என் மலர்
நீங்கள் தேடியது "டொனால்ட் டிரம்ப்"
- ஜோ பைடன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை குடியரசு கட்சியினர் முன்வைத்தனர்
- விசாரணைக்கு பிறகு செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்
அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரம் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் மாறி மாறி வைக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது சுமார் ரூ.11 கோடி தொகை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜோ பைடன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அது குறித்து அமெரிக்க அதிபரிடம் பாராளுமன்ற விசாரணையை தொடங்க பாராளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த வாக்கெடுப்பில் பைடன் மீதான புகார் குறித்து விசாரணை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் போது துணை அதிபராக இருந்த பைடன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் லாபமடைந்ததாகவும், அக்காலகட்டத்தில் உக்ரைன் மற்றும் சீனாவில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த ஹன்டர் பைடன் தந்தையின் பதவியை ஆதாயம் பெறும் நோக்கில் பயன்படுத்தியதாகவும், அதை பைடன் தடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை அதிபர் பைடன் மறுத்துள்ளார்.
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 3 கமிட்டி உருவாக்கப்பட்டு இது குறித்து முன்னரே விசாரணை நடத்த தொடங்கியிருந்தாலும், தற்போதைய வாக்கெடுப்பு வெற்றியினால் அதிகாரபூர்வ விசாரணை நடைபெற வெள்ளை மாளிகை ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விசாரணையை முன்னெடுத்துள்ள குடியரசு கட்சி பிரதிநிதிகள் கேட்கும் ஆவணங்களையும், தரவுகளையும் அது தந்தாக வேண்டும்.
விசாரணைக்கு பிறகு அடுத்த கட்டமாக பாராளுமன்ற மேல் சபையான செனட் சபை உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதிலும் பைடனுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும்.
அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த விசாரணையின் நிகழ்வுகளை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.
- மீண்டும் அதிபராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்
- பல கண்டங்களிலிருந்தும் அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிகிறார்கள் என்றார் டிரம்ப்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு "ரத்தம்" விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை "விஷம்" ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்."
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை "அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- விவேக்கின் நிகர சொத்து மதிப்பு $630 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார் விவேக்
அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி நாடெங்கிலும் பிரசாரம் செய்து வருகிறார்.
சில மாநிலங்களில் டிரம்ப் மீது பதிவாகி உள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் பயணம் அமையும் என்பதால், குடியரசு கட்சியில் டிரம்பிற்கு மாற்றாக உள்ள வேட்பாளர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓஹியோ (Ohio) மாநில தொழிலதிபர் விவேக் ராமசாமி (38) தனக்கு ஆதரவு தேடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் (Connecticut) மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற யேல் (Yale) சட்ட கல்லூரியில் பட்டம் பெற்ற விவேக்கின் நிகர சொத்து மதிப்பு $630 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
மிக கடுமையாக பிரசாரம் செய்து, அமெரிக்கா சந்திக்கும் சவால்கள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ள தன் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆழமாக விவரித்து நாடெங்கிலும் விவேக் பயணம் செய்து வருகிறார்.
சனிக்கிழமையுடன் நிறைவடைந்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பிரசார கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார் விவேக் ராம்சாமி. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் மற்ற எந்த வேட்பாளர்களையும் விட விவேக்கின் பிரசார நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் 38 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் விவேக்.
ஓய்வின்றி உழைக்கும் அவருக்கு சக்தியாக விளங்குவது எது என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விவேக், "நாட்டை குறித்து அக்கறையுடன் என் பிரசாரங்களுக்கு வந்து என் பேச்சை கேட்க காத்திருக்கும் மக்களின் சக்திதான் எனக்கு ஊக்க சக்தி.
மக்களிடமிருந்து விலகி செல்லாமல் பிரசாரம் செய்வதுதான் எந்த மக்களுக்கு பிரதிநிதியாக விரும்புகிறோமோ அவர்களுக்கு பொறுப்பாக இருப்பதை உணர்த்தும் வழி. தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் உணர்வை புரிந்து கொள்ள முடியும் என நான் நம்பவில்லை.
அதிர்ஷ்டம் எனும் சொல்லிற்கான எழுத்துக்கள், "உ, ழை, ப், பு" என என் பெற்றோர் கூறிய அறிவுரைதான் எனக்கு கல்வியிலும், பணியிலும், தொழிலிலும், அரசியலிலும் பயனளித்து வருகிறது. " என விவேக் தெரிவித்தார்.
விவேக்கின் நீண்ட நாள் நண்பர்கள், நாளில் 16 மணி நேரம் வரை உழைக்க தயங்காத விவேக், ஓய்வெடுப்பதற்காக தனியே நேரம் ஒதுக்கியதே இல்லை என அவரது உழைக்கும் திறன் குறித்து தெரிவிக்கின்றனர்.
ஓடுதல், டென்னிஸ், புஷ்-அப் (push-up) ஆகியவை விவேக் தவறாமல் செய்து வரும் உடற்பயிற்சிகள்.
- போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்தனர்
- குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என்றார் விவேக்
அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாத காலகட்டத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trmup) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
கடந்த 2020ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும் நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க சட்டத்தின்படி தேசத்துரோகமாக கருதப்படும் இந்த செயலுக்கு தூண்டுதலாக டிரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ (Colorado) மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து கொலராடோ நீதிமன்றம், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்பிற்கு தடை விதித்துள்ளது. அந்நாட்டு தேர்தல் முறைப்படி குடியரசு கட்சியின் "பிரைமரி" (primary) தேர்தல் எனப்படும் முதல்நிலை வாக்குப்பதிவில் டிரம்பின் பெயர் வாக்குச்சீட்டில் இருக்க கூடாது என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் பிற வேட்பாளர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, "இதை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என எக்ஸ் சமூகவலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு புறமிருக்க, தேர்தலில் கொலராடோ ஜனநாயக கட்சிக்கே அதிக சாதகமானது என்பதால் டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பும் மேல்முறையீடும் பெரிதாக தேர்தல் முடிவில் மாறுதலை ஏற்படுத்தாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
- வயதானதால் பைடனால் வேகமாக செயல்பட முடியவில்லை என பத்திரிகைகள் விமர்சித்தன
- டிரம்ப் வென்றால் ஜனநாயகம் தோற்று விடும் என்றார் பைடன்
இவ்வருடம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களம் இறங்கி உள்ளனர்.
தற்போது 81 வயதாவதால் ஜோ பைடனால் பிரசாரங்களை வேகமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை என்றும் டிரம்பை காட்டிலும் செயலாற்றுவதில் பைடன் பின் தங்கி இருப்பதாகவும் சில பத்திரிகைகள் விமர்சித்து வந்தன.
இதை தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் பைடன் இறங்கி உள்ளார்.
சுமார் 250 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன், பென்சில்வேனியா மாநிலத்தில் வேலி ஃபோர்ஜ் (Valley Forge) எனும் பகுதியில் அமெரிக்க படைகளை ஒருங்கிணைத்த இடத்திலேயே தனது முதல் உரையை ஜோ பைடன் தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். அவர் நமது ஜனநாயகத்தை தியாகம் செய்ய துணிந்து விட்டார்.
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழு பொறுப்பு.
தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவு படுத்துவது போல் உள்ளது.
ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வட கொரிய அதிபருடனும், ரஷிய அதிபருடனும் டிரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.
டிரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால் அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டி காப்பேன் என உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி விட்ட நிலையில், வரும் வாரங்களில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்று" முழக்கத்தை டிரம்ப் முன்னெடுத்துள்ளார்
- "விவேக்கிற்கு அளிக்கும் வாக்கு எதிரணிக்கு அளிக்கும் வாக்கு" என்றார் டிரம்ப்
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக போட்டியிடுகிறார்.
2016 தேர்தலில் "மாகா" எனப்படும் (Make America Great Again) "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்று" எனும் முழக்கத்தை முன்னெடுத்து பெரும் வெற்றி கண்ட டிரம்ப், 2026 தேர்தலிலும் அதையே தன் பிரசாரங்களில் முன் வைக்கிறார்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், அவர் அதிபராவது கேள்விக்குறியாக உள்ளது.
குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொரு வேட்பாளரான தொழிலதிபர் விவேக் ராமசாமி, தனக்கு தீவிரமாக ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகிறார்.
தனது பிரசாரங்களில் விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பை புகழ்வதுடன் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை விமர்சித்து "டிரம்ப் குற்றமற்றவர்" என அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், இன்று டொனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ சமூக வலைதளமான "ட்ரூத் சோஷியல்" (Truth Social) கணக்கில் விவேக் ராமசாமியை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அதில், "விவேக் என் ஆதரவாளரை போல் பிரசாரத்தை தொடங்கினார். ஆனால், தற்போது பிரசார யுக்திகளில் ஆதரவை தந்திரமாக மறைத்து விடுகிறார். நீங்கள் விவேக்கிற்கு அளிக்கும் வாக்கு, எதிரணிக்கு அளிக்கும் வாக்காகும். அவர் பேச்சில் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். "மாகா" கனவை நனவாக்க விவேக் ஏற்றவர் அல்ல" என பதிவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் விவேக் ராமசாமி எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
நான் டிரம்பின் பதிவை கண்டேன். அவரது தேர்தல் பிரசார ஆலோசகர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை அவருக்கு அளித்துள்ளனர். 21-வது நூற்றாண்டின் சிறந்த அதிபர் டிரம்ப்தான். என்னை அவர் விமர்சித்ததற்காக நான் அவரை தவறாக விமர்சிக்க போவதில்லை. ஆனால், தற்போது நாட்டில் உள்ள சூழல், அவரை அதிபராக அனுமதிக்காது என என்னை போல் பலர் நம் நாட்டில் நம்புகின்றனர். நாட்டிற்காகவும், டிரம்பிற்காகவும் நான் கவலைப்படுகிறேன். நான் அவர் ஆதரவாளன்.
இவ்வாறு விவேக் பதிவிட்டுள்ளார்.
- அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.
- அயோவா மாகாணத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னாள் அதிபர் டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது.
அந்த மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. 9 மாவட்டங்களின் ஆரம்ப கட்ட முடிவுகளில் டிரம்ப் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் அயோவா மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ளார்.
- அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
- அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னாள் அதிபர் டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது. நேற்று நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், இந்த அறிவிப்பை விவேக் ராமசாமி வெளியிட்டுள்ளார். அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.
- நான்சி பெலோசி பெயருக்கு பதில் நிக்கி ஹாலே பெயரை டிரம்ப் பயன்படுத்தினார்
- அதிபர் பதவி கடும் மன அழுத்தங்களை தர கூடியது என்றார் ஹாலே
இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களம் இறங்கி வாக்குகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்ப் மீது சில மாநிலங்களில் வழக்கு விசாரணை நடைபெறுவதால், அவர் அதிபர் ஆவதில் சிக்கல்கள் எழலாம் என நம்பப்படுகிறது.
எனவே, குடியரசு கட்சியின் மற்றொரு தலைவரும், முன்னாள் தென் கரோலினா கவர்னருமான நிக்கி ஹாலேயும் போட்டியில் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன், டொனால்ட் டிரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு பேரணியில் 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பேசினார்.
அப்போது பேசிய டிரம்ப், நிக்கி ஹாலேயின் பெயரை குறிப்பிட்டு பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பை நிக்கி சரிவர கையாளவில்லை என குற்றம் சாட்டினார்.
ஆனால், டிரம்ப் பேச முற்பட்டது அப்போதைய முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியை குறித்து என்பது பின்னர் தெளிவாகியது. பெயர்களை மாற்றி டிரம்ப் உரையாற்றியது விமர்சனத்திற்கு உள்ளானது.

நிக்கி ஹாலே தனது எக்ஸ் கணக்கில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
ஒரு பேரணியில், 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது நான் ஏன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர கவனிக்கவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டி பேசி உள்ளார்.
அப்போது நான் வாஷிங்டன் பகுதியிலேயே இல்லை.
டிரம்ப், நான்சி பெலோசியை குறிப்பிட நினைத்து என் பெயரை பயன்படுத்தி விட்டார் என பிறகு நான் அறிந்தேன்.
ஆனால், அந்த உரையில் "நிக்கி ஹாலே" என தெளிவாக பல முறை என் பெயரைத்தான் அவர் பயன்படுத்தினார்.
கடும் அழுத்தத்தை தர கூடிய அமெரிக்க அதிபர் பதவியில் அமர மிக அதிகமான மன உறுதி வேண்டும். அந்த மன நிலை இல்லாதவர்கள் அப்பதவிக்கு வர கூடாது.
இவ்வாறு நிக்கி பதிவிட்டுள்ளார்.
- டிரம்ப் மீது பல வழக்குகள் உள்ளதால் அவர் போட்டியிடுவதில் சிக்கல் வரலாம்
- டிரம்புடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்றார் ரான் டி சான்டிஸ்
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயாக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்குகளின் தீர்ப்புகளின் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது.
டொனால்ட் டிரம்பை தவிர தென் கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே (Nikki Haley) மற்றும் புளோரிடா கவர்னர் ரான் டி சான்டிஸ் (Ron DeSantis) ஆகியோர் குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க ஆதரவு சேகரித்து வருகின்றனர்.
பிரதிநிதித்துவ தேர்தல் முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், வேட்பாளர்கள் தங்கள் கட்சிக்குள்ளேயே முதலில் ஆதரவு இருப்பதை நிலைநாட்ட வேண்டும்.
இதுவரை டொனால்ட் டிரம்பிற்கு சிறப்பான ஆதரவு இருந்து வருகிறது.
ரான் டி சான்டிஸ் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து ரான் போட்டியிலிருந்து விலகினார்.
இது குறித்து பேசிய ரான், "போட்டியிலிருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவு கோரிய பிரசாரத்தையும் நிறுத்தி கொள்கிறேன். குடியரசு கட்சி வாக்காளர்கள் மீண்டும் டொனால்ட் டிரம்ப் அதிபராவதையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எனக்கும் டிரம்பிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய அதிபர் ஜோ பைடனை விட பன்மடங்கு திறமையும், தகுதியும் உள்ளவர். அவருக்கு என் ஆதரவை முழுமையாக அளிக்கிறேன்" என தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு கோரி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமஸ்வாமி, போட்டியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி டொனால்ட் டிரம்பிற்கு அக்கட்சியில் நிக்கி ஹாலே மட்டுமே போட்டியாளராக உள்ளார்.
- டிரம்ப், தனது பதவிக்காலத்தில் சீனாவிற்கு 25 சதவீத இறக்குமதி விதித்திருந்தார்
- என் பதவிக்காலத்தில் அவருடன் இணைந்து செயல்பட முடிந்தது என்றார் டிரம்ப்
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்பொதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.
நாட்டின் முன் நிற்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கு தாங்கள் பரிந்துரைக்கும் தீர்வுகள் குறித்து இருவரும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
2018ல், தனது பதவிக்காலத்தில் டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதியை விதித்தார்.
இதற்கு பதிலடியாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தார்.
உலக வர்த்தகத்தில் மிக பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவிய வரிவிதிப்பு போட்டியால் இரு நாட்டு உறவில் சிக்கல் நிலவியது.

இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தின் போது அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன வர்த்தகம் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது டிரம்ப் பதிலளித்ததாவது:
தேவைப்பட்டால், அமெரிக்காவிற்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எனக்கு பிடிக்கும். எனது பதவிக்காலத்தின் போது அவர் எனக்கு நல்ல நண்பராகத்தான் இருந்தார். அவருடன் என்னால் இணைந்து செயல்பட முடிந்தது.
ஆனால், சீனாவிற்கு எதிராக நான் எடுத்த சில முடிவுகளை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை.
3 வருடங்களுக்கு முன்பு வரை, அயல்நாட்டு தலைவர்கள், நம் நாட்டை மிகவும் மதிப்புடன் பார்த்தார்கள். ஆனால், இன்று (பைடன் ஆட்சிக்காலத்தில்) நமது நாட்டை ஒரு கேலிப்பொருளாக எண்ணுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனது பிரசாரங்களின் போது, தற்போது சீனாவிற்கு "அதிக முன்னுரிமை தரப்படும் நாடு" (most favored nation) எனும் அந்தஸ்து தரப்படுவதை, திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் நிக்கி பின்வாங்கவில்லை
- என்னுடன் நேரடியாக விவாதித்து முகத்திற்கு நேராக கேளுங்கள் என்றார் நிக்கி
2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
குடியரசு கட்சியிலேயே டிரம்பிற்கு மாற்றாக தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னராகவும், ஐ.நா. சபையின் முன்னாள் அமெரிக்க தூதராகவும் பணிபுரிந்த நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும், நிக்கி போட்டியிலிருந்து பின்வாங்கவில்லை.
தென் கரோலினாவில் இருவரும் தங்கள் பிரசாரத்தில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், தனது பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை விமர்சிக்கும் வகையில், "அவரது கணவருக்கு என்ன ஆனது? எங்கிருக்கிறார்? அவர் ஏன் நிக்கிக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு வரவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து நிக்கி தெரிவித்திருப்பதாவது:
தென் கரோலினா பிரசாரத்தில் டிரம்ப் எனது கணவரின் ராணுவ சேவையை கேலி செய்தார். என் கணவருக்காக நான் பெருமைப்படுகிறேன். ராணுவத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் அந்த தியாகம் புரியும்.
டொனால்ட் டிரம்ப் அவர்களே, மைக்கேல் (என் கணவர்) நாட்டிற்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியாது.
உங்களுக்கு என்னை பற்றி ஏதாவது கருத்து கூற வேண்டுமென்றால் என்னுடன் நேருக்கு நேராக விவாதத்திற்கு வாருங்கள். அங்கு என் முகத்திற்கு நேராக கேள்விகளை கேளுங்கள்.
போர்க்களத்தில் நாட்டிற்காக போராடுபவரை நீங்கள் கேலி செய்வீர்கள் என்றால் நீங்கள் – அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் அல்ல - அமெரிக்க ஓட்டுனர் உரிமம் பெற கூட தகுதியற்றவர்.
இவ்வாறு நிக்கி கூறினார்.