என் மலர்
நீங்கள் தேடியது "பசு மாடு தாக்குதல்"
- நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன.
- மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மரக்காணம்:
மரக்காணம் அருகே காக்காபாளையம் கிராமம் மேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் சுதாகர் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன. இதில் இரவு வெகுநேரமாகியும் ஒரு மாடு வீடு திரும்பவில்லை.
இதனால் சுதாகர் அவரது மாட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது அவரது பசு மாடு குடல் சரிந்த நிலையில் இருந்தது. மர்ம நபர் யாரோ மாட்டின் வயிற்றில் குத்தியதால் குடல் வெளியில் வந்திருக்கும் என்று சந்தேகம் அடைந்த சுதாகர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடு உயிரிழந்தது.
இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மாடு வளர்ப்போரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு வாலிபரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது.
- 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாட்டை பிடித்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஜலாலாபாத் நகரில் முக்கிய சாலை ஒன்றில் காளை மாடு ஒன்று திடீரென்று ஆவேசமாக ஓடியது. அந்த மாடு சாலையில் சென்றவர்களை விரட்டி சென்று முட்டியது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
ஒரு வாலிபரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவருக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் மாடு முட்டி தாக்கியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த மாட்டை பிடிக்க நகராட்சி ஊழி யர்கள் முயன்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிய மாடு சாலையில் வேகமாக ஓடியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாட்டை பிடித்தனர். சில நாட்களுக்கு முன்பு கிரேட்டர் வெஸ்ட் பகுதியில் மாடு ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அதை ஓட்டி வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.