என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவாஜி கணேசன்"

    • அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?
    • வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடிகர் பிரபு தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" பிரபு தரப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு, "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.

    இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தினர்.

    • காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம்.
    • பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து அமைச்சர்கள் மு.பெரிய சாமிநாதன், மா.சுப்பிர மணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மயிலை த.வேலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அப்படத்தின் பேனரை ஒருவர் பிடித்திருந்தார். அப்போது முன்னால் வர முண்டியடித்த ஒருவரை சிவாஜியின் மகன் ராம்குமார் சரமாரியாக தாக்கி உள்ளே தள்ளினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது வழி விடாததால் ஆத்திரத்தில் அருகில் இருந்தவர்களை சிவாஜியின் மகன் ராம் குமார் கோபத்துடன் தள்ளிவிட்டு சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×