என் மலர்
நீங்கள் தேடியது "விரோட் கோலி"
- ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
- சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 49 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் போலண்ட் இந்தியாவின் முக்கிய இரு வீரர்களை அவுட்டாக்கினார்.
அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரகானே 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷர்துல் தாக்குர் டக் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்ரீகர் பரத் 23 ரன்னில் வெளியேறினார். உமேஷ் யாதவ் ஒரு ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அமைதியே மாபெரும் பலத்தின் தோற்றுவாய்" என்று லாவோட்சுவின் பொன்மொழியை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.
- தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.
- மைதானத்திற்கு வெளியே, நான் அவருடன் சில நல்ல மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியிருக்கிறேன்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.
எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்தார்.
தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஆர்சிபி அணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அணி வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் சங்கர் பாசு, தினேக் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகல் ஆகியோர் தங்களது எமோஷனலை பகிர்ந்துள்ளனர்.

வீடியோவில் விராட் கோலி கூறியதாவது:- டி.கே.வை முதன் முதலில் சந்தித்தது 2009 சாம்பியன்ஸ் டிராபி. தென்னாப்பிரிக்காவில் விளையாடினோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, நான் தினேஷுன் உடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொண்டது அதுவே முதல் முறை. அப்போது தான், அவர் மிகவும் வேடிக்கையாக இருப்பதைக் கண்டேன். மிகவும் சுறுசுறுப்பானவர்.
மைதானத்திற்கு வெளியே, நான் அவருடன் சில நல்ல மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியிருக்கிறேன். அவர் ஒரு புத்திசாலி, கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்களைப் பற்றி அபார அறிவு கொண்டவர். அவருடனான எனது உரையாடல்களை நான் மிகவும் ரசித்துள்ளேன். அவர் விரும்பும் விஷயங்களை பற்றி யாரிடமும் சென்று பேசும் அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
தினேஷ் கார்த்திக் குறித்து அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் கூறியிருப்பதாவது:- தினேஷ் கார்த்திக்கின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டேன். கார்த்திக் தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை நீங்கள் அடிக்கடி காண முடியாது. கார்த்திக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதால், தன்னுடனும் அவர்களது குழந்தைகளுடனும் அதிக நேரம் செலவிடுவார். என்னுடைய வற்புறுத்தலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.
DK, We love you! ❤
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 24, 2024
Not often do you find a cricketer who's loved by everyone around him. DK is one, because he was smart, humble, honest, and gentle! Celebrating @DineshKarthik's career with stories from his best friends and family! ?#PlayBold #ನಮ್ಮRCB #WeLoveYouDK pic.twitter.com/fW3bLGMQER