என் மலர்
நீங்கள் தேடியது "car festival"
- கடந்த 1-ந் தேதி காலை தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு 3 நாட்களுக்கு தேரோட்டம் நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு 140-வது ஆண்டு மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
விழாவையொட்டி கடந்த 1-ந் தேதி காலை தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு மேல் பள்ளய பூஜை நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நாளை 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணிக்கு மேல் அவிட்ட நட்சத்திரத்தில் சாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் திருத்தேர் நிலைபெயர்த்தல் நிகழ்ச்சி (தேரோட்டம்) நடைபெறுகிறது. 20-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் 2-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி உள்ளூர் ஆந்தை குலத்தவர்கள், 23-ந் தேதி தனஞ்செயக்குலத்தவர்கள், 24-ந் தேதி மாடகுலத்தவர்கள், 25-ந் தேதி தென்முக ஆந்தை குலத்தவர்கள், 26 -ந் தேதி வடமுக ஆந்தை குலத்தவர்கள், 27-ந் தேதி ஓதாள குலத்தவர்கள், 28-ந் தேதி இலுப்பைக்கிணறு தனஞ்செய குலத்தவர்கள், மார்ச் 1-ந் தேதி கல்லி குலத்தவர்கள், 2-ந் தேதி வண்ணக்கன் குலத்தவர்கள், 3-ந் தேதி நரிப்பழனிகவுண்டர் வகையறா ஆந்தை குலத்தவர்கள், 4-ந் தேதி ஆதிகருப்பன்வலசு நஞ்சப்ப கவுண்டர் வகையறா தனஞ்செய குலத்தவர்கள், 5-ந் தேதி பலிஜவார்கள் குலத்தவர்கள், 6-ந் தேதி திருக்கோவில் முறை பூசாரிகள் மண்ட கட்டளையும் நடக்கிறது. 6-ந் தேதி மஞ்சள் நீர் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. 22-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 13 நாட்கள் குலத்தவர்களின் மண்டப கட்டளைதாரர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கலெகடர், காவல்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் குலத்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர். தேர்த்திருவிழாவையொட்டி இன்று முதல் 21 -ந் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ந்து இரவு புராண நாடகம், இசை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சி, பட்டிமன்றம் ஆகியன நடைபெற உள்ளன.
- 31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.
- 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது.
அவினாசி :
கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை 21-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.
31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5-ந் தேதி காலை அதிர்வேட்டு முழங்க அம்மன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது வீற்றிருக்கும் சாமியை தரிசனம் செய்கின்றனர்.
பின்னர் பிற்பகல் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது. 8-ந் தேதி பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.
- தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது.
உடுமலை :
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாட ப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மாலை, 4மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மாலை, 6மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏப்ரல் 4-ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு 12மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி மதியம் 1 மணிக்கு கொடியேற்றுதல், மதியம் 2மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி தொடங்கி 11-ந் தேதி இரவு 10மணிக்கு பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. 12ந் தேதி அதிகாலை 4மணிக்கு மாவிளக்கு, மாலை 3 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4மணிக்கு தேரோ ட்டமும் நடக்கிறது.14-ந் தேதி காலை 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு பரிவேட்டை, இரவு 11 மணிக்கு வான வேடிக்கை நிகழ்சிகள் நடக்கிறது.15ந்தேதி காலை 8:15 மணிக்கு கொடியிறக்கம், காலை 11மணிக்கு மகா அபிேஷகம், பகல் 12மணிக்கு மஞ்சள் நீராட்டம், மாலை 7மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
திருவிழா காலங்களில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் தினமும் இரவு 7 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சிகளும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
- கொண்டத்து காளியம்மன் கோவிலில் வருகிற 4-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
- பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், கழிவறைகள், குடிநீர் வசதி, தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பெருமாநல்லூர் :
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் வருகிற 4-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. குண்டம் இறங்குவதற்கு அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, திருப்பூர் மாநகர பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிய உள்ளனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், 30-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், பக்தர்களுக்கு குடிநீர் வசதி ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, தங்கும் வசதி, சிறப்பு பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு சசாங் சாய் கோவிலுக்கு வருகை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் பக்தர்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 4 கண்காணிப்பு கோபுரம், 5 பகுதிகளில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் அவினாசி தீயணைப்புத்துறையினரும் ஈடுபட உள்ளனர். ஆய்வின் போது பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
- 5 ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 4ந் தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
அவினாசி :
அவினாசி அருகேயுள்ள கருவலூரில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 5 ந்தேதி தேரோட்டம் நடக்கி றது. முன்னதாக தேர்த்திரு விழாவின் முக்கிய நிக ழ்வான திருக்கொடி யேற்றம் நிகழ்ச்சி நேற்று கோவிலில் நடந்தது. கோவில் முன்புறமுள்ள கொடிகம்பத்தை தூய்மை ப்படுத்தி சிறப்பு பூஜை நடந்தது.
இதில் கோவில் அர்ச்சகர் ஹோமமந்திரம் மற்றும் பக்தி பாடல்கள் பாடி மேள வாத்தியம் முழங்க கொடி மரத்தில் கொடியே ற்றப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு பூத வாகன காட்சி, 3ந்தேதி இரவு ரிஷப வாகன உலா, 4ந்தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
5ந்தேதி அதிகாலை அம்மன் திருத்தேருக்கு எழு ந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று பிற்பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து 6, 7-ந் தேதி களில் திருத்தேர் இழுக்க ப்பட்டு நிலை சென்றடை கிறது. 8 ந்தேதி தேர் திருவிழா நிறைவுபெறு கிறது. 9 ந்தேதி காலை 7 மணி அளவில் தரிசனம் நிகழ்ச்சியும் மாலை 3 மணிக்கு அம்பாள் சப்பர த்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் இரவு 8மணிக்கு மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- ஒயிலாட்டம் , வள்ளி கும்மியாட்டம் , கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது.
பெருமாநல்லூர் :
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் மற்றும் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு காப்பு கட்டு பூசாரிகள் கை குண்டம் வாரி இறங்குதல், வீரமக்கள் குண்டம் இறங்குதல் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி வழிபட்டனர்.
காைல 8மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அபிஷேக ஆராதனை, அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு, மண்டபக்கட்டளை நடந்தது. மதியம் 2மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டப கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்தல், தேங்காய் வழங்குதல் நடந்தது. மதியம் 3-30மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 7மணிக்கு அம்மன் கலைக்குழு மற்றும் ஸ்ரீசக்தி பண்பாட்டு மையம் வழங்கும் ஒயிலாட்டம் , வள்ளி கும்மியாட்டம் , 9-30 மணிக்கு கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று 5-ந் தேதி காலை 7-30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. மாலை 7மணிக்கு அம்மன் புறப்பாடு , மண்டப கட்டளை நடக்கிறது. நாளை 6-ந்தேதி காலை 7-30மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு, மாலை 7மணிக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. 7-ந் தேதி காலை 7-30மணிக்கு அம்மன் புலி வாகன திருவீதி உலா, மாலை 7 மணிக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. 8-ந் தேதி காலை 11 மணிக்கு மகா தரிசனம், அம்மன் புறப்பாடு, கொடிஇறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்படுவது சிறப்பம்சமாகும்
- 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் அமைந்துள்ளது முத்துக்குமாரசாமி மலை கோவில். இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இந்த கோவிலில் மூலவராக முத்துக்குமாரசாமி சன்னதியும் மகிமாலீஸ்வரர், மரகதாம்பிகை, பாலகணபதி, நவகிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. மாதப்பூர் முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்ப டுவது சிறப்பம்சமாகும். எனவே பழநி மலைக்குச் செல்ல முடியாதவர்கள் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்குச் சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.இந்நிலையில், முத்துக்கு மாரசாமி மலைக்கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு, பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர் பவனியில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்த ர்களுக்கு காட்சியளித்தார்.தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரானது கிரிவலப்பாதை வழியே சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது. பங்குனி உத்திரவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- கடந்த 29-ந் தேதி கொடியேற்றம், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
- பக்தர்களின் வெள்ளத்தில் தேர்கள் ஆடி அசைந்து சென்று பின்னர் நிலையடைந்தது.
காங்கயம் :
காங்கயம்அருகே மடவளாகத்தில் ஆருத்ர கபாலீ ஸ்வரர்மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்த கோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய 4 குலத்தவர்களின் குல தெய்வங்களாக அரு ள்பாலித்து வருகின்றன.
சமீப காலமாக இக்கோ வில்கள் குலத்தவர், உபய தாரர், நன்கொடையாள ர்கள் மூலம் புனர மைப்பு செய்யப்பட்டு கடந்த 29-ந்தேதி பஞ்சமூ ர்த்திகள் பங்குனி உத்திர 7-ம் ஆண்டு தேர் திருவிழா கிராமசாந்தி , கொடியேற்றம், சுவாமி களின் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொட ங்கியது. தொடர்ந்து யாக பூஜை, தீபாரா தனைமற்றும் 4 குலத்தவ ர்களின் மண்டப கட்டளை, பஞ்சமூர்த்தி களின் திருவீதி உலா ,திருக்கல்யாண உற்சவம், மற்றும் காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் ஒயிலாட்டம், பெருசலங்கையாட்டம், மகா அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பஞ்சமூ ர்த்திகள் எனும்5 தேர்களும் வண்ண மலர்அலங்கா ரத்துடன் வடம் பிடித்து இழுக்க ப்பட்டது.பல்லாயிர க்கணக்கான பக்தர்கள், குலத்தவர்கள், உபயதா ரர்கள்,நன்கொடையா ளர்கள் உள்பட அனைவரது கரகோஷத்துடன் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோவில்களை சுற்றி சுமார் ¾ கி.மீ., தூரத்திற்கு பக்தர்களின் வெள்ளத்தில் தேர்கள் ஆடி அசைந்து சென்று பின்னர் நிலையடைந்தது.விழாவில்\எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சின்னராஜ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கல்யாண சுந்தரம், திருப்பூர் மாநகரா ட்சியின் 4-வது மண்டல தலைவரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலா ளருமான இல.பத்மநாபன், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்குமார், நகராட்சி தலைவர் சூரியபி ரகாஷ், மாவட்ட பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ,திருப்பூர்மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் குமரது ரை, காங்கயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், பாப்பினி பஞ்சாயத்து தலைவர் கலாவதி பழனிசாமி, யூனியன் கவுன்சிலர்களான மைனர் பழனிசாமி, சுதா ஈஸ்வரமூர்த்தி, காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் லதா மகேஷ்குமார், ராம்ராஜ் காட்டன் நிறுவ னர் நாகராஜன், காங்கயம் ஆடிட்டர் சண்மு கசுந்தரம், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிைமயாளர்கள் சங்க செயலாளர்தாராபுரம் மணி, திருப்பூர் மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் அப்பு சிவசுப்பி ரமணியன், ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி தாளாளர் பழனிசாமி மற்றும் பாப்பினி, வீரசோ ழபுரம் ஆகிய கிராம பொதுமக்கள் உள்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடுவர் ராஜா தலைைமயில் சிறப்பு நகைச்சுவை பட்டிம ன்றமும் நடந்தது.மேலும்பா ரிவேட்டை, தெப்ப உற்சவ வீதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 7-ந்தேதி கொடி இறக்குதல், தீர்த்தவாரி, மஞ்சள் நீராடுதல், பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுடன் விழா முடிவடைந்த து. விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், மருத்து வஉத விக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக தலைவர் தங்கமுத்து தலைமையில் தலைவர் வரதராஜ், செயலாளர் ராமசாமி, பொருளாளர் அர்ஜூனன் முன்னிலையில் கோவிலின் கொங்கு வோளாளர் , தோடை, கண்ணந்தை, காடை, கீரை குலத்தோர் சங்கத்தினரும், பாப்பினி ,வீரசோழபுரம் கிராம பொதுமக்களும் மிக சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக அனைவரையும் பாப்பினி அம்மன் கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம், அன்ன தான கமிட்டி பால சுப்பிர மணியம் மற்றும் வரவேற்பு குழுவினர் வரவேற்றனர்.
- மாரியம்மன் கோவிலில், 500 ஆண்டு பழமையான தேர் இருந்தது.
- தேருக்கு முன் பல்வேறு இசைக்கருவிகள், வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் பாரம்பரிய நடனம் என களைகட்டியது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பழமை யான மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவில் கடந்த மாதம், 28-ந்தேதி தேர்த்திருவிழா துவங்கியது.நேற்று முன்தினம், மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 6:15 மணிக்கு, சூலத்தேவருடன் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். மாரியம்மன் கோவிலில், 500 ஆண்டு பழமையான தேர் இருந்தது. நடப்பாண்டு, பழைய தேருக்கு பதிலாக, புதிதாக எண் கோணவடிவத்தில், அற்புத வேலைப்பாடுகளுடன், அகலம் மற்றும் உயரம் அதிகம் கொண்ட பிரமாண்ட தேர் வடிவமைக்கப்பட்டு, புதிய தேரில் சுவாமி திருத்தேரோட்டம் நடந்தது. மாலை, 4:10மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது. பக்தர்களின் 'ஓம் சக்தி பராசக்தி' கோஷம் முழங்க அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் நீல பட்டு உடுத்தி ரத்தினக்கல் ஆபரண ங்களுடன் சூலத்தேவருடன் எழுந்தருளிய அம்மன் தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேருக்கு முன் பல்வேறு இசைக்க ருவிகள், வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் பாரம்பரிய நடனம் என களைகட்டியது.
தேரை முன்னே பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பின்னால் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட 'குஷ்மா' யானை, தேரை நகர்த்தி பக்தர்களுக்கு உதவியது. தேரோட்டத்தை முன்னிட்டு, நீர் மோர் பந்தல், அன்னதானம், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் என நகரம் விழாக்கோலமாக காணப்பட்டது. தேரோட்ட த்தை பொள்ளாச்சி பாராளு மன்ற தொகுதி சண்முக சுந்தரம் எம்.பி., மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் மற்றும் யு.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி என்ற சுப்பிரமணியம், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர்.அட்சயா திருமுருக தினேஷ் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி, பன்னீர்செல்வம்,பிரேம்குமார்,அன்பரசன் பாலகிருஷ்ணன், கனகராஜன், ரவிக்குமார், மதுரை கிருஷ்ணன், பழனிச்சாமி, ஹரி கிருஷ்ணன், ராமராஜ் ராமானுஜதாசன் அறங்காவலர் தலைவர், செவ்வேள், சிவக்குமார், நியூ மேன், பினில், ராம்குமார், அருண்குமாரி வடுகநாதன், ரமேஷ், சதீஷ்குமார், ஜெயக்கனி, மஞ்சுளா தேவி, செல்வநாயகம், ஏவிஎம் தங்கமணி, கிருஷ்ணன் கலையரசன், கஜேந்திர பட்டாச்சாரியார் ,கண்ணன் திருச்சி ஸ்டீல், ஜஸ்டின் ராஜா, சதீஷ், கொக்கரக்கோ குழுமம், நூர் முகமது, கன்னியப்பன், கோபாலகிருஷ்ணன் பார்த்தசாரதி, ஆரியபவன் குடும்பத்தார்கள், திருமூர்த்தி ,ஜே வி ஏஜென்சீஸ்,முபாரக் அலி, குருவாயூரப்பன் பில்டர்ஸ், சலீம், ஹர்ஷா டைல்ஸ் சந்தான விக்ரம், ரஞ்சித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- வருகிற 1-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கண்ணபுரம் மாாியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து 26-ந் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி மிகப்பெரிய கால்நடை சந்தை நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
நேற்று காலை 7.30 மணிக்கு தோ் முகூர்த்தம் நடைபெறுகிறது. இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கிராமசாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு விநாயகா் வழிபாடு நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது.அதைத் தொடா்ந்து வருகிற 4-ந் தேதி காலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது.
5-ந் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமி திருத்தோில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா் மாலை 4.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., கலெக்டா் வினீத், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், திருப்பூா் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொள்ள உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலா் ராமநாதன், உதவி ஆணையா் அன்னக்கொடி ஆகியோா் செய்து வருகின்றனா்.
- வைகாசி விசாகத்தே ர்த்திருவிழா, ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்க உள்ளது.
- தேர் அலங்கார துணிகளை மாற்றுவது என பல்வேறு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தே ர்த்திருவிழா, ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்க உள்ளது. அதற்காக தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன், தேர்த்திருவிழா துவங்குகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மையப்ப ரும், ஸ்ரீவீரராகவப் பெருமாளும், தேர்வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து ஜூன் 2-ந் தேதி ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமிகோவில் தேரோட்டமும், 3-ந் தேதி ஸ்ரீவீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடக்க உள்ளது.
தேர்த்திருவிழா ஏற்பாடுகள்குறித்த ஆலோசனைகூட்டம் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்தது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.,செல்வராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் சரவணபவன், விழாஏற்பாடுகள் குறித்து விவரித்தார். பல்வேறு அமைப்பினரும், தேர்த்திருவிழா ஏற்பாடு குறித்துபேசினர்.கலை நிகழ்ச்சிஏற்பாடு, தேர்களுக்குபுதிதாக வடக்கயிறு வாங்குவது, தேர் அலங்கார துணிகளை மாற்றுவது என பல்வேறு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- தேர்த்திருவிழா ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
- செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு பூஜையும், கிராம சாந்தியும் நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் விஸ்வேஸ்வர சாமி, வீரராகவப் பெருமாள் கோவில்களின் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருடந்தோறும் கோலாகமாக நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த வருடம் தேர்த்திருவிழா ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்காக கோவிலில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. 2 தேர்களிலும் சாரம் கட்டப்பட்டுள்ளது. இன்று காலை மகுடபூஜையுடன் தேரை அலங்கரிக்கும் பணியும், செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு பூஜையும், கிராம சாந்தியும் நடக்கிறது. இந்த வருடம் தேர்களுக்கு புதிய வடக்கயிறுகளும், துணிகளும் அமைக்கப்படுகிறது. 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது.
அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மண்டப கட்டளை பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் இருவேளையும் (ரிஷபம், பூதம், ஆதிசேஷன், கற்ப விருட்சம், காமதேனு, அதிகாரநந்தி, குதிரை, சிம்மம், யானை, கைலாசம், கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில்) திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தோ்த்திருவிழாவையொட்டி தினமும் கலைநிகழ்ச்சிகளும், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தோ்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.