என் மலர்
நீங்கள் தேடியது "Tamizhaga Vettri kazhagam"
- தமிழக வெற்றிக் கழம் கட்சி கொடி சில நாட்களில் அறிமுகமாகிறது.
- த.வெ.க. கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி கட்சி கொடி அறிமுக விழா நடைபெற உள்ள நிலையில், கொடியேற்றி ஒத்திகை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
எனினும், இது தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், 45 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. கட்சி கொடி அறிமுக விழாவில் பங்கேற்க தொகுதி வாரியாக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
- கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.
இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு உடன்படாத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஒரே படத்தை இரு கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறியுள்ளனர்.
- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [த.வெ.க.] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து இன்றுநடைபெற்றது.
- விஜய் அரசியல் கொள்கையை மிகவும் ஆவேசத்துடன் பேசினார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [த.வெ.க.] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் விஜய் அமர்ந்திருக்க கட்சியினர் உரையாற்றி வருகின்றனர். அதன்படி மேடையில் உரையாற்றிவரும் கட்சி பிரமுகர்கள் தவெகவின் கொள்கைகளை எடுத்துரைத்தனர்.
அதன்படி, வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே கட்சியின் முதல் கொள்கை என எடுத்துரைத்தனர்.
தற்பொழுது விஜய் அரசியல் கொள்கையை மிகவும் ஆவேசத்துடன் பேசினார். அப்பொழுது அவர் "மக்களுக்கு கொண்டு வர அரசியல் திட்டம் எல்லாம் மிகவும் பிராடிக்கலாக இருக்க வேண்டும். வொர்க் அவுட் ஆகாத திட்டம் எல்லாம் நமக்கு தேவையில்லை. அப்பொழுது அவர் "மீன் பிடிச்சு கொடுக்க கூடாது அது தப்பு மக்களுக்கு மீன் பிடிக்க கத்துக் கொடுக்கனும் அப்படி இப்படி சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா எங்களோட அரசியல் திட்டமே வேற முடிஞ்சவங்க மீன் பிடிக்கட்டும் முடியாதவங்களுக்கு நாம மீன் பிடிச்சு அவங்களுக்கு கொடுத்து வாழவைப்போம்."
"நம்மளோட அரசியல் கட்சி எப்பயும் எதார்த்தமா இருக்குங்க . இந்த மாற்று அரசியல் , மாற்று சக்தி, அத பண்றேன் இத பண்றேன்னு இந்த ஏமாத்து வேலை செய்ய இங்க வரலங்க. ஐயா ஏற்கனவே 11-12 இருக்குற அரசியல் கட்சில நானும் ஒரு ஆளா மாற்று அரசியல்-ன்னு சொல்லிகிட்டு . இந்த எக்ஸ்டரா லக்கேஜ்ஜா நான் இங்க வரல ப்ரோ. மாற்று அரசியல் மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் வேலை இல்லை. ஏமாற்று சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தான் எங்களது வேலை." என கூறினார்.
இவரது பேச்சில் மீன் கதை மற்றும் மாற்று அரசியல் பற்றிய கருத்துக்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானை த.வெ.க. தலைவர் விஜய் தாக்கியதாக நெட்டிசன்கள் கூறியதாக பகிர்ந்து வருகின்றனர்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
- கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டு திடலில் ராம்ப்-ல் நடந்து சென்ற விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டை வீசிய நிலையில், அதனை தனது கழுத்தில் அன்போடு அணிந்த படி விஜய் நடந்து சென்றார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. இதற்கடுத்து தலைவர் விஜய் அவரது அரசியல் பிரவேசத்தை ஆவேசமாக தொடங்கி அவரது கட்சி கொள்கை பற்றியும் , அவரது சித்தாந்தத்தை அவரது ஸ்டைலில் மிகவும் உறுதியோடு பேசி அரங்கை அதிரவைத்தார்.
இவரது பேச்சு முடிந்தப்பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயர் விளக்கமும். கட்சி கொடியின் வண்ணம் குறித்த விளக்கத்தை அவரது சொந்த குரலில் பேசி விளக்கத்தை தரும் வீடியோவை விழாவில் ஒளிப்பரப்பானது.
அந்த வீடியோவின் ஆரம்பத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களே.. ஒரு அடையாளமா மாறனும்னா, நம்மளோட பெயரயே நாம அடையாளமா மாத்தனும். கட்சியின் மையச்சொல்லாகவும் மந்திர சொல்லாகவும் வெற்றி என்ற சொல்லை வைத்துள்ளோம்.
தமிழர்களின் அகம் தமிழகம் என்பதனால் நம் கட்சியின் முதல் சொல் தமிழகம் என வைத்துள்ளோம். மூன்றாவது சொல்லான கழகம். கழகம் என்றால் அடல் பயிலும் இடம் என்ற ஒரு அர்த்தம் இருக்கிறது. அதேப்போல் நம் இளம் சிங்கங்கள் பயிலும் இடமாக நம் கட்சி இருக்கும். அரசியல் உலகின் அணையா சுடராக இருக்கும் நமது தமிழகம் வெற்றி கழகம். அதைத் தொடர்ந்து கட்சி கொடியின் வண்ணம் குறித்த விளக்கத்தைப் பற்றி அந்த வீடியோவில் பேசிருந்தார்.