என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95693"

    டுவிட்டர் பதிவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சில அரசியல்வாதிகளை டேக் செய்து குறிப்பிட்டிள்ளார்.
    பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹாசீப், பாகிஸ்தானில் சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி டுவிட்டரில் காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முகமது ஹாசீப், "லாகூரில் உள்ள எந்த பெட்ரோல் நிலையத்திலும் பெட்ரோல் கிடைக்கவில்யைா ? ஏடிஎம் இயந்திரங்களில் பணமில்லையா? ஒரு சாமானியர் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், இந்த பதிவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சில அரசியல்வாதிகளை டேக் செய்து குறிப்பிட்டிள்ளார்.

    இதையும் படியுங்கள்..  'குரங்கு காய்ச்சல்' கொரோனா போல பெருந்தொற்றாக பரவுமா?
    இந்தியா எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்: 

    பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி  ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. 

    இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய் 86 காசுகளாக விற்பனையாகிறது.   

    டீசல் ஒரு லிட்டர் 174 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 155 ரூபாய் 56 காசுகளாக உள்ளது.

    இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்றார். விலை உயர்த்தப்பட்ட பிறகும், நாங்கள் டீசலுக்கு லிட்டருக்கு 56 ரூபாய் இழப்பை சந்திக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை ஆளும்  மோசடி கும்பலால் நாடு பெரும் பணவீக்கத்தை சந்திக்கும் என்று அவர் எச்சரித்தார்.

    ரஷிவுடன் 30 சதவீத மலிவான விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை தமது அரசு மேற்கொண்டதாகவும், ஆனால் ஷபாஸ் ஷெரீப் அரசு அதை தொடரவில்லை என்றும் கூறினார்.  

    ஆனால் அமெரிக்காவின் கூட்டாளியான இந்தியா,  ரஷியாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணையை வாங்குவதன் மூலம்  எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற புதிய வரலாறு இம்ரான்கானுக்கு உருவானது.
    இஸ்லாமாபாத்

    கிரிக்கெட் நட்சத்திரமாக இருந்து அரசியல்களத்தில் குதித்து, பாகிஸ்தான் தெஹரிக் இ இன்சாப் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, பாகிஸ்தானின் பிரதமராக உயர்ந்தவர் இம்ரான்கான் (வயது 69). ஆனால் அந்த நாட்டில் எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டு காலம் பதவியில் தொடர்ந்தது இல்லை என்ற வரலாறு, இம்ரான்கானுக்கும் சொந்தமானது.

    அவருடைய ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். இதனால் அந்த நாட்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற புதிய வரலாறு உருவானது.

    அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியுமான ஷபாஸ் ஷெரீப், ஏப்ரல் மாதம் 11-ந் தேதி அந்த நாட்டின் புதிய பிரதமர் ஆனார். ஆனால் அங்கு நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

    சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை மூண்டு உயிரிழப்புகளும் நேரிட்டன. 6 நாளில் தேர்தல் தேதியை அறிவிக்காவிட்டால் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு மீண்டும் பேரணி நடத்தப்படும் என்று அவர் மிரட்டலும் விடுத்திருந்தார். இந்த நிலையில் இம்ரான்கான், 'போல் நியூஸ்' செய்தித்தளத்துக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசு எதிர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான எங்கள் கட்சியின் வழக்கு மீது சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் நடத்த கோரி அடுத்த கட்ட பேரணி தேதி வெளியிடப்படும். சட்டம் மற்றும் அரசியல் சாசன வழிகளில் நாம் தேர்தலை சந்திக்க அவர்கள் அனுமதிக்கிறார்களா என பார்ப்போம்.

    இல்லை என்றால் இந்த நாடு உள்நாட்டுப்போரை நோக்கி செல்லும். நான் நாடாளுமன்றத்துக்கு திரும்பும் பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால் அது அரசை அகற்றிய சதியை ஏற்றுக்கொள்வதாக அமைந்து விடும். பாகிஸ்தான் அரசு சரியான முடிவுகள் எடுக்க வேண்டும். பாகிஸ்தான் அணுசக்தி தடுப்பை இழந்தால், நாடு மூன்று துண்டாகி விடும்" என்று அவர் கூறினார்.

    இம்ரான்கானுக்கு பதிலடி கொடுத்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், " நான் துருக்கியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறபோது, இம்ரான்கான் நாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுக்கிறார். அவர் அரசுப் பதவிக்கு தகுதியற்றவர் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் தேவைப்பட்டால், அவரது சமீபத்திய பேட்டி போதுமானது. உங்கள் அரசியலை செய்யுங்கள். ஆனால் எல்லைகளை மீறி பாகிஸ்தானைப் பிரிப்பது பற்றி பேசத்துணிய வேண்டாம்" என கூறி உள்ளார்.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தேசத்துரோக வழக்கு தொடர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இதற்கிடையில், தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறியும், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்துவருகிறார். மேலும், தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தனது பாகிஸ்தான் தெக்ரிக் - ஐ - இன்சஃப் கட்சி ஆதரவாளர்களுடன் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி கடந்த மாதம் பேரணியாக சென்றார். இந்த பேரணியை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

    தடுப்புகளையும் மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் தலைநகர் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டதால் போலீசாருக்கும் பேரணியாக சென்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். மேலும்,இந்த போராட்டத்தில் வன்முறை மூண்டு உயிரிழப்புகளும் நேரிட்டன.

    இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் கடந்த மாதம் நடந்த போராட்டத்தின்போது அரசு சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறி முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தேசத்துரோக வழக்கு தொடர பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு தலா 30 ரூபாய் (பாகிஸ்தான் மதிப்பில்) அதாவது 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    இஸ்லமாபாத்:

    பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால், அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது.

    இதனால், ஆத்திரம் அடைந்த சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது. அந்த கடனை விடுவிக்கவும், கூடுதலாக 200 கோடி டாலர் கடன் வழங்கவும் கோரி சர்வதேச நிதியத்துடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பெட்ரோல், டீசல் மீதான மானியத்தை நீக்கி, விலையை உயர்த்துமாறு சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது.

    இதனால், கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக பாகிஸ்தான் உயர்த்தியது. இந்தநிலையில், ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு தலா 30 ரூபாய் (பாகிஸ்தான் மதிப்பில்) அதாவது 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 209.86- ஆக உள்ளது. டீசல் விலை 204.15 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணென்னெய் விலை லிட்டருக்கு 181.94 ஆக உள்ளது.
    • இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
    • பயங்கரவாதி நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம்.

    ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போலி ஆவணங்கள் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    1999-ம் ஆண்டு இந்தியாவின் பயணிகள் விமானத்தை கடத்தி சென்ற பயங்கரவாதிகள், சிறையில் இருந்த மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க நிபந்தனைகள் விதித்தனர்.

    இதையடுத்து மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். இந்தியா, சர்வதேச நாடுகள் அழுத்தத்தால் மசூர் அசாரை பாகிஸ்தான் அரசு வீட்டு காவலில் வைத்தது.

    ஆனால் அவரை லாகூர் கோர்ட்டு விடுவித்தது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி யது. ஆனால் மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. குடும்பத்துடன் காணாமல் போய் விட்டார். அவரை தேடி வருகிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

    இந்த நிலையில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச் சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் என்று நம்புகிறோம். அவர் நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம். அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் கூறும்போது, "உலகளாவிய பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு குழுவின் ஆணைக்கு இணங்கவும், அந்த அமைப்பின் சாம்பல் நிற பட்டியலில் இருந்து வெளியேறவும் பாகிஸ்தானின் முயற்சியாக இது இருக்கலாம்" என்றனர்.

    நாடு தவறான பாதையில் செல்கிறது என பாகிஸ்தானியர்களில் 87 சதவீதம் பேர் ஐபிஎஸ்ஓஎஸ் பாகிஸ்தான் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பில் தெரிவித்துள்ளனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஐபிஎஸ்ஓஎஸ் ஆய்வு நிறுவனம் நடத்தய நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டின் நான்காவது காலாண்டு அறிக்கை வெளியிட்டது.

    அதில் பாகிஸ்தானில் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 1,100 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கருத்துகணிப்பில் பதிலளித்தவர்களில் 46 சதவீதம் பேர் பாகிஸ்தானின் பொருளாதார நிலை பலவீனமாக இருப்பதாகவும், 43  சதவீதம் பேர் பணவீக்கம் தான் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    தொடர்ந்து, 14 சதவீதம் பேர் பாகிஸ்தானில் வேலையின்மை முதன்மையான பிரச்சினையாக உள்ளதாகவும், 12 சதவீதம் பேர் வறுமை பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த 49 சதவீதம் பேர் பொருளாதார நிலை அப்படியேதான் இருக்கிறது என்று கூறியுள்ளனர். ஆனால் 46 சதவீதம் பேர் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதாகவும், வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே நாட்டின் பொருளாதார நிலை வலுவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    அடுத்த 6 மாதங்களில் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, ​​64 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்றும், 12 சதவீதம் பேர் பொருளாதார மேம்பாட்டில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், 24 சதவீதம் பேர் இதில் நம்பிக்கையோ அல்லது ஏமாற்றமோ இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    அவர்களின் தனிப்பட்ட நிதி நிலைமை குறித்து கேட்டபோது,  47 சதவீதம் பேர் பலவீனம் மற்றும் நிலையற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 5 சதவீதம் பேர் வலுவாக உள்ளதாக பதிலளித்துள்ளனர். இருப்பினும், 48 சதவீதம் பேர் தங்கள் தனிப்பட்ட நிதி நிலை பலவீனமாகவும் இல்லை அல்லது வலுவாகவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

    நாடு தவறான பாதையில் செல்கிறது என பாகிஸ்தானியர்களில் 87 சதவீதம் பேர் நம்புவதாக கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதவீதம் கடந்த 27 மாதங்களில் இல்லாத அளவில் அதிகமாக உள்ளதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எப்-16 ரக விமானத்தை இந்திய விமானி சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவதை திட்டவட்டமாக மறுப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதற்கு மறுநாள், இந்திய-பாகிஸ்தான் போர் விமானங்கள் ஒன்றுக்கொன்று சண்டையில் ஈடுபட்டன. அப்போது, இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அபிநந்தனுக்கு நேற்று முன்தினம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

     இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன்

    இந்தநிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

    2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எப்-16 ரக விமானத்தை இந்திய விமானி சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறோம். எங்கள் விமானம் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை. இது அடிப்படையற்றது. எப்-16 ரக போர் விமானங்களை கணக்கெடுத்து, சர்வதேச நிபுணர்களும், அமெரிக்க அதிகாரிகளும் இதை அப்போதே உறுதிப்படுத்தி உள்ளனர். நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் என்று காட்டவே அந்த விமானியை விடுதலை செய்தோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    பாகிஸ்தான் கோர்ட்டில் வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவர் லைலா பர்வீன். இவர் தனது முன்னாள் கணவரும், வக்கீலுமான ஹஸ்னைன் தனக்கு வழங்கிய ‘செக்’ போலியானது என கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி விசாரணைக்கு ஆஜராகுவதற்காக லைலா பர்வீன் தனது சகோதரருடன் கோர்ட்டுக்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த ஹஸ்னைன் மற்றும் சக வக்கீல்கள் லைலா பர்வீனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட அவரது சகோதரரை வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். இதை லைலா பர்வீன் தடுக்க முயன்றார்.

    அப்போது வக்கீல்கள் அவரையும் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், இதில் அவர் மயங்கியதாகவும் கூறப்படுகிறது. கோர்ட்டுக்குள் நடந்த இந்த வன்முறையால் அங்கு பெரும் பரரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து தன்னையும், தனது சகோதரரையும் தாக்கிய முன்னாள் கணவர் ஹஸ்னைன் உள்பட அனைத்து வக்கீல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி லைலா பர்வீன் போலீசில் புகார் அளித்தார்.
    ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் 24ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இன்று இந்தியா வந்து சேர்ந்தது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய வீரர்களை, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். தூதரகத்தில் பாகிஸ்தான் அணியினருக்கு இன்று மதிய விருந்து வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர், ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று கூறிய அவர், வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், திறமையுடனும் செயல்படுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.

    2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை மத்திய திரும்பப் பெற்றதுடன்  மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவை அறிவித்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது.  காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    ஆனால், பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில், பாகிஸ்தானுடன் உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வி வேதனையாக இருந்தாலும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறி உள்ளார்.

    டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப்-2 பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முதல் ஆட்டத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வந்தது. இளம் வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனால், அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் அடித்தபோதிலும் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. 

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்ட நிலையில் அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்கள் சோர்வடைந்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சக வீரர்களிடையே பேசுகையில், “நாம் முதல் ஆட்டதிலிருந்தே நன்றாக விளையாடி வந்தோம். அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும்  சாக்லைன் முஷ்டாக், மேத்யூ ஹேடன் மிக சிறப்பாக விளையாடியது பெருமைப்படக்கூடியது.  அணி நிர்வாகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

    இந்த தோல்வி வேதனையாக இருந்தாலும்,  அடுத்து எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.  அதேபோல,  இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய இந்த ஒற்றுமை உடைந்து போய்விடக் கூடாது.  தோல்விக்கு யாரும் யார் மீதும் குற்றம் சொல்லக் கூடாது. ஒரு குழுவாக நாம் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஏற்க வேண்டும். 

    இந்த போட்டியில் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். தோல்வி என்றாலும் இது எங்களுக்கு ஒரு பாடமாக பார்க்கிறோம். அதேபோல,  எதிர்காலத்தில் இந்தத் தவறு நடக்காமல் இருக்க நாம் தடுக்க வேண்டும். நம்முடைய இந்த ஒற்றுமை உடைந்துவிடக் கூடாது என்று அனைவரிடமும் கேட்கிறேன். ஒருநாள் இரவில் இந்த ஒற்றுமை வரவில்லை. இந்த ஒரு தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.

    ஒரு கேப்டனாக உங்களிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது, சிறந்த சூழலாக இருந்தது, ஒரு குடும்பமாக இருந்தோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உழைப்பை அளித்தீர்கள், யாரும் பொறுப்பேற்காமல் இல்லை. தோல்வியைப் பற்றியும், சோர்வைப் பற்றியும் யாரும் சிந்திக்கத் தேவையில்லை. எதில் தவறு செய்தோம், எதை முன்னேற்ற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.

    எந்த வீரரும் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார் என்ற செய்தியை நான் கேட்கக்கூடாது. இந்தத் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வோம், மகிழ்ச்சியாக இருப்போம். இந்த வலி நமக்கு இருக்கும், அதைக் கடந்து வர வேண்டும்” என தெரிவித்தார்.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
    நாட்டிங்காம்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது.

    பாகிஸ்தான் அணி தான் கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது. அத்துடன் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

    1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் கணிக்க முடியாத ஒரு அணியாகும். தனக்குரிய நாளில் அந்த அணி எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை படைத்தது. பாபர் அசாம், பஹார் ஜமான், இமாம் உல்-ஹக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது அமிர், ஷதப் கான், ஆசிப் அலி ஆகியோர் சரியான பங்களிப்பை அளிப்பார்கள் எனலாம்.



    1970-களில் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட்இண்டீஸ் அணி சமீப காலங்களில் சரிவை சந்தித்தது. அயர்லாந்தில் நடந்த 3 நாடுகள் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேச அணியிடம் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. ஆனால் கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், இவின் லீவிஸ் ஆகியோர் அணிக்கு திரும்பிய பிறகு வெஸ்ட்இண்டீஸ் புதிய எழுச்சி கண்டு இருப்பதை உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 421 ரன்கள் குவித்ததுடன் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களும், ஆல்-ரவுண்டர்களும் அதிகம் இருக்கிறார்கள். அந்த அணியின் பந்து வீச்சு பக்க பலமாக அமைந்து விட்டால் அந்த அணி வலுவான அணிக்கும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இன்றைய ஆட்டத்துக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அல்லது முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம் அல்லது சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதப்கான், முகமது அமிர், ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி.

    வெஸ்ட்இண்டீஸ் : கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ் அல்லது ஷனோன் கேப்ரியல்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 
    ×