என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னலாடை நிறுவனங்கள்"

    • பருத்தி பஞ்சு விலை ஒரு கேண்டி 65 ஆயிரம் ரூபாயாக இருந்தது. மாதக்கடைசியில், 70 ஆயிரம் ரூபாயை கடந்தது.
    • வார்ப்' நூல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வடமாநில விவசாயிகள் பருத்திக்கு கிலோ 80 ரூபாய் கிடைத்தால் மட்டுமே விற்கின்றனர்.

    திருப்பூர்:

    பருத்தி சீசன் துவங்கியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பருத்தி வரத்து துவங்கியது. துவக்கத்தில் பருத்தி பஞ்சு விலை ஒரு கேண்டி 65 ஆயிரம் ரூபாயாக இருந்தது. மாதக்கடைசியில், 70 ஆயிரம் ரூபாயை கடந்தது.

    வரத்து அதிகரித்த பின்னரும் பஞ்சு விலை சீரற்ற நிலையில் இருக்கின்றன. இதனால் நூற்பாலைகள் பஞ்சு கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றன. கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பஞ்சு விலை உயர்ந்ததால், இந்தாண்டும் விலை உயருமோ என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஆர்டர் விசாரணையை முடித்துள்ளன. பல்வேறு நாடுகளின் வர்த்தகர்களுடன் தொடர்ந்து விசாரணை நடத்தியும் வருகின்றனர். விலை குறைவாக இருக்கும் போதே, நூல் கொள்முதல் ஆர்டர் கொடுக்கவும் துவங்கிவிட்டன.

    இதுகுறித்து நூற்பாலை தரப்பினர் கூறியதாவது:-

    நூல் வர்த்தக விசாரணை, கடந்த அக்டோபர் மாதத்தை காட்டிலும், இம்மாதம் நன்றாக இருக்கிறது. விசாரணை மட்டுமல்லாது, கொள்முதல் ஆர்டர்களும் கிடைக்கின்றன. பஞ்சு விலை நிலையில்லாமல் இருப்பதால், இனியும் நூல் விலை குறைய வாய்ப்பில்லை.

    'வார்ப்' நூல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வடமாநில விவசாயிகள் பருத்திக்கு கிலோ 80 ரூபாய் கிடைத்தால் மட்டுமே விற்கின்றனர். இதனால் பஞ்சு விலை இனியும் குறையாது. பருத்தி விற்பனை வேகமெடுக்காமல் இருப்பதால், 'ஜின்னிங்' பேக்டரிகளில் இருந்து பஞ்சு வரத்தும் வேகமெடுக்கவில்லை.

    ஒரு கிலோ பருத்தியில் 33 சதவீதம் மட்டுமே பஞ்சு கிடைக்கும். மீதி பருத்திக்கொட்டையுடன் கழிக்கப்படும். இதனால் ஜின்னிங் பாக்டரியில் பஞ்சு உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக ஈடுபாடு காட்டாமல் இருந்த பின்னலாடை நிறுவனங்கள் பஞ்சு கொள்முதலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், பஞ்சு விலை கடந்த சில நாட்களாக நிலையில்லாமல் ஏற்றத்தாழ்வாக இருக்கிறது. காரணமே இல்லாமல் பஞ்சு விலை ஒரு கேண்டி 72 ஆயிரம் ரூபாயை தாண்டிவிடுகிறது. கடந்த ஆண்டில் உருவான குழப்பம் மீண்டும் வந்துவிடக்கூடாது. மத்திய அரசும், இந்திய பருத்தி கழகமும் பருத்தி சீசன் துவங்கிய பின் 6 மாதங்கள் வரை பஞ்சு விலை சீராக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் வெகுவாக குறையும்.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் வளர்ச்சியால் திருப்பூர், வேலைவாய்ப்பு மிகுந்த நகராக மாறியுள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த9லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். ஆனாலும் தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது.

    திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் பொதிகை மனிதவள அமைப்பு, பின்னலாடை நிறுவனங்களின் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினையை போக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு நடத்திய கள ஆய்வில், பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற ஏராளமான தொழிலாளர் உள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் திருப்பூருக்கு வர இயலாத நிலையில் உள்ளனர் என்பது தெரிந்தது.

    இதனால் தொழிலாளர் மிகுந்த மாவட்டங்களில் உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி திருப்பூருக்கு ஆடை தைத்து கொடுக்க மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 8 ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதிகை அமைப்பு நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் கூறியதாவது:-

    ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் பொதிகை மனிதவள அமைப்பின் 6ஆ ண்டுகால தொடர் முயற்சியாக, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.

    மதுரை - தத்தனேரி, மேலுார், உசிலம்பட்டி, திருச்சி - மணப்பாறை, விருதுநகர் - ஆமத்தூர், ராஜபாளையம், சிவகங்கை - மானாமதுரை என மொத்தம்8தையல் 'ஜாப்ஒர்க்' நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.

    இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பயிற்றுனர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெளிமாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு திருப்பூர் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்டர் வழங்கும். இதனால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் வெகுவாக குறையும். தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைகளும் நீங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×