என் மலர்
நீங்கள் தேடியது "GTvRR"
- குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்க இயலவில்லை.
- 2-வது முறையாக ராஜஸ்தான் அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்க இயலவில்லை. பந்து வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடைசி ஓவரில் அந்த அணி 30 யார்டு வட்டத் துக்குள் 5 வீரரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 2-வது முறையாக அந்த அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியான் பராக்குக்கு ரூ.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது.
மேலும், சஞ்சு சாம்சனை தவிர்த்து அணியில் விளையாடிய மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
- இப்போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் அட்டமிழந்த ரியான் பராக் நடுவரிடம் கோவப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் பொது 7வது ஓவரை குல்வந்த் கெஜ்ரோலியா வீசினார்.
அப்போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தைத் பராக் அடிக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டு கீப்பரில் கைகளுக்கு சென்றதாக கூறி நடுவர் அவுட் கொடுத்தார்.
உடனடியாக பராக் மேல்முறையீடு செய்தார். அப்போது பந்து பேட்டின் பக்கத்தில் வரும்போது பேட் தரையில் உரசியது தெரியவந்தது. ஆனால் பேட் தரையில் உரசுவதற்கு முன்பே பந்து பேட்டில் பட்டதாக கூறி மூன்றாம் நடுவரும் அவுட் கொடுத்தார்.
இதனால் கோபமடைந்த பராக் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை சாய் சுதர்சன் அடித்துள்ளார்.
- சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை ஏபி டிவில்லியர்ஸ் அடித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.
இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சாய் சுதர்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை சாய் சுதர்சன் அடித்துள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே மைதானத்தில் தொடர்ந்து அதிக அரை சதங்கள் அடித்த ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை சாய் சுதர்சன் சமன் செய்தார்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை ஏபி டிவில்லியர்ஸ் அடித்துள்ளார்.
- பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம்.
- பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம் என தெரிவித்தார்.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியது.
இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:
பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம். அதேபோல் பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம்.
குறிப்பாக ஹெட்மயர் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளியபோது என் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டேன். அங்குதான் ஆட்டம் எங்களின் கைகளில் இருந்து நழுவியது.
பவுலிங்கில் ஆர்ச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தது. சுப்மன் கில் விக்கெட்டை திட்டமிட்டபடி எடுக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் திட்டமிட்டது வேறு, ஆனால் செயல்படுத்திய திட்டம் வேறு. அடுத்த போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாளை பார்க்க வேண்டும்.
சில நேரங்களில் டிபென்சில் மட்டுமின்றி, சேசிங்கில் போட்டிகளை வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். டாஸ் முடிவு குறித்து போட்டிக்கு பின் மாற்றி செய்திருக்கலாமா என்று தோன்றுவது சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு அணியாக டிபென்சில் மட்டுமல்லாமல் சேசிங்கிலும் வெல்ல முயற்சித்தோம் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய குஜராத் 20 ஓவரில் 217 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 53 பந்தில் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜாஸ் பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் ராகுல் டெவாட்டியா 12 பந்தில் 24 ரன்கள் குவித்தார்.
ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே, மகேஷ தீக்ஷனா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும், நிதிஷ் ரானா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் ரியான் பராக் இணைந்தார். ரியான் பராக் 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். சஞ்சு சாம்சன் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹெட்மயர் தனி ஆளாகப் போராடினார். அவர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்து 52 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.
குஜராத் அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இன்று நடைபெறும் 2வது போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 4 ரன்னில் வெளியேறினார். சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட்டாகினர்.
பொறுப்புடன் ஆடிய ஷுப்மன் கில் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் மனோஹர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 27 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.
ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.