என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.என். ரவி"

    • கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார்.
    • ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை.

    ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ காலாவதியாகி விட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க நினைக்கிறார்கள். அது ஒரே பாரதம் ஒரே இந்தியா கொள்கைக்கு பொருந்தாத ஒன்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், திராவிட மாடல் கொள்கை நாட்டின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தியாகிகளின் நினைவு மற்றும் வரலாற்றை அழிக்கும் வகையில் பேசப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

     

    ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டிக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

    அதில், "கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியை பார்க்கும் போது அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்திருப்பது போல் தெரிகிறது. ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான். ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை."

    "ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் அவர் செய்து கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம். எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி நிர்வாக விவரங்களை பொதுவெளியில் பேசி வருகிறார் ஆளுநர்."

    "மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பம் இல்லை என்றால், வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர, அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவியல்ல. ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது." என்று தெரிவித்தார்.

    • ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன.
    • அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.

    மாநாட்டில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 48 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரும்பாலான துணை வேந்தர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன. மேலும் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமி யங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.


    இன்றைய முதல் நாள் மாநாட்டில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வைத்திய சுப்பிரமணியம் எழுதிய நிறுவன மேம்பாட்டு திட்டம்- பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ண றிவு எதிர்காலம் குறித்து விளக்கப்பட்டது.

    மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினர். யு.ஜி.சி. சி.ஐ.எஸ்.ஆர். தேர்வுகளில் தகுதி பெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்றுமுன்தினம் மாலை ஊட்டிக்கு வந்தார். வருகிற 30-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். மாநாடு நிறைவுக்கு பின் 29-ந் தேதி கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சி முனையை பார்வையிடுகிறார். பின்னர் 30-ந் தேதி ஊட்டியில் இருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    • முதலமைச்சர் அரிட்டாபட்டி செல்ல இருப்பதால் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனத் தகவல் வெளியானது.
    • தற்போது முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    குடியரசு தினத்தையொட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ள ராஜ் பவனம் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு ஒவ்வொரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போன்ற கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. நேற்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.

    இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தகவல் வெளியானது.

    டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை அல்லது அரிட்டாப்பட்டியில் நாளை பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அரிட்டாபட்டி மக்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு செல்கிறார். சென்னையில் நாளை குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழா முடிந்த பிறகு அரிட்டாபட்டி புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் தேநீர் விருந்தை புறக்கணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். ஆளுநரின் தொடர்ச்சியான எதிர்மறை செயல்பாடு காரணமாக தமிழக அரசு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • காங்கிரஸ், சிபிஎம், விசிக, போன்ற கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளன.
    • ஆளுநரின் தேநீர் விருந்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

    குடியரசு தினத்தையொட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ள ராஜ் பவனம் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு ஒவ்வொரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    காங்கிரஸ், சிபிஎம், விசிக, தமிழக வெற்றிக்கழகம் போன்ற கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேநீர் விருந்தை தமிழக அரசும் புறக்கணித்துள்ளது.

    இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தொடங்கியது. இதில், பாஜக, அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    தேசிய கல்வி கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைப் படுத்தப்படும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. 

    நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் வளர்ச்சிக்காக கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டு தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. 

    தேசிய கல்வி கொள்கையால் கல்வித்துறையில் புதிய சீர்திருத்தம், புதிய மறுமலர்ச்சி ஏற்படும். தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

    தேசிய கல்வி கொள்கையின் அடித்தள தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதனை முழுமையாக படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அப்போதுதான் அதனை செயல்படுத்த முடியும். 

    இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள்,  நமது பூர்வீகக் கல்வி முறை, தொழில்துறையை  திட்டமிட்டு அழித்தனர். இதனால் இந்திய சமூக அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளுக்கு அடித்தளமிட்டது. 

    ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் மில், இந்தியாவின் இழிவான இட்டுக்கட்டப்பட்ட வரலாறு கொண்ட பாடப்புத்தகத்தை உருவாக்கினார்.

    காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறவும், இந்தியாவை மீட்டெடுக்கவும் தேசியவாதம் ஒரு வழியாகும். 2014 ஆண்டில் ஒரு புரட்சிகர மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது.  

    இப்போது தேசிய கல்விக் கொள்கை இந்திய அறிவு அமைப்பு உட்பட நமது கடந்த காலத்தின் பெருமையை மீண்டும் கண்டுபிடிப்பதில் புரட்சிகர மாற்றத்தை ஆதரிக்கிறது.

    பல மொழிகள், பல இனங்கள், பல விதமான பழக்கங்கள் இவை அனைத்தும் ஒன்றிணைத்து தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் கல்வி முறையை தரம் உயர்த்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    சரியான அணுகுமுறையுடன் தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப் படுத்தப்பட கல்வியாளர்கள் பெரிதும் உதவியாக இருந்து வருகின்றனர்.  

    இந்தியா தற்போது 75வது ஆண்டு சுதந்திர விழாவை கொண்டாடி வருகிறது. அடுத்த கால் நூற்றாண்டு முக்கியமானது. நமது தேசம் 2047 ஆண்டில் 100 வது ஆண்டு சுதந்திர விழாவை கொண்டாடும் போது உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி தேசிய கல்வி கொள்கை பயனிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×