என் மலர்
நீங்கள் தேடியது "அனந்தநாக் என்கவுண்டர்"
- காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
- இதில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராணுவ சிறப்பு படைப்பிரிவினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்றும், 3 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ளூர் போலீசார், பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.