என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக முதல்வர் ஸ்டாலின்"
- தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது
- சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தீல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இது நாளை நிறைவடையும்.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.
தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாட்டில் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.
"வணக்கம்" என தமிழில் தொடங்கி தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:
10 ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்த பொருளாதாரத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்தியாவின் 100-வது சுதந்திர தின விழாவில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழும். காஞ்சி பட்டு போல் பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயித்து பயணிக்கும் தமிழகத்திற்கு வாழ்த்து. ஆதித்யா-எல்1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர். நாடு வலிமையடைய அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்த நாடாக நமது நாட்டை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தவும் நாம் செயல்படுவோம்.
இவ்வாறு அமைச்சர் பியூஷ் கூறினார்.
- 40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
- ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விருதுநகர் சாத்தூர் சாலையில் உள்ள பட்டம்புதூரில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்த கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
மேலும் 16 ஆயிரத்து 852 பேருக்கு மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது, "விருதுநகருக்கு மருது சகோதரர்கள் போல் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ஆகியோர் உள்ளனர். நம் மாநிலத்திறஅகு தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு உயிரை நீத்தவர் சங்கரலிங்கனார். அண்ணாவை உருவாக்கியது காஞ்சி, கலைஞரை உருவாக்கியது திருவாரூர், காமராஜருக்கு விருதுநகர்."
"என் திருமணத்திற்கு பெருந்தலைவவர் காமராஜர் வந்ததை மறக்கவே முடியாது. காமராஜரின் இறுதிச் சடங்கை ஒரு மகன் போல் இருந்து நடத்தியவர் கலைஞர் கருணாநிதி. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி."
"விருதுநகரில் நான் முதல்வன் திட்டத்தால் 92 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களால் விருதுநகரில் அதிக அளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெற்றுள்ளது," என்று பேசினார்.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
- வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும் ஸ்டாலின் வாழ்த்து.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்!
அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் அவர்கள் வென்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.