என் மலர்
நீங்கள் தேடியது "tag 94331"
வாஷிங்டன்:
உலகம் முழுவதும் டுவிட்டரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை டுவிட்டர் நிறுவனம், பயனாளிகளின் கணக்கு பாதுகாப்புக்காக, அவர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரிகளை சேகரித்தது.
ஆனால் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
டுவிட்டர் நிறுவனத்தின் இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதே வேளையில் டுவிட்டரின் முதன்மை வருவாய் அதிகரித்தது என்று பெடரல் டிரேட் கமிஷன் தலைவர் லினா காக் கோர்ட்டில் தெரிவித்தார்.
இந்த புகாரில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் (இந்திய மதிப்பு ரூ.1100 கோடி) செலுத்த வேண்டும் என்றும் பயனாளிகளின் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பெடரல் டிரேட் கமிஷன் தெரிவித்துள்ளது.
கமிஷனின் இந்த கோரிக்கையை கூட்டாட்சி கோர்ட்டு அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்தால் டுவிட்டர் நிறுவனம் ரூ.1100 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் கடந்த 5-ந்தேதி வெளியிட்டு இருந்தார். மேலும் மாநிலம் முழுவதும் பிரசாரத்தின் போதும் இந்த கருத்தை அவர் தெரிவித்து வந்தார்.
இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், ஆதித்யநாத்தின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரியை பதிவை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் வழங்கியது. இதை ஏற்றுக்கொண்ட டுவிட்டர் நிறுவனம், ஆதித்யநாத்தின் பதிவை நேற்று நீக்கியது.
முன்னதாக தனது பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்த யோகி ஆதித்யநாத்துக்கு 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே 6-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த கட்சிகள் சார்பில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் பேச உள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன முக்கிய தகவலை மோடி வெளியிட உள்ளார்? என்று பலரும் பலவிதமான யூகங்களை வெளியிட்டனர். இதனால் அரசியல் களம் பரபரப்பானது. #Modi #LSPolls
பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 31 எம்.பி.க்களை கொண்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான நிலைக்குழு நேற்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தின் உலக பொதுக் கொள்கை பிரிவு துணைத்தலைவர் காலின் குரோவெல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
நிலைக்குழுவின் தலைவர் அனுராக் தாகூர் தலைமையில் இந்த கூட்டம் சுமார் 3½ மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில், டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சே எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு டுவிட்டர் அதிகாரிகள் பதில் அளித்தனர். மேலும் பல கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் எழுத்து மூலமாக பதில் அளிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.

இதர சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மார்ச் 6-ந் தேதி இந்த நிலைக்குழு முன்பு ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அனுராக் தாகூர் கூறினார். #ElectionCommission #Twitter #ParliamentaryPanel
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். தற்போது போராட்டம் மேலும் விரிவடைந்து நிலைமை மோசமாகி வரும் நிலையில், கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார்.

கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள தரை விரிப்பில் பூனை ஒன்று உருண்டு புரள்கிறது. இதேபோல் மரக்கிளையில் இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கின்றன. இந்த படங்களுடன் தனது கருத்தை கிரண் பேடி பதிவு செய்துள்ளார். அதில், ‘யோகா அனைவருக்கும் பொதுவானது. தர்ணா செய்வதும் யோகாதான். ஆனால், எந்த நோக்கத்திற்காக தர்ணா செய்கிறோம் என்பதைப் பொருத்து, அது என்ன ஆசனம் என்பதை கூற முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Narayanasamy #GovernorKiranbedi
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கும் பிரியங்கா காந்திக்கு லக்னோ நகரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் நன்மைகளை பலதரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல. மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வரை பெரும்பாலான அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களில் இணைந்து வருவதுடன், நாட்டு நடப்பு குறித்த தங்கள் கருத்துக்களை அவற்றில் பகிர்ந்தும் வருகின்றனர்.

பொதுமக்களுடனும், ஊடகத்தினருடனும் பேசுவதற்காக மாயாவதி, டுவிட்டரில் இணைந்திருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது. #Mayawati #Twitter
பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர் 3வது இடத்தில் உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 4வது இடத்திலும், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்திலும் உள்ளனர். 10 பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில் அமிதாப்புக்கு 8வது இடமும், ரகுமானுக்கு 10வது இடமும் கிடைத்துள்ளது. #ARRahman
மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2 நாட்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று பா.ஜனதாவும், காங்கிரசும் இணையதள சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷன் டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு ஒரு அவசர உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு எந்த விதத்திலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களும், பிரசாரங்களும் இடம்பெறக்கூடாது. எனவே தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டு உள்ளது. #ElectionCommission #Twitter #Facebook