என் மலர்
நீங்கள் தேடியது "கிரிக்கெட்"
- இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பை என அழைக்கப்படுகிறது.
- இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போல இந்தியா-இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.
இந்த நிலையில் இந்த முடிவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக வந்துள்ள தகவல்கள் ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்தின் இந்த முடிவு பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த முடிவு இந்தியா-இங்கிலாந்து ஆகிய 2 கிரிக்கெட்டுக்கும் பட்டோடிகள் ஆற்றிய பங்களிப்பிற்கு முழுமையான பதில் உணர்த்திறன் இல்லாததைக் காட்டுகிறது. சமீபத்திய வீரர்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்குவதற்காக இங்கிலாந்து வாரியம் எந்த இந்திய வீரரையாவது அணுகினால் அவர்கள் அதை மரியாதையுடன் மறுக்க வேண்டும்.
இது நமது 2 முன்னாள் கேப்டன்களின் மரியாதைக்காக செய்யப்பட வேண்டிய ஒன்று. வேண்டுமானால் அந்தக் கோப்பையின் பெயரில் இங்கிலாந்து தங்கள் நாட்டின் ஒரு வீரர் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதை இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் பட்டோடி வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி20 தொடரின் 2-வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
- எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
இந்தியா வருகை தரும் இங்கிலாந்து அணியினர், வருகிற 22-ந் தேதி முதல் பிப்., 12-ந் தேதி வரை, 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.
டி20 தொடரின் 2-வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இப்போட்டியை நேரில் பார்ப்பதற்கு, புதுச்சேரி தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரைச் சேர்ந்த சக்தி என்பவர், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தார்.
மேலும் தனது நண்பர்கள் 3 பேருக்கு டிக்கெட் பதிவு செய்து அதற்கான தொகை 6,360 ரூபாய் செலுத்தினார். ஆனால் பதிவு செய்யப்பட் டிக்கெட் ஏதும் வரவில்லை.
இது தொடர்பாக சக்தி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், சைபர் கிரைம் மோசடி கும்பல் கிரிக்கெட் போட்டிக்கான போலியாக டிக்கெட் புக்கிங் இணையதள பக்கத்தை உருவாக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேப்பாக்கத்தில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கோலாகலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
- சேப்பாக்கம் மைதானத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டி நடக்கிறது.
சென்னை:
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (25-ந் தேதி) நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக் ஷர் படேல் ஆகியோர் நேர்த்தியாக பந்துவீசினார்கள். அபிஷேக் சர்மா அதிடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் கடந்த போட்டியை போலவே 3 சுழற்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து விமர்சனம் எழுந்தது. நாளைய போட்டியிலும் அவர் இடம்பெறுவாரா? என்பது உறுதி இல்லை. ஒருவேளை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ரவி பிஷ்னோய் கழற்றி விடப்படலாம்.
இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. கேப்டன் பட்லர் ஒருவரே கடந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். மற்ற வீரர்களின் பேட்டிங் எடுபடவில்லை. பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் நேர்த்தியாக வீசக்கூடியவர்.
சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்த கடுமையாக போராடும். அந்த அணி வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
சேப்பாக்கம் மைதானத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டி நடக்கிறது. கடைசியாக 2018 நவம்பர் 11-ந்தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது. கடைசியாக இங்கு இந்தியா-வங்காளதேச அணிகள் மோதிய டெஸ்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கோலாகலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது .
இரு அணிகளும் நாளை மோதுவது 26-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 25 ஆட்டத்தில் இந்தியா 14-ல், இங்கிலாந்து 11-ல் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்ஷர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ் தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா, முகமது ஷமி.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில்சால்ட், பென் டக்கெட், ஹேரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெதல், ஒவர்டன், அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், ஜேமி சுமித், பிரைடன் கேர்ஸ், ரெகான் அகமது, சகீப் மகமூத்.