தது.
அபரிமித நூல் விலையால், திருப்பூர் நிறுவனங்களின் பின்னலாடை உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. குறு, சிறு நிறுவனங்கள்,நூல் கொள்முதலுக்கு போதிய நிலையின்றி தவிக்கின்றன.
பல நிறுவனங்கள் வெளிமாநில, வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து புதிய ஆர்டர் பெறமுடியாமலும், பெறப்பட்ட ஆர்டர் மீது ஆடை தயாரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இம்மாதம் உயர்த்தப்பட்ட கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலையை நூற்பாலைகள் வாபஸ் பெறவேண்டும் என திருப்பூர் பின்னலாடை துறையினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
பஞ்சு விலை உச்சத்தில் உள்ளதால் நூல் விலை குறைவது சந்தேகமாகவே உள்ளது.மாதம்தோறும் 1-ந் தேதி, தமிழக நூற்பாலைகள், புதிய நூல் விலை நிர்ணயித்து வெளியிடுகின்றன. நூல் விலை மேலும் உயரலாம் என்கிற தகவல்கள் பரவுகின்றன.
நூற்பாலைகளின் ஜூன் மாதம் நூல் விலை நிலவரம் எப்படியிருக்குமோ என்கிற கவலை பின்னலாடை துறையினரை தொற்றிக் கொண்டுள்ளது. ஸ்திரமில்லாத நூல் விலை, பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்துவகை நிறுவனங்களையும் பாதிக்கச் செய்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், வெளிநாட்டு ஆர்டர்கள் கைநழுவி, நிரந்தரமாக போட்டி நாடுகளை நோக்கி சென்றுவிடும்.
நெருக்கடியான இந்த சூழலை உணர்ந்து தமிழக நூற்பாலைகள், நூல் விலையை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். ஜூன் மாதம் நூல் விலையை குறைக்க வேண்டும் என்பது, பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜூன் மாதம் நூல் விலை நிலவரம் எப்படியிருக்குமோ என்கிற கவலை பின்னலாடை துறையினரை தொற்றிக் கொண்டுள்ளது.