என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94482"

    • சரக்கு லாரிகள்முக்கிய வீதிகளில் கடைகளுக்கு முன் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.
    • போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரோட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இருப்பினும், அப்பணிகள், முழுமையடையாமல் இருப்பதால் ஆங்காங்கே தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.சிறிது நேரம் மட்டுமே நெரிசல் ஏற்பட்டாலும், விதிமீறி இயக்கப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.

    விதிமுறைகளை கடுமையாக்கி, நெரிசலை குறைத்தால் மட்டுமே வாகனங்கள் தடையின்றி பயணிக்கவும், மக்கள் இடையூறு இல்லாமல் நடந்து செல்ல முடியும்.இது ஒருபுறமிருக்க சரக்கு லாரிகள் நெரிசலுக்கு முக்கிய காரணமாக மாறி வருகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள பகல் நேரங்களில் நகருக்குள் இயக்கப்படும் சரக்கு லாரிகள்முக்கிய வீதிகளில் கடைகளுக்கு முன் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.

    பிறரின் சிரமம் குறித்து எந்த கவலையும் இன்றி பொருட்களை இறக்குகின்றனர். சரக்கு வாகனங்கள், இரவு மற்றும் அதிகாலையில் மட்டுமே நகருக்குள் வர வேண்டும். பகலில் நுழைந்தால் அபராதம் விதிக்கும் நடைமுறையை கடைபிடித்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், சில வியாபாரிகள் மக்களின் நிலை குறித்து கண்டுகொள்வதே கிடையாது. சரக்கு லாரிகள் நகருக்குள் நுழைவதைக்கண்டறிந்து தடுக்க போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

    • உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    உடுமலை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் உடுமலை மின் பகிர்மான வட்ட பொறியாளர் அறம் வளர்த்தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை( புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடுமலை மின் நகர், இந்திரா நகர் ,சின்னப்பன் புதூர், ராசா வூர் ,ஆவல் குட்டை,சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி,வெங்கிட்டாபுரம், துங்காவி,ராமேகவுண்டன்புதூர் மற்றும் மெட்ராத்தி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உடுமலை பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
    • உடுமலை நகரிலுள்ள விபத்து பகுதிகளில், பரிந்துரை மற்றும் கருத்துரு அடிப்படையில், எவ்வித பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை.

    உடுமலை

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகரம் அமைந்துள்ளது.மேலும், பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகளும், மாவட்ட முக்கிய ரோடுகளும், நகர போக்குவரத்தில், முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்நிலையில், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்த, வருவாய்த்துறை, போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, சாலை பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.இக்குழுவினர் உடுமலை பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் பகுதிகளை கண்டறிந்து, 'பிளாக் ஸ்பாட்' என பெயரிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பரிந்துரைக்கின்றனர். இதற்காக மாதம்தோறும் ஆலோசனை கூட்டமும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. அங்கு, வாகன ஓட்டுனர்களை எச்சரிக்க இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும். சிறிய அளவிலான வேகத்தடை (ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்), ரோட்டில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டட் (கேட் ஐ), நான்கு வரிசையில், ஒளியை பிரதிபளிக்கும் பிரதிபளிப்பான் பொருத்த வேண்டும்.மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைக்க பரிந்துரைக்கப்பட்டது. இப்பணிகள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.

    நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தளி ரோடு மேம்பாலம் நுழைவாயில் பகுதியில்இரண்டு ஆண்டுகளில், விபத்தினால், 3 உயிரிழப்புகள் ஏற்பட்டது. அங்கு, விபத்தை தவிர்க்க இடது பக்க தடுப்புச்சுவரை, 30 மீட்டருக்கு விரிவுபடுத்த வேண்டும். சுவரில் ஒளி பிரதிபலிப்பான் பொருத்தி, இருபுறமும்,'சோலார் பிளிங்கிரிங் லைட், அணுகுசாலையில், இடது புறமும் திரும்ப தேவையான வெள்ளை குறியீடுகள் அமைக்க வேண்டும்.இதே போல், நகர எல்லையில் தேசிய நெடுஞ்சாலை - கொழுமம் ரோடு சந்திப்பில் வேகத்தடை, தேவையான வெள்ளை குறியீடு அமைத்து அதில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்கப்பட வேண்டும்.விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைக்கலாம். ரோட்டின் மையத்தில், டிராபிக் ஐ லேண்ட் எனப்படும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

    மேலும், உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில்சி வசக்திகாலனி கோவில் சந்திப்பு பகுதியில் சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு தேவையான எச்சரிக்கை குறியீடு அமைத்து, வாகனங்களின் வேகத்தை குறைப்பதால் விபத்து தவிர்க்கப்படும் என கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.இவ்வாறு நகரில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதி, விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதிகளை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தவே சாலை பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.இக்குழுவினர் பல முறை ஆய்வு செய்து ஒவ்வொரு துறையினர் பரிந்துரைகளை பெற்று, விபத்து பகுதிகளில் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள கருத்துருவும் அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

    ஆனால் உடுமலை நகரிலுள்ள விபத்து பகுதிகளில், பரிந்துரை மற்றும் கருத்துரு அடிப்படையில், எவ்வித பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே கருத்துரு மற்றும் பரிந்துரைகளை செயல்படுத்தி, விபத்தில்லா நகரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது.
    • இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இதில் தேங்காய் உற்பத்திக்காக மட்டுமல்லாது இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக இவ்வகை ஒட்டுரக தென்னை மரங்கள், வெள்ளை ஈ தாக்குதலால் படுமோசமாக பாதிக்கப்பட்டன. மரங்கள் பச்சையம் இழந்து கருப்பாக மாறி இளநீர் காய்கள் உற்பத்தி முற்றிலுமாக பாதித்தது.

    பெரும்பாலான விவசாயிகள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், இளநீர் உற்பத்திக்காக பராமரித்த தென்னை மரங்களை, வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொடர்ந்துஊரடங்கு காலத்தில், விற்பனை வாய்ப்புகள் குறைந்தது. இவ்வாறுகடந்த இரண்டு ஆண்டுகளாக இளநீருக்கான தென்னை மரங்களை பராமரித்த விவசாயிகள்தொடர் பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.

    தற்போது வெள்ளை ஈ தாக்குதல் சற்று குறைந்து, இளநீர் காய்கள் பிடிப்பது அதிகரித்துள்ளது. அதே போல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலையும் நிலையாக மாறியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில், நேரடியாக வந்து இளநீரை கொள்முதல் செய்கின்றனர். தரத்தின் அடிப்படையில் இளநீர் 22-24 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.ஆரஞ்ச் மற்றும் பச்சை என இரு வகை இளநீர் காய்களுக்கும், தேவை அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இளநீர் உற்பத்திக்கான மரங்களை பராமரிப்பது மிக கடினமானதாக மாறியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல் மட்டுமல்லாது, உரம் உட்பட பிற இடுபொருட்கள் செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.நிலையான விலை கிடைத்தால் மட்டுமே, இவ்வகை தென்னை மரங்களை தொடர்ந்து பராமரிக்க முடியும்.கட்டுப்படுத்த முடியாத நோய் தாக்குதல் பரவும் போது, வேளாண்துறை வாயிலாக தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் மானியத்தில் மருந்துகள் வாங்க அரசு உதவ வேண்டும் என்றனர். 

    • ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
    • கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும், தக்காளி, கத்தரி உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.தொடர்ச்சியாக ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.கேரளாவில், அவியல், பொரியல், கூட்டு என பொரியல் தட்டை உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.எனவே இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை, கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு, விற்பனைக்கு செல்கிறது.முக்கிய சீசனின் போது கேரள மாநில வியாபாரிகள் விளைநிலங்களுக்கு நேரடியாக வந்து, கொள்முதல் செய்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது.விதைப்பு செய்த, 50வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். நாள்தோறும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கேரளா மட்டுமல்லாது உள்ளூரிலும், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் அனைத்து சீசன்களிலும் பொரியல்தட்டைக்கு நிலையான விலை கிடைக்கும்.இதே போல், தோட்டக்கலைத்துறை வாயிலாக சாகுபடிக்கு தேவையான விதைகளை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது

     உடுமலை:

    தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே பொள்ளாச்சி ரோட்டில் ரோட்டை கடக்க பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அங்கு நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அது திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மீண்டும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடனே ரோட்டை கடந்து பஸ் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கம் கடைவீதிகளுக்கு செல்லவும் அச்சமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடுமலை வழியாக சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர் உட்பட பல்வேறு வெளியூர்களுக்கு ரெயில்கள் செல்கின்றன.
    • காவலர் பல்வேறு பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    உடுமலை :

    உடுமலை வழியாக சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர் உட்பட பல்வேறு வெளியூர்களுக்கு ரெயில்கள் செல்கின்றன. இந்நிலையில் பழனி ெரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தல் படி காவலர் ரகு உடுமலை ரெயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும், மேலும் ரெயிலை விட்டு இறங்கும்போது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்.

    சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்தால் உடனே காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

    • கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
    • விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை வட்டாரத்தில் கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

    இதில் விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர். இந்த சீசனில் வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது; வெண்டை சாகுபடியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கள் அறுவடைக்கு வரும் தற்போது 16 கிலோ கொண்டபை ஒன்று ரூபாய் 500 முதல் 600 வரை விற்பனையாகிறது. வெங்காயம் தக்காளி உள்ளிட்ட சாகுபடியில் கடந்த சீசனில் விலை கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என தெரிவித்தனர்.

    • விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.
    • மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது.

    உடுமலை :

    உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே உடுமலை நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு விற்பன செய்து மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது. இதில் ஆடு மாடுகள் மேய்ந்து பிளாஸ்டிக் உண்பதால் அவற்றுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குப்பை கிடங்கால் துர்நாற்றம் ஏற்பட்டு சந்தைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுகளை உடனு க்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரண்டாம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    உடுமலை :

    பி.ஏ.பி., கிளை கால்வாய்களில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு இரண்டாம் அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    போதிய மழை இல்லாத காரணத்தால் பயிர்களுக்கு கூடுதலாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இந்நிலையில் உடுமலை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.குறித்த நேரத்தில் தண்ணீர் நீரிட விலையெனில் பயிர்கள் கருகி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறையினர் போலீஸ் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்து ரோந்து செல்ல வேண்டும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கௌரவமான வாழ்க்கை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சர்வதேச ஓய்வூதியர் பாதுகாப்பு தினமான இன்று அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கௌரவமான வாழ்க்கை உத்தரவாதப்படுத்த வேண்டும், அனைத்து முதியோர்களுக்கும் வேறுபாடு பார்க்காமல் பணம், மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.

    புதிய ஓய்வூதியத்திற்கு ரத்து செய்து ஏற்கனவே உள்ள பயனளிப்பு ஓய்வு பெற்று அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியம் அமைப்பு செயலாளர் ஸ்ரீரங்கன், அரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வூதியர் சங்கம் காளிமுத்து, மின்வாரியம் ஓய்வூதியம் பெற்றோர் நல அமைப்பு எஸ்.எஸ்.அலி, அகில இந்திய அஞ்சல் ஓய்வூதிய அமைப்பு செயலாளர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசாணையால் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, சம்பள உயர்வு, பஞ்சபடி ,புதிய பதவிகள் பெறுவது உட்பட பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பஞ்சப்படி உயர்வு காலம் தாழ்த்தி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பறிக்கும் விதமாக அரசாணை உள்ளதால் அரசாணைைய உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு தொழிலாளர் சங்கம் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் மாரிமுத்து ,கணக்காளர் தொழிலாளர் பொன்ராஜ், சிஐடியு. கோவிந்தன், ஏடிபி. சக்திவேல் ,ஐக்கிய சங்கம் செல்வராஜ், என்ஜினீயர் சங்கம் ஜெயக்குமார், என்ஜினீயர் கழகம் செல்வகுமார், மோகன் உட்பட 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டனர்.

    ×