என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shewag"

    • முதலில் ஆடிய மேகாலயா 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 468 ரன்களைக் குவித்துள்ளது.

    ஷில்லாங்:

    இந்தியாவில் விளையாடப்படும் உள்நாட்டு போட்டிகளில் ஒன்று கூச்பெஹார் டிராபி. இது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 4 நாள் கொண்ட போட்டி ஆகும்.

    இதில் அருணாசல பிரதேசத்தின் ஷில்லாங் நகரில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் டெல்லி, மேகாலயா அணிகள் மோதின.

    முதலில் ஆடிய மேகாலயா அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, டெல்லி அணி முதல் இன்னிங்சை ஆடியது. அர்னவ் புக்கா, ஆர்யவீர் ஜோடி அதிரடியாக ஆடியது. சதமடித்து அசத்திய புக்கா 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுபுறம் சிறப்பாக ஆடிய ஆர்யவீர் இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு தன்யா நக்ரா நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் குவித்துள்ளது. ஆர்யவீர் 200 ரன்னுடனும், தன்யா நக்ரா 98 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    ஆர்யவீர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சேவாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அமைதியாக, கட்டுக்கோப்பாக இருக்கிறார் என சேவாக் கூறியுள்ளார்.
    மும்பை:

    15-வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. 

    இந்த ஆண்டு தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்  கடைசி 2 இடங்களை பெற்று வெளியேறின. இளம் கேப்டன்களை கொண்ட குஜராத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, பெங்களூர் அணி  குவாலிஃபயருக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்த்திக் பாண்டியாதான் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்  தெரிவித்துள்ளார்.

    குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது ஹர்த்திக் பாண்டியா தான். அவருக்கு சிறப்பான தலைமை பண்பு இருக்கும்  என நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று  நினைத்தேன். ஆனால் அவர் அமைதியாக, கட்டுக்கோப்பாக இருக்கிறார். 

    எப்போது ஒரு கேப்டனின் தலைமை பண்பு நமக்கு பிடிக்கும்? இக்கட்டான சூழலில் அவர் எடுக்கும் முடிவுகளில் தான்.  குறிப்பாக  உங்கள் அணி பந்துவீசி கொண்டிருக்கும்போது நாம் ஃபீல்டிங்கையும், பந்துவீச்சையும் எதிரணிக்கு தகுந்ததாற்போல் மாற்ற வேண்டும். 

    அப்போது தான் சிறந்த பலன் கிடைக்கும். கடும் அழுத்தமான நேரங்களில் கூட அவர் அமைதியாக இருக்கிறார். இதுதான் அவருடைய கேப்டன்சியில் எனக்கு பிடித்தது.

    இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.
    ×