என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 96154"

    கூகுள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் புது வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு மாடலின் வெளியீடு இந்த ஆண்டு நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கிறது. அளவில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z போல்டு 3 மாடலின் அளவில் இருக்கும் என்றும் இதில் LTPO மற்றும் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் அதிகபட்சம் 120Hz வரை வழங்கப்படும் என தெரிகிறது. 

     மடிக்கக்கூடிய பிக்சல் போன்

    கூகுள் பிக்சல் போன் மாடலில் 7.6 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இந்த மாடல் எந்த மாதிரியாக மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மாடல் செங்குத்தாக மடிக்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு 12L ஓ.எஸ்-ஐ வெளியிட்டது. இது டேப்லெட், மடிக்கக்கூடிய மற்றும் குரோம் ஓ.எஸ். சாதனங்களுக்காக ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு 12 வெர்ஷன் கொண்டிருக்கிறது. 
    இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு IAMAI எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.
    இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்திய இணைய பாதுகாப்பு விதிகள் "நம்பிக்கையை விட அச்சத்தின் சூழலை" உருவாக்கும், உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது, விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஒரு வருட தாமதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    பேஸ்புக், கூகுள் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI), இந்த வாரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.

    cyber

    மற்ற மாற்றங்களுக்கிடையில், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT) உத்தரவின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற சம்பவங்களைக் கவனித்த ஆறு மணி நேரத்திற்குள் தரவு மீறல்களைப் புகாரளிக்க வேண்டும் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஐடி மற்றும் தகவல் தொடர்பு பதிவுகளை பராமரிக்க வேண்டும் என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை 72 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. சர்வதேச அளவில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT), அமேசான் மற்றும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) போன்ற கிளவுட் சேவை வழங்குநர்களை, நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு தங்கள் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் IP முகவரிகளைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய உத்தரவுகள் "பெரிய" பாதிப்பை ஏற்படுத்தலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்ப்ட்டு உள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கின்றன. புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகாது என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

    இந்த நிலையில், கூகுள் பிக்சல் 5ஏ போன்றே பிக்சல் 6ஏ மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தோற்றத்தில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் போன்றே காட்சியளிக்கின்றன. 

     கூகுள் பிக்சல் 6 சீரிஸ்

    புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனில் இரண்டு கேமரா சென்சார்கள், ஒற்றை எல்.இ.டி. பிளாஷ், பவர் பட்டன், வால்யூம் ராக்கர்கள் உள்ளன. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.2 இன்ச் பிளாட் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 12.2 எம்பி லென்ஸ், 16 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. 

    இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 சீரிஸ் மாடல்களின் பாஸ்ட் சார்ஜிங் வசதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வழங்கி இருக்கிறது.


    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் அதிகளவு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. தற்போது கூகுள், தனது புதிய பிளாக்‌ஷிப் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுடன் சார்ஜர் வழங்கப்படுவதில்லை. எனினும், கூகுள் 30 வாட் பாஸ்ட் சார்ஜரை தனியாக விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து பலரும் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

     கூகுள் பிக்சல் 6

    தற்போது கூகுள் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், புதிய பிக்சல் 6 மாடலில் 21 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 23 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது. 

    "பேட்டரி செல், சிஸ்டம் டிசைன், டெம்பரேச்சர், சிஸ்டம் யூசேஜ் மற்றும் ஸ்டேட் ஆப் சார்ஜ் உள்ளிட்ட காரணிகளே சார்ஜிங் ரேட்டை நிர்ணயிக்கிறது. எனினும், போனின் பேட்டரி குறையும் போது 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும்." என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    கூகுள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகமாகும் என கூறப்பட்டது. பின் இதன் வெளியீடு 2021 நான்காவது காலாண்டில் துவங்கும் என தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை ரத்து செய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டிஸ்ப்ளே வினியோக பிரிவை சேர்ந்த ராஸ் யங், பிக்சல் போல்டு மாடலின் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களின் முன்பதிவை கூகுள் ரத்து செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வரை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் வாய்ப்புகள் குறைவு தான் என்றும் அவர் தெரிவித்தார்.

     கூகுள் ஸ்மார்ட்போன்

    டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேக ஆண்ட்ராய்டு 12எல் ஓ.எஸ். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாக இருக்கிறது. இதன் காரணமாக பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் இதே காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. இதை உணர்த்தும் குறியீடுகளும் கூகுள் கேமரா செயலியில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஆவடி அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரை தாக்கி கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆவடி:

    குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம வாலிபர் ஒருவர் வண்டியை வழிமறித்து லிப்ட் கேட்டார். அந்த நேரத்தில் மேலும் 2 வாலிபர்கள் அங்கு வந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள மோதிரம், தங்க சங்கிலியை பறித்தனர்.

    மேலும் அஜித்குமாரின் செல்போனை பறித்து அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ. 13 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பினர்.

    பின்னர் அஜித்குமாரை முட்புதரில் தள்ளிவிட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறித்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து அஜித்குமார் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விபரத்தை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

    கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

    இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

     கூகுள் 2-ஸ்டெப் வெரிபிகேஷன்

    நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.
    ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குவதை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.



    ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றன. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இங்கிலாந்து சார்பில் நடத்தப்படும் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் வண்ணமிகு அனிமேஷன் காட்சிகளுடன் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் வலைதளத்தை திறக்கும் போது லோகோவுக்கு அடுத்து நான்கு புள்ளிகள் இடம்பெற்றிருக்கிறது.



    அதனை க்ளிக் செய்ததும் கூகுள் வார்த்தையில் O மற்றும் L எழுத்துக்கள் கிரிக்கெட் பந்து மற்றும் விக்கெட்களாக மாறும் அனிமேஷன் காட்சிகள் தோன்றுகிறது. இத்துடன் டூடுளை க்ளிக் செய்ததும் கூகுள் சர்ச் பக்கம் ஒன்று திறக்கிறது. அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சார்ந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இந்த பக்கம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிறைவுறும் வரை இருக்கும். இன்று துவங்கும் முதல் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இரண்டாவது போட்டி நாளை மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மோதுகின்றன. 
    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.



    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து 2019 பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூப் தளத்தில் நேரலை செய்ய இருக்கின்றன. நேரலையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் நேரலை செய்யப்படுகின்றன.

    கூகுள் மற்றும் பிரசார் பாரதி ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழாவினை மே 23 ஆம் தேதி கொண்டாட இருக்கின்றன. கொண்டாட்டத்தின் அங்கமாக 2019 பொது தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்ய இருப்பதாக பிரசார் பாரதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்தியா முழுக்க யூடியூப் தளத்தை எங்கிருந்து இயக்கினாலும் வலைதள பக்கத்தின் முகப்பு பகுதியில் டி.டி. நியூஸ் வழங்கும் தேர்தல் முடிவுகள் இடம்பெறும். தேர்தல் முடிவுகள் யூடியூப் தளம் மற்றும் மொபைல் செயலி என இரண்டிலும் நேரலை செய்யப்படும் என பிரசார் பாரதியின் சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார். 



    கூகுள், செயலி மற்றும் வலைதளத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

    யூடியூப் தளத்தில் முகப்பு பகுதியில் தோன்றும் இணைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும், டி.டி. நியூஸ் யூடியூப் சேனல் திறக்கும். இதுதவிர டி.டி. சேவை கிடைக்கும் 14 இதர மொழிகளில் நேரலையை பார்க்க முடியும். 

    இவ்வாறு செய்யும் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சார்ந்த விவரங்களை வெவ்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்க முடியும். இத்துடன் விவரங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மேலும் கூகுள் மற்றும் பிரசார் பாரதி இணைந்து செயல்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும் என சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார்.
    கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் தான் அதற்கு சரியானதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை கூகுளின் விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன. 

    புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன்களில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிய காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் (iFixit) தெரிவித்துள்ளனர். iFixit விமர்சகர்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL மாடல்களுக்கு சரி செய்யக்கூடிய வசதிகள் நிறைந்த விஷயத்திற்கு 6/10 புள்ளிகளை வழங்கியிருக்கின்றனர். 



    2019 விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் உபகரணங்கள் அதிநவீனமாக இருப்பதால், இவற்றை எளிதில் சரி செய்திட முடியும் என தெரிவித்திருக்கின்றனர். புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே மட்டுமே கடினமாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

    மேலும் சோதனையின் போது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான வைப்ரேட்டர் மோட்டார் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் பேட்டரியை மாற்றுவது எளிமையான காரியமாகவே இருக்கிறது.

    பிளாஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கும் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.39,999 மற்றும் ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீக்கப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். #Google



    தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கக் கூடாது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருக்கும் அறிக்கையில், பயனர் விவரம் மற்றும் தனியுரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு பற்றி விளக்கமளித்து இருக்கிறார். 

    "தனியுரிமை உலகவாசிகள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக கிடைக்க வேண்டும். கூகுளின் நிலைப்பாடு தனியுரிமையை அனைவருக்கும் சமமானதாக மாற்றுவது தான். மக்கள் தங்களது தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அவை எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். உலகம் முழுக்க நான் சந்திப்பவர்கள் இதுபற்றி என்னிடம் கேட்கின்றனர்.



    "தனியுரிமை தனித்துவமானது. இதனால் நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனிப்பட்ட விருப்பங்களை வழங்க வேண்டும். கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை அனைவருக்குமான சேவைகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

    இதன் காரணமாகவே கூகுள் பதில்கள் உலகம் முழுக்க சமமாக ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. கூகுள் தேடல்களில் அனைவரும் சமமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது." இவ்வாறு சுந்தர் தெரிவித்திருக்கிறார்.

    முன்னதாக கூகுள் நிறுவனம் தனது IO2019 டெவலப்பர்கள் நிகழ்வில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
    கூகுள் நிறுவனம் தனது IO2019 நிகழ்வில் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டிருக்கிறது. #IO2019



    கூகுள் நிறுவனம் தனது IO2019 டெவலப்பர்கள் நிகழ்வில் கூகுள் சர்ச், கூகுள் லென்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளில் வழங்க இருக்கும் அம்சங்களை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் புதிய அம்சங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. அவ்வாறு டார்க் தீம், பில்ட்-இன் 5ஜி வசதி, ஸ்மார்ட் ரிப்ளை, ஃபோகஸ் மோட் உள்ளிட்டவை ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

    5ஜி மற்றும் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கான வசதி

    ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் மடிக்கக்கூடிய சாதனங்களில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் முதல் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு கியூ இருக்கிறது. கூகுள் நிறுவனம் தனது டெவலப்பர்களுக்கு வேகமான கனெக்டிவிட்டி வழங்கவும், கேமிங் மற்றும் ஏ.ஆர். (ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி) அனுபவத்தை மேம்படுத்தும் டூல்களை வழங்குகிறது.



    லைவ் கேப்ஷன் அம்சம்

    கூகுள் அறிவித்திருக்கும் அடுத்த அம்சம் காது கேட்பதில் குறைபாடு கொண்டிருப்பவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. லைவ் கேப்ஷன் என அழைக்கப்படும் இந்த அம்சம் பயனர் ஒரு க்ளிக் செய்ததும், போனில் இயங்கும் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும். குரல் ஒலிக்கத் துவங்கியதும் கேப்ஷன்கள் தானாக திரையில் தோன்றும். இந்த அம்சம் வைபை அல்லது மொபைல் டேட்டா உள்ளிட்டவற்றில் இயங்கும்.

    நோட்டிஃபிகேஷன்களுக்கு ஸ்மார்ட் ரிப்ளை

    கூகுள் தனது புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய அம்சம் அனைத்து மெசேஜிங் செயலிகளுக்கான நோட்டிஃபிகேஷன்களுக்கு ரிப்ளை அனுப்ப பரிந்துரைக்கும்.



    பிரத்யேக பிரைவசி பகுதி

    ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் கூகுள் பிரத்யேக ‘பிரைவசி செக்‌ஷன்’ ஒன்றை செட்டிங்ஸ்-இல் கொண்டு வருகிறது. இது ஒற்றை இடத்தில் மிகமுக்கிய கண்ட்ரோல்களை இயக்க வழி செய்கிறது. லொகேஷன் டேட்டாவை இயக்க புதிதாக லொகேஷன் அம்சம் சேர்க்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எந்தெந்த செயலிகளுக்கு லொகேஷன் விவரங்களை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். 

    ஃபோகஸ் மோட்

    மொபைல் போனின் பயன்பாட்டை பயனர்கள் சிறப்பாக இயக்க ஏதுவாக கூகுள் ஃபோகஸ் மோட் அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் செயலிகளை தேர்வு செய்து அவற்றை சைலண்ட் மோடில் வைக்க முடியும். ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யாமலேயே செக்யூரிட்டி அப்டேட்களை பெறலாம்.



    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்பில் இன்று முதல் 13 பிராண்டுகளை சேர்ந்த சுமார் 21 சாதனங்களில் வழங்கப்படுகிறது.
    ×