என் மலர்
நீங்கள் தேடியது "tag 94452"
அதிகளவில் பக்தர்கள் வருவதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலமாக தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக பக்தர்கள் நடைபாதை வழியாக தரிசனத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். இதனால் பக்தர்களை தங்கவைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுண்டம் காம்ப்ளக்சில் 33 குடோன்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் பக்தர்கள் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,358 பேர் தரிசனம் செய்தனர். 41,900 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.11 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருமலைக்கு பக்தர்கள் யாரும் வர முடியவில்லை.
கோவிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பொறுமையாக இருந்து தரிசனம் செய்ய வேண்டும்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பொறுமையை கடைப்பிடித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்....இன்று வைகாசி மாத அமாவாசை... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்...
ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கும் வைகுண்டம் காம்ப்லக்ஸ் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
கோவிலுக்கு வெளியே வெங்கமாம்பா கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரவு, பகலாக வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 73, 358 பேர் தரிசனம் 41,900 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.16 கோடி காணிக்கையாக வசூலானது.
இந்தநிலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்து நேற்று முன்தினம் 89,318 பேர் தரிசனம் செய்தனர். 48,539 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 3.76 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
திருப்பதியில் நேற்று 90, 885 பேர் தரிசனம் செய்தனர். 35,707 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
தரிசனத்திற்கு தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.
மேலும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு முன்னேறி செல்ல முயல்வதால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.
தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், காபி, மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதியில் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறையில் தரிசன டோக்கன்கள் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் கூட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில்;-
வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருவதால், சில நாட்கள் கழித்து பொறுமையாக தரிசனத்திற்கு வர வேண்டும் என்றார்.
கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கு திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகரித்தது. இதனால் பக்தர்கள் சுமார் 48 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் காத்திருப்பு அறையான வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பியது.
பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டனர்.
திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
இதனால் விஐபி பக்தர்கள், சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கைவிடுத்திருந்தது.
இந்நிலையில், தற்போது கடந்த 4 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் பக்தர்கள் சிரமம் இன்றியும் வேகமாகவும் தற்போது தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 69,848 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,716 முடி காணிக்கை செலுத்தினர். 4.34 கோடி உண்டியல் வசூலானது. வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் 2 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.
இதன் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 89, 318 பேர் தரிசனம் செய்தனர். 48, 639 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.76 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
சனிக்கிழமை 90, 885 பேர் தரிசனம் செய்தனர். 35, 707 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. ஞாயிற்றுக்கிழமை 74, 823 பேர் தரிசனம் செய்தனர். 31,159 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4.51 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.
கடந்த வாரம் 3 நாட்களில் மட்டும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 848 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுகிறது. தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
1 லட்டு ரூ 50 வீதம் பக்தர்களுக்கு எவ்வளவு லட்டு வேண்டுமென்றாலும் கூடுதலாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் சராசரியாக 7 முதல் 8 லட்சம் வரை தினந்தோறும் லட்டு விற்பனையானது. இதனால் தற்போது லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், கூடுதலாக ரூ.50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக லட்டு கேட்கும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு உள்ளதால் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கூறுகின்றனர்.
திருப்பதியில் நேற்று 71,914 பேர் தரிசனம் செய்தனர். 37,234 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.39 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
- இன்று மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடுத்த மாதம் (நவம்பர்) திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.
எனவே பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நவம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடுகிறது.
- டிசம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணியளவில் முன்பதிவு செய்யலாம்.
திருமலை
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டின்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடுகிறது.
டிசம்பர் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணியளவில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் இருப்புக்கு ஏற்ப முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
டிசம்பர் மாதத்துக்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மின்னணு டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கிடைக்கும். முன்பதிவு (திங்கட்கிழமை) காலை 10 மணி வரை நடைபெறும்.
பக்தர்கள் இந்தத் தகவலை கவனத்தில் கொண்டு, அதன்படி தரிசன டோக்கன்கள் மற்றும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- 25-ந்தேதி சூரிய கிரகணம் நடக்கிறது.
- நவம்பர் 8-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
மறுநாள் 25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே இந்த 2 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 8-ந் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று காலை முதல், மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது.
எனவே அன்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்தில் அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
மேலும், டிசம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த டிக்கெட்டுகள் முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 72,243 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,652 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- தீபாவளி ஆஸ்தானத்தால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
- தங்க வாசல் எதிரில் காண்ட மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி 24-ந்தேதி காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசல் எதிரில் காண்ட மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாகக் காண்ட மண்டபத்தில் அமைக்கப்படும் சர்வபூபால வாகனத்தில் கருடாழ்வாரை நோக்கி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து வைக்கிறார்கள். இவர்களுடன் சேனாதிபதியான விஸ்வக்சேனரையும் கொண்டு வந்து மலையப்பசாமியின் இடப்பக்கத்தில் மற்றொரு பீடத்தில் தெற்கு நோக்கி வைக்கிறார்கள். அதன்பிறகு மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சிறப்புப்பூஜைகள், ஆரத்தி, பிரசாத நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இத்துடன் தீபாவளி ஆஸ்தானம் நிறைவு பெறுகிறது.
அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சஹஸ்ர தீபாலங்கார சேவையில் பங்கேற்று கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தீபாவளி ஆஸ்தானத்தால் கோவிலில் 24-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- சுமார் 5 கி.மீ. தாண்டி வரிசை சென்று கொண்டிருக்கின்றது.
- லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டு உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு பிடித்த மாதமான புரட்டாசி மாதத்தில் சாமி தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டும் சாமியை தரிசனம் செய்வதற்காக திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் தரிசனத்திற்கான வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. சுமார் 5 கி.மீ. தாண்டி வரிசை சென்று கொண்டிருக்கின்றது.
பக்தர்களுக்கு போதிய அளவு தங்கும் அறைகள் கிடைக்காததால் நேரடியாக தரிசன வரிசைக்கு பக்தர்கள் சென்று விடுகின்றனர். இதனால் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இரவு, பகல் பாராமல் வரிசை சென்று கொண்டிருப்பதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் தலைமுடிகாணிக்கை செலுத்தும் இடங்களிலும், லட்டு கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டு உள்ளனர்.
ஒரு சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து முடி காணிக்கை செலுத்தலாம் என முடிவு செய்து இலவச தரிசனத்திற்கு சென்றால் அங்கு 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி புறப்படுவதற்கு முன்பாக சரியாக திட்டமிட்டுக் கொண்டு தரிசனத்திற்கு வருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்தாலும் ரூ.300 கட்டண தரிசனம் வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் அறக்கட்டளை உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனால் உண்டியலில் குறைந்த அளவு வருவாய் கிடைத்தது.
தற்போது பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.
ரூ.5.65 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
திருப்பதியில் நேற்று 72,216 பேர் தரிசனம் செய்தனர். 32,388 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- அனைத்து வகையான தரிசனமும் ரத்து.
- சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
- அன்னபிரசாதம் வழங்கப்படாது.
திருமலை
வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேபோல் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை. அதன்படி திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில், வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னபிரசாதம் வழங்கப்படாது.
எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- அதிகமாக குளிர்வாட்டுவதால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்துள்ளனர்.
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்ததும் அனைத்து தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை.
கடந்த 5 நாட்களாக அதிகமாக இருந்த பக்தர்களின் கூட்டம் இன்று சற்று குறைந்து காணப்பட்டது.
இன்று காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு சுமார் 20 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 5 முதல் 6 மணி நேரமும் ஆனது.
காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது திருப்பதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
அதிகமாக குளிர்வாட்டுவதால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 83,223 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 36,658 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் வசூலானது.