search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nadars"

    ஆலங்குளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது.
    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது.
    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தூசி. செல்வராஜ், அமைப்புச் செயலர்கள் தங்கசாமி, மாவட்ட செயலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வழக்குரைஞர் அணி பொருளாளர் பால்ராஜ் வரவேற்றார்.   பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன், மாநில துணைத் தலைவர் லூர்து, வர்த்தக அணித் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    கூட்டத்தில் நான்கு வழிச்சாலைப் பணியால் தற்போதுள்ள காமராஜர் சிலை  அகற்றப்பட உள்ளதால், வேறு புதிய இடத்தில் காமராஜர் சிலை நிறுவ அனுமதி அளிக்க வேண்டும், பனைத் தொழி லாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் வழக்குரைஞர் நெல்சன், அருணாசலம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.
    ×