search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lion"

    • கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
    • பிரதமர் மோடி தன்னுடைய கேமராவில் சிங்கங்களை படம் பிடித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி கிர் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமையகமான சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக குஜராத் வந்தடைந்தார்.

    இந்நிலையில், உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கிர் தேசிய பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை பார்வையிட்ட பிரதமர், தன்னுடைய கேமராவில் சிங்கங்களை படம் பிடித்தார்.

    முன்னதாக பிரதமர் மோடி புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான சோம்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

    • குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன.
    • சிங்கம் சாலையை கடந்தபிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.

    குஜராத் மாவட்டம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாவ்நகர்-சோம்நாத் நெடுஞ்சாலையில் இன்று சிங்கம் சாலையை கடந்து சென்றதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சிங்கம் சாலையை கம்பீரமாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. சிங்கம் சாலையை கடந்தபிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.

    குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன. அவ்வப்போது வனப்பகுதியை தாண்டும் சிங்கங்கள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

    விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கிங்க்ஸ்டன்:

    கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் 

    வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை, பராமரிப்பாளர் தொட முயன்றார். சிங்கம் அவரைப்பார்த்து உருமியப்படி இருந்தது. 

    இருப்பினும் அவர் தொடர்ந்து சிங்கத்தை தொட்டு விளையாடியபடி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது விரலை கடித்து 

    குதறியது. 15 பேர் இந்த சம்பவத்தை நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தால் பராமரிப்பாளரின் விரல் முழுவதும் 

    துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பராமரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    ×