என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95157"

    குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வகையில் இது இரண்டையும் வைத்து சூப்பரான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    குளிர்ச்சியான பால் - 2 கப்
    சாக்லேட் கிரீம் பிஸ்கட் பாக்கெட் - 1
    கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் - 1
    சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன்
        
    செய்முறை:

    முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதில் கிரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி.

    இந்த மில்க் ஷேக்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பர்ஃபி எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்:

    ஆரஞ்சு பழங்கள் - 4
    சர்க்கரை சேர்க்காத கோவா - 400 கிராம்
    சர்க்கரை - 400 கிராம்
    முந்திரி, பாதாம் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    ஆரஞ்சு பழங்களை உரித்து, மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி, சுளைகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    கோவாவை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த கோவாவை அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில் கொட்டி அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவை கெட்டியான பதத்துக்கு வரும் வரை கிளறவும்.

    பின்பு அதில் ஆரஞ்சு சுளைகளைக் கொட்டிக் கிளறவும்.

    இப்போது கலவை சற்றே நீர்த்து போகும். அது மீண்டும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.

    கெட்டியான பதத்துக்கு வரும்போது, அதில் நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

    நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமமாக்கவும்.

    ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த செசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
    பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
    தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
    சர்க்கரை - 1 1/2 கப்
    நெய் - 1/2 கப்
    கிஸ்மிஸ் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.

    கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள்.

    பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் அல்வா ரெடி.
    பாதாம் பூரி இந்தியாவின் பல இடங்களில் பண்டிகைகளின் போது விருப்பமாக செய்யப்படுகிறது. இன்று இந்த பூரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்
    சர்க்கரை - 3/4 கப்
    உருக்கிய நெய் - 1/4 கப்
    உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்
    உப்பு - சுவைக்கேற்ப
    ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    கிராம்பு - 8-10

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும். நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.

    அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்.

    இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன பந்து மாதிரி உருட்டி பூரில் போல் தேய்த்து பூரியை முக்கோண வடிவில் எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி).

    கடாயில் எண்ணெயை சூடானதும் ஒவ்வொரு பூரியாக போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.

    பொரித்து சுடச்சுட உள்ள பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்.

    அதன் மேல் துருவிய தேங்காயை தூவி அப்படியே சுவையுடன் அழகாக சாப்பிடலாம்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தித்திப்பான மாம்பழக் கூழ் - ஒரு கப்,
    சர்க்கரை - அரை கப்,
    பால் - ஒரு லிட்டர்,
    அரிசிக்குருணை - 2 டேபிள்ஸ்பூன்,
    கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்,
    மேங்கோ எசன்ஸ் (விரும்பினால்) - சில துளிகள்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

    செய்முறை:

    முந்திரி, திராட்சையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

    மீதமுள்ள நெய்யை விட்டு அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

    அரிசி நன்றாக வெந்து கண்ணாடி போல் ஆகி பால் சிறிது வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழக் கூழையும் சேர்க்கவும்.

    எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி - திராட்சை, மேங்கோ எஸன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
    ‘இயற்கை ஜெல்லி’ என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நுங்கு வைத்து அருமையான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள்:

    நுங்கு - 5
    பால் - ½ லிட்டர்
    சர்க்கரை - 75 கிராம்
    ஏலக்காய் - 3
    குங்குமப்பூ - 2 சிட்டிகை

    செய்முறை:

    நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஊற வைத்துத் தோல் உரித்த பாதாம், ஏலக்காய் மற்றும் சிறிது பால் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    காய்ச்சிய பாலை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாதாம் கலவையைக் கலந்து சற்று கெட்டியாகும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.

    பின்பு அதில் நுங்குத் துண்டுகளைச் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரச்செய்து, குங்குமப்பூவைத் தூவி சில்லெனப் பரிமாறவும்.

    இப்போது அருமையான நுங்கு பாயாசம் ரெடி.
    அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் செய்யக்கூடிய இனிப்பு தான் ‘ரசமலாய் பார்'. அதன் செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
    தேவையான பொருட்கள்:

    வெள்ளை சாக்லெட் - 250 கிராம்
    பால் - 1 தேக்கரண்டி
    குங்குமப்பூ - 1 கிராம்
    ஏலக்காய் - 1
    ரசமலாய் எசன்ஸ் - 1 தேக்கரண்டி
    பாதாம், பிஸ்தா (பொடித்தது) - சிறிதளவு

    செய்முறை:

    சிறிய பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் குங்குமப்பூ மற்றும் இடித்த ஏலக்காய் கலந்து ஊற வைக்கவும்.

    அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதற்குள் வெள்ளை சாக்லெட்டைக் கொட்டி மிதமான தீயில் உருக்கவும். பின்பு அதில் குங்குமப்பூ ஊறவைத்தப்  பாலை சிறிது சிறிதாக ஊற்றி அடிப்பிடிக்காதவாறு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து இந்தக் கலவையில் ரசமலாய் எசன்ஸ் ஊற்றி, நன்றாகக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, பொடித்து வைத்த பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் அதன் நிறம் மாறாத வண்ணம் வறுக்கவும். இதை வெள்ளை சாக்லெட் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

    பின்பு படத்தில் காட்டியவாறு விருப்பமான சாக்லெட் அச்சில், இந்த சாக்லெட் கலவையை ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 2 மணி நேரம் குளிர வைத்து எடுக்கவும். இப்பொழுது ருசியான ‘ரசமலாய் பார்' தயார்.

    இதையும் படிக்கலாம்...சத்தான சம்பா கோதுமை கஞ்சி
    திருக்கார்த்திகை தீபமான இன்று மாலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது தேங்காய் பால் அரிசி பாயாசத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    தேங்காய் - ஒன்று (பெரியது)
    பச்சரிசி - அரை ஆழாக்கு
    ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
    வெல்லம் - கால் கிலோ
    காய்ந்த திராட்சை - 10 கிராம்
    முந்திரி - 10 கிராம்

    செய்முறை:
     
    சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.

    தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும்.

    மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.

    நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும்.

    கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி போட்டு 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    கடைசியாக முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.

    சுவையான தேங்காய் பால் அரிசி பாயாசம் தயார்.

    கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்:

    கவுனி அரிசி மாவு - 250 கிராம்,
    தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
    நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.

    செய்முறை:

    கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பிறகு மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையவும். தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகிவிடக் கூடாது. மாவாகவே இருக்க வேண்டும். ஆனால், மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும்.

    ஐந்து நிமிடங்கள் ஆனதும் இட்லிப்பானையில் துணி போட்டு சலித்த மாவை ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

    அதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசிறி எடுத்து உருண்டையாகப் பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.

    சத்தான கவுனி அரிசி உருண்டை ரெடி.

    கமகமவென்ற மணத்துடன் தீபாவளி மருந்து தயாரித்து நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். தீபாவளி மருந்து தயாரிப்பது எப்படி என்ற விவரம் வருமாறு:-
    தேவையான பொருட்கள்

    கண்டந்திப்பிலி - 50 கிராம்
    அரிசி திப்பிலி - 20 கிராம்
    ஜாதிக்காய் - 1
    ஜாதிபத்திரி - 8 இதழ்
    சித்தரத்தை - 50 கிராம்
    விரலி மஞ்சள் -10 கிராம்
    சுக்கு - 100 கிராம்
    அதிமதுரம் - 20 கிராம்
    ஓமம் - 100 கிராம்
    லவங்கம் - 6
    ஏலக்காய் - 6
    தனியா - 25 கிராம்
    மிளகு - 50 கிராம்
    சீரகம் - 50 கிராம்
    வெல்லம் - 400 கிராம்
    நெய் - 250 கிராம்
    நல்லெண்ணை - 250 கிராம்
    தேன் - 100 கிராம்

    செய்முறை

    கண்டந்திப்பிலி அரிசி திப்பிலி, ஜாதிக்காய், ஜாதி பத்திரி, சித்தரத்தை, விரலி மஞ்சள், சுக்கு, அதிமதுரம் ஆகிய பொருட்களை தனித் தனியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்,

    பின்னர் வாணலியில் செந்நிறம் வரும்வரை வறுத்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்,

    அதன்பிறகு ஓமம், லவங்கம், ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம் ஆகிய பொருட்களை வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

    அவற்றுடன் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள 8 பொருட்களையும் நன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக மிக்சியில் போட்டு நைசாக அரைத்து மாவு ஜல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

    ஜல்லடையில் மீது உள்ளதை மீண்டும் மிக்சியில் அரைத்து சலித்து எல்லா மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான சூடு கொண்ட தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.

    அதன்பிறகு அடிகனமான வாணலியில் வெல்லத்தை பொடியாக்கி போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதை அந்த வாணலியில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    நன்றாக கொதித்தவுடன் நல்லெண்ணை, நெய் இரண்டையும் பாதி பாதி ஊற்றி கிளறி விட வேண்டும்.

    பின்னர் கரைத்து வைத்துள்ள மருந்து பொடியை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியானதும் மீதி இருக்கும் நெய்யையும், நல்லெண்ணையையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி நெய்யும், எண்ணெணையும் பிரிந்து கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு தேனை பரவலாக விட்டு நன்றாக கலக்க வேண்டும்.

    2 முதல் 3 மணிநேரம் ஆற விட்டு கிளறினால் கமகம என்ற வாசனையுடன் தீபாவளி மருந்து தயாராகும்.

    தீபாவளி அன்று ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து, சுவைத்து கொண்டாடுவோம். அந்த வகையில் இன்று கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை ரவை - 50 கிராம்
    தேங்காய் துருவல் - அரை கப்
    கருப்பட்டி - முக்கால் கப்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
    காய்ச்சிய பால் - ஒரு தம்ளர்
    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியில் நெய்விட்டு உருகியதும், முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே வாணலியில், கோதுமை ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ரவை வறுப்பட்டதும் 4 கப் வெந்நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன், தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.

    கோதுமை ரவை நன்றாக வெந்ததும், கருப்பட்டி ஜீரா சேரத்து கிளறிவிடவும்.

    கோதுமை ரவையுடன், கருப்பட்டி சேர்ந்து வெந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்து வைத்த முந்திரி கலவையை சேர்க்கவும்.

    இறுதியாக, பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.

    சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் ரெடி..!.

    இதையும் படிக்கலாம்...தீபாவளி ஸ்பெஷல்: பாதாம் பர்ஃபி
    இந்த தீபாவளிக்கு எளிய முறையில் செய்யக்கூடிய பாதாம் பர்ஃபி செய்து குடும்பத்தில் உள்ளவர்களை அசத்துங்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    பாதாம் - 1 1/2 கப்
    சர்க்கரை - 1 1/4 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - 100 மில்லி
    குங்குமப்பூ - அலங்கரிக்க
    பாதாம், பிஸ்தா - அலங்கரிக்க

    செய்முறை:
     
    பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும். தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
     
    சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான் ஸ்டிக் வாணலியில் கொதிக்க விடவேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
     
    பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடாமல் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.
     
    பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போடவும்.

    சுவையான பாதாம் பர்ஃபி தயார்.

    ×