என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 96049"

    சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அரிசி மாவு - 1 கப்
    கொதிநீர் - தேவையான அளவு
    உப்பு - சிறிதளவு
    வெல்லத்தூள் - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - அரை கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன் கொதிநீர், உப்பு சேர்த்து கரண்டியால் நன்றாக கிளறவும்.

    சூடு ஆறியதும் மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    இடியாப்ப அச்சில் மாவை போட்டு இட்லி தட்டில் இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சிவப்பரிசி இடியாப்பம் ரெடி.
    காலை வேளையில் ஆரோக்கியமான அதே சமயம் வித்தியாசமான உணவை சாப்பிட நினைத்தால், வரகு அரிசி பருப்பு அடை செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    வரகு - 1 கப்
    கடலைப் பருப்பு - 1/4 கப்
    துவரம் பருப்பு - 1/4 கப்
    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    அவல் - 2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 6
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 )
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி - சிறிய துண்டு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    நன்றாக ஊறிய பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், உப்பு, பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பின்பு ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள

    அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!!
    நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - அரை கப்
    முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - நான்கு
    இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
    வெங்காயம் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    துருவிய கேரட் - அரை கப்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று தடிமனாக வார்க்கவும்.

     தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

    சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
    மருத்துவ குணம் நிறைந்த முருங்கை இலையை அடிக்கடி உணவில் சேர்த்தோ, சூப்பாகவோ செய்து குடியுங்கள். இன்று முருங்கைக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி மாவு - 1 கப்
    முருங்கை கீரை - 1/4 கப்
    வெங்காயம் - 1
    பூண்டு - 5
    மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், முருங்கைக் கீரை, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவை போட்டு அதோடு உப்பு சேர்த்து கலந்த பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முருங்கை கீரை, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு சுட்டு எடுத்தால் முருங்கைக் கீரை சப்பாத்தி ரெடி.
    சோளத்தில் பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - 1 கப்
    உளுந்து -  அரை கப்
    வெந்தயம் - ஒரு ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சோளம், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஆறு மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மாவு நன்கு புளித்தவுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சாம்பார் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.

    சூப்பரான சோள தோசை ரெடி.

    அரிசி மாவில் ப.மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து செய்யும் அக்கி ரொட்டி கர்நாடகாவில் மிகவும் பிரபலம். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - கால் கிலோ,
    தேங்காய் - ஒரு மூடி,
    கொத்தமல்லி -  ஒரு கட்டு,
    பச்சை மிளகாய் - 4,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - 50 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை :  

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

    ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது.

    விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

    பாசிப்பருப்பு, கோதுமை மாவு சேர்த்து செய்யும் இந்த பரோட்டா மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கோதுமை மாவை உப்பு மற்றும் மிளகாய் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

    பிறகு பிசைந்த மாவை பரோட்டாவாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மூங்தால் பரோட்டா தயார்.

    உடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1 கப்
    அரிசி - 3 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    இஞ்சி - 1 இன்ச்
    சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.

    இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!

    இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
    பட்டாணி இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
    தேவையான பொருட்கள்

    பட்டாணி - கால் கிலோ
    பச்சை பயிறு - கால் கிலோ
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - அரை கட்டு
    வெங்காயம் - 1
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணி, பச்சை பயிரை 3 மணிநேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக கழுவி மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பட்டாணி பச்சை பயிறு அடை ரெடி.

    டயட்டில் இருப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பாலக்கீரை கோதுமை தோசை மிகவும் நல்லது. இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாலக்கீரை - 1 கப்
    கோதுமை மாவு - 1 கப்
    வெங்காயம் - 2
    இஞ்சி - 1 அங்குல துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரை, வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

    வதக்கிய கீரையை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகமாக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாலக்கீரை கோதுமை தோசை ரெடி.

    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று தினை வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை அரிசி - 1 கப்
    வெங்காயம் - 1
    கேரட்  - 1
    ப.மிளகாய் - 2
    தேங்காய் - 1 துண்டு
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்து - 2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - 2 கைப்பிடி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    தேங்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

    ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கேரட், தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்..

    பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்..

    காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

    மாவு நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் 15 வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தினை வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

    பொரியை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். இன்று பொரி, காய்கறிகளை சேர்த்து சுவையான சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    அரிசி பொரி - 2 பெரிய கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - 1 டீஸ்பூன்
    வேர்க்கடலை - 1/4 கப்
    எலுமிச்சம் பழம் - 1
     
    தாளிக்க:
     
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 4
    கறிவேப்பிலை - தேவைக்கு
    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டாணி - சிறிதளவு
    கொத்துமல்லித் தழை - சிறிது

    செய்முறை :

     
    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
     
    ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
     
    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
     
    வெங்காயம், தக்காளி சற்று வதங்கியவுடன், அதில் உப்பு, மஞ்சள்தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.
     
    பின் அதில் ஊறவைத்தப் பொரி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
     
    அடுத்து அதில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி அதன் மேல் கேரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
     
    சுவையான அரிசி பொரி உப்புமா ரெடி.

    ×