என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94500"

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. 

    அதிகம் அறியப்படும் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே, செங்குத்தாக பொருத்தப்படும் மூன்று கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், போனின் இடது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்கள் வழங்கப்படுகிறது.

     சாம்சங் M13 5ஜி

    சாம்சங் கேலக்ஸி M13 5ஜி மாடல் விவரங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் SM-M135M மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்தது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M13 5ஜி 6.5 இன்ச் புல் HD+ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 6GB, 128GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டு இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனிற்கான ப்ரோடெக்டிவ் கேஸ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அளவீடுகளில் சாம்சங் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது.

    தற்போதைய தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் வெளிப்புற ஸ்கிரீன் 23:9 அளவிலும், உள்புற டிஸ்ப்ளே 6:5 அளவிலும் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இது முந்தைய மாடலை விட அளவில் சிறியதாக இருக்கும் என தெரிகிறது. அளவீடுகள் மட்டுமின்றி புதிய கேலக்ஸி Z போல்டு 4 மாடல் ஓரளவு மெல்லியதாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    முந்தைய தகவல்களில் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் லென்ஸ் தான் புது கேலக்ஸி Z போல்டு 4 மாடலிலும் வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன் படி சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

    இதே போன்று வெளியான மற்றொரு தகவலில் புதிய கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனில் S பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் டிஸ்ப்ளே, கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டதை விட அதிக ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டது.
    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை 39 சதவீதம் வரை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்ஜெட் ரக மாடல்கள் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் பாதிக்கப்பட இருக்கின்றன.

    சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு குறைவு, மின்சாதனங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் போன்ற காரணங்களால் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    இந்த ஆண்டு மட்டும் 310 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை 280 மில்லியனாக குறைக்க சாம்சங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட பத்து சதவீதம் குறைவு ஆகும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு உற்பத்தி 35 சதவீதம் சரிவடையும் என ஷின்ஹன் முதலீட்டு நிறுவன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது காலாண்டு உற்பத்தியில் பத்து சதவீதம் வரை சரிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோவில், சுழலும் பெசல்கள் இருக்காது என கூறப்படுகிறது. கடைசியாக வெளிவந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4ல் சுழலும் பெசல்கள் இடம்பெற்று இருந்தன. இனி வரும் ஸ்மார்ட் வாட்ச்களில் தங்களது கிளாசிக் மாடலை தவிர்க்க சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். 

     சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்

    கேலக்ஸி வாட்ச் 4 சீரிசை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கேலக்ஸி Z ஃபோல்ட் 3 வகை ஸ்மார்ட்போன்களுடன் சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதே போல் தான் தங்களது அடுத்த தயாரிப்பான கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸை இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கேலக்ஸி Z ஃபோல்ட் 5 வகை ஸ்மார்ட்போன்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, 40mm மாடல் 276mAH பேட்டரி உடனும், 44mm மாடல் 397mAH பேட்டரி உடனும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சபையர் கிளாஸ் மற்றும் டைட்டானியம் பாடி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன.
    கிளவுட் அடிப்படையில் இயங்கும் தன்னாட்சி ரோபோக்களுக்கான முதல் தனியார் 5ஜி வணிக நெட்வொர்க் சேவையை சாம்சங் நிறுவனம் கட்டமைத்துள்ளது. நேவியர் கிளவுட் நிறுவனத்துடன் இணைந்து தென் கொரியாவின் முதல் தனியார் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது சாம்சங் நிறுவனம். 

    நேவியர் நிறுவனத்தின் புதிய இரண்டாவது தலைமையகம் மற்றும் சாம்சங்கின் நெட்வொர்க் தீர்வு மையம் ஆகிய இடங்களில் இந்த கிளவுட் அடிப்படையிலான தன்னாட்சி மொபைல் ரோபோக்கள் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த புதிய சேவையானது, சியோலில் உள்ள நேவியரின் தலைமையகம் முழுவதும் பயணிக்க உள்ளது. அங்கு, பேக்கேஜ் டெலிவரி, காபி டெலிவரி மற்றும் ஊழியர்களுக்கு மதிய உணவு பெட்டி விநியோகம் ஆகியவற்றை வழங்க இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    samsung

    1784 என்ற எண்ணை அழைத்தால் ரோபோவின் உதவி கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள், 36-மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான ரோபோக்களை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டு உள்ளனர்.

    அனைத்து ரோபோக்களும் கிளவுட் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளன, அவை தனித்தனியாக செயல்படும் வண்ணம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் அனைத்தும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் மூலம் இயங்க உள்ளன. இதன்மூலம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் ரோபோக்களை இயக்க முடியும் என கூறப்படுகிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போன் சீரிஸ் விற்பனை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யவே இல்லை. இந்த ஆண்டுக்கு பதில் 2022 ஆம் ஆண்டு புதிய நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தென் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிரந்தரமாக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. நோட் சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

     கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்

    2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டத்தில் இருந்து கேலக்ஸி நோட் சீரிஸ் நீக்கப்பட்டு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது என தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    2019 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் 1.27 கோடி நோட் சீரிஸ் மாடல்களை விற்பனை செய்து இருந்தது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 97 லட்சம் நோட் சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டன. 2022 ஆண்டு கேலக்ஸி இசட் சீரிஸ் விற்பனை இலக்கு 1.3 கோடி யூனிட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் சிறப்பான செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் இசட் ப்ளிப் 3 மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில், சாம்சங் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் இசட் ப்ளிப் 4 மாடல்களின் அம்சங்கள் தற்போதைய மாடல்களில் இருப்பதை விட மேம்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     கேலக்ஸி இசட் ப்ளிப் 3

    புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மாடலில் மேம்பட்ட அண்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இரு செல்பி கேமராக்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஒரு சென்சார் டிஸ்ப்ளேவின் மேல் மற்றொரு சென்சார் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் எடை முன்பை விட குறைவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி என இரு வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை புது சாம்சங் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், 8 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது.

    இத்துடன் 50 எம்பி பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ12

    சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே 
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் 
    - மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு 
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கோர் 3.1
    - டூயல் சிம் 
    - 50 எம்பி பிரைமரி கேமரா
    - அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
    - டெப்த் / மேக்ரோ கேமரா 
    - 8 எம்பி செல்பி கேமரா 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனினை (6ஜிபி+128ஜிபி) இந்தியாவில் ரூ. 21,999 துவக்க விலையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி+128ஜிபி மாடல் வெளியாகி இருக்கிறது. புதிய வேரியண்ட் விலை ரூ. 23,499 ஆகும். 

    இந்த வேரியண்ட் ஆசம் பிளாக், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ32

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ32 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3, புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய சாம்சங் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா அம்சங்கள் பற்றிய புது தகவல்கள் ட்விட்டரில் இடம்பெற்று இருக்கிறது.

    அதன்படி புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் மேம்பட்ட 108 எம்பி கேமரா மோட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டு உருவாகிறது. இது ஐசோசெல் ஹெச்.எம்.4 அல்லது ஐசோசெல் ஹெச்.எம்.5 சென்சார்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

     சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ்

    மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்றே வளைந்து இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை விட புதிய ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் அதிகளவு வளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2200 சிப்செட், ஆர்.டி.என்.ஏ. 2 கிராபிக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான மாடல்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஜாக் மற்றும் பட்டன்கள் நீக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மற்ற ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் சமீபகாலங்களில் நீக்கப்படும் பல்வேறு அம்சங்கள் இதுவரை வெளியான கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன.



    ஸ்மார்ட்போன்களில் மெமரியை நீட்டிக்கும் வசதி அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது. கேலக்ஸி நோட் 10 மாடலில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவது அந்நிறுவன வாடிக்கையாளர்களை பாதிக்கலாம். மற்றபடி ஸ்மார்ட்போனின் பட்டன்களை பொருத்தவரை பவர் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் போன்றவை நீக்கப்படும் என தெரிகிறது.

    ஏற்கனவே பலமுறை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இருவித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவை கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ரோ என அழைக்கப்படும் என தெரிகிறது.

    இதன் ஸ்டான்டர்டு மாடலில் 6.28 இன்ச் டிஸ்ப்ளேவும், ப்ரோ மாடலில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 சீரிசின் முன்புற பேனல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதன் ஒற்றை செல்ஃபி கேமரா பன்ச் ஹோல் முறையில் டிஸ்ப்ளேவின் மேல்புற மத்தியில் பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.



    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை 2019 ஆண்டின் முதல் காலாண்டில் 2.7 சதவிகிதம் சரிவை சந்தித்ததாக கார்ட்னர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ள போதும் ஹூவாய் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பதாக கார்ட்னர் அறிவித்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    2019 முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் 19.2 சதவிகித பங்குகளுடன் முதலிடம் பிடித்து இருப்பதாக கார்ட்னர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் ஐந்து இடங்களை பிடித்த நிறுவனங்கள் பட்டியலில் ஹூவாய் நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



    குறைந்தளவு புதிய தொழில்நுட்பங்களும், அதிகளவு விலை நிர்ணயிக்கப்பட்டதால் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை சரிந்துள்ளது. 2019 முதல் காலாண்டில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விற்பனை முறையே 15.8 சதவிகிதம் மற்றும் 3.2 சதவிகிதம் குறைந்துள்ளது.

    ஐரோப்பா மற்றும் சீனாவில் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இரு நாடுகளில் ஹூவாய் ஸ்மார்ட்போன் விற்பனை முறையே 69 சதவிகிதம் மற்றும் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சீனாவில் மட்டும் ஹூவாய் நிறுவனம் 29.5 சதவிகித பங்குகளை கொண்டிருக்கிறது.
    ×