search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Kudal"

    • தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் கூடல் விழா ஆண்டுக்கு 3 முறை நடைபெறுகிறது.
    • போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

    உடுமலை:

    தமிழ் மன்றத்தை மேம்படுத்தும் விதமாக அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்திடும் வகையிலும், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் கூடல் விழா ஆண்டுக்கு 3 முறை நடைபெறுகிறது. உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது.

    பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயா தலைமையேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இலக்கிய மன்ற செயலாளர் சின்னராசு வரவேற்புரை ஆற்றினார்.உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயராஜ் ,மஞ்சுளா முன்னிலை வகித்தனர் . முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ் தமிழ் தொன்மை குறித்து சிறப்புரை ஆற்றினார். தமிழ் கூடல் நிகழ்வையொட்டி 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது.போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

    மாணவிகள் கனிஷ்கா, சோபியா ரேணு, ஸ்ரீதா, ஜெயச்சித்ரா, ஜீவிகா,மிருதுளா அர்ஷின்சனா ஆகியோர் பேசினர்.

    முடிவில் தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். தமிழ் ஆசிரியர்கள் தைலியண்ணன், சிவசுந்தரி, கார்த்திகா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    ×