என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu minister"

    • இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி கடிதம்.
    • தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05.09.2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகுகளையும் விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆழமாக பாதிக்கும் கவலைக்குரிய விஷயத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை, மிகவும் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை சிறைபிடித்துள்ளதாகவும் தனது நடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்தப் பாரப்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழ்வதாகவும், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 21-07-2024 அன்று IND- IN-12-MM-5900 1 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 13-09-2024 அன்று 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்ததாகவும், இது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, இயங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும் தாயகத்திற்குத் திரும்பி அழைத்து வரவும் மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்க் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • "பனை நடவு திருவிழா 2024 - 2025" என்ற பெயரில் இன்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாமல்லபுரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அருங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில், வனத்துறை சார்பில் ஒரு கோடி பனை மரம் நடும் நெடும் பணியின் ஒரு பகுதியாக "பனை நடவு திருவிழா 2024 - 2025" என்ற பெயரில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான அனாமிகா ரமேஷ், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.எல்.ஆர்.இதயவர்மன், அருங்குன்றம் ஊராட்சி தலைவர் மற்றும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து, அமைச்சர் அங்கு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமது தமிழக பாரம்பரிய மரமான பனை மரங்களை காக்கும் விதமாக ஆண்டிற்கு ஒரு கோடி பனை மரங்கள் வளர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

    இதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் விதைகள் நட முடிவு செய்துள்ளோம். இதுவரை 3.31லட்சம் விதைகள் இதுவரை நடவு செய்துள்ளோம். இன்று மட்டும் ஒரு லட்சம் நட்டுள்ளோம் மீதமுள்ள விதைகள் இம்மாதம் இறுதிக்குள் நடவுள்ளோம்.

    மாமல்லபுரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அங்குள்ள அரசு பேருந்து பணிமனையை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த சின்ன சின்ன வசதிகள் குறைபாடுகளை சரி செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×