என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group-4 exam"

    • கடந்த 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவை அறிவித்தது.
    • குரூப்-4 பணியிடங்களுக்கு 2022 ஜூலை மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது.

    சென்னை :

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 10 ஆயிரத்து 117 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது தாமதமாகி 8 மாதங்களுக்கு பிறகு, கடந்த 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. முடிவை அறிவித்தது.

    18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதிய இந்த தேர்வு முடிவில், தட்டச்சர் பணியிடங்களுக்கு வெளியான முடிவில், குளறுபடி இருந்ததாக தேர்வர்கள் புகார்கள் தெரிவித்தனர். அதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'அதுபோல் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தட்டச்சர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு எந்த அடிப்படையில் வெளியிடப்படுகின்றன என்பது குறித்த விவரங்களையும் தெரிவித்தனர். இந்த குளறுபடி குறித்த சர்ச்சை புகாருக்கு பதில் கிடைப்பதற்குள், தென் மாவட்டத்தில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த குரூப்-4 தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக ஒரு தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடவில்லை என்றும், அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. கூறியபடி தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 மதிப்பெண் பெறாத தேர்வர்களுடைய தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. அந்தவகையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தேர்வு எழுதிய பலர் ஏற்கனவே பலமுறை குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் என்பதால், அவர்கள் எளிதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்ற வகையில், டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த தகவலும் தேர்வர்களால் ஏற்றுக்கொள்வதாக இல்லாமல் போனது.

    இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 1,089 நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவிலும் முறைகேடு நடந்திருப்பதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின.

    அதாவது தேர்வு எழுதியவர்களில், காரைக்குடி தேர்வு மையத்தில் மட்டும் எழுதிய சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு இதேபோல் கீழக்கரை, ராமநாதபுரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றது விஸ்வரூபம் ஆன நிலையில், தற்போது அரங்கேறி இருப்பதாக கூறப்படும் இந்த முறைகேடும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுவும் இந்த முறைகேடு கருவூல அலுவலர்களின் உதவியுடன் நடந்ததாக ஒரு குற்றச்சாட்டும் பரவலாக எழுந்து வருகிறது.

    இவ்வாறாக குரூப்-4 தேர்வு முடிவு வெளியானது முதல் தொடர்ந்து குளறுபடி, நில அளவையர், வரைவாளர் தேர்வு முடிவுகள் முறைகேடு என சர்ச்சை புகார்கள் நீடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் சட்டசபையிலும் நேற்று எதிரொலித்திருக்கிறது.

    எனவே டி.என்.பி.எஸ்.சி. இந்த குரூப்-4 தேர்வு முடிவு குளறுபடி விவகாரம் மற்றும் நில அளவையர், வரைவாளர் பணியிடங்களில் வெளியாகிவரும் முறைகேடு குறித்த தகவல்களுக்கும் உரிய விளக்கத்தை வெளியிட்டு, குளறுபடி, முறைகேடு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தேர்வர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பலத்த குரலாக ஒலித்து வருகிறது.

    • சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது.
    • 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான, போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 38 மையங்களை உள்ளடக்கி 7 ஆயிரத்து 247 தேர்வு அறைகளில் நடைபெறுகிறது. தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும்.

    தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 276 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது.
    • எக்ஸ் சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை செயல் பணியாளர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், வனக்காப்பாளர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-4 பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை, தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 தேர்வர்கள் எழுதினர்.

    இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில், குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதற்கான, அறிவிப்பை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, வெளியிட்டுள்ளது.

    250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தொடங்கப்படுகிறது. தேர்வாணையம் அறிவித்த குரூப்- 4 தேர்வு வாயிலாக, வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இப்பணியிடங்களில் 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்படுகிறது.

    பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் பெயரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×