என் மலர்
நீங்கள் தேடியது "Tej Pratap yadav"
- காவலரை நடனமாடுமாறு முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
- நடனம் ஆட காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மார்ச் 14 அன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக பீகாரில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது.
பீகாரில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை நடனமாடுமாறு தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
நடனம் ஆட காவலர் மறுக்கவே, நடனம் ஆடுகிறாயா? இல்லை உன்னை சஸ்பெண்ட் செய்யவா? என அமைச்சர் மிரட்ட, வேறு வழியில்லாமல் காவலர் நடனம் ஆடியுள்ளார்.
அமைச்சரின் வற்புறுத்தலால் காவலர் நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சீருடையில் நடனமாடிய காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக வேறொரு காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகாபாரத சீரியல் காட்சிகளை எடிட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
- அவரது கனவில் முழு மகாபாரதமும் எப்படி ஓடுகிறது பாருங்கள்? என்று சிலர் வேடிக்கையாக கூறி உள்ளனர்.
பாட்னா:
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், இன்று அதிகாலையில் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தூங்கும்போது பகவான் கிருஷ்ணர் தனது கனவில் தோன்றி விஸ்வரூப தரிசனம் அளித்தாக ட்வீட் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் தேஜ் பிரதாப் யாதவ் கண்களை மூடிக்கொண்டு படுத்திருப்பதை முதலில் காண முடிகிறது. பின்னர் அவர் கனவு காண்பது போல் கண்கணை சிமிட்டுவது தெரிகிறது. அதன்பின், மகாபாரதம் சீரியலில் வருவது போல் போர்க்களத்தில் குதிரைகள் வருவது தெரிகிறது. அத்துடன் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் தெரிகிறது. உடனே தேஜ் பிரதாப் யாதவ் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் அமர்கிறார்.
கனவில் விஸ்வருப தரிசனம் கொடுத்ததாக கூறி, மகாபாரத சீரியல் காட்சிகளை எடிட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் தேஜ் பிரதாப் யாதவ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் கேலி கிண்டல் செய்தவண்ணம் உள்ளனர்.
அவரது பழைய வீடியோவையும் நெட்டிசன்கள் நினைவுபடுத்தி ட்ரோல் செய்து வருகின்றனர். கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் போன்று வசனம் பேசி அவர் செய்த டிக்டாக் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
அவரது கனவில் முழு மகாபாரதமும் எப்படி ஓடுகிறது பாருங்கள்? என்று சிலர் வேடிக்கையாக கூறி உள்ளனர். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும், அதன்பிறகு தேஜ் பிரதாப் யாதவுக்கும் எப்படி இவ்வளவு பெரிய விஸ்வரூபத்தை காட்டியிருக்கிறார்? என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப்.
இவருக்கும், பீகார் எம்.எல்.ஏ. சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ரூ.100 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த திருமணம் தற்போது விவாகரத்துக்கு வந்துள்ளது.
திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கேட்டு தேஜ் பிரதாப் பாட்னா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிறையில் உள்ள லாலுபிரசாத் யாதவ் தன்னை பார்க்க உடனடியாக வருமாறு தேஜ்பிரதாப்புக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து அவர் தந்தையை பார்க்க சென்றார்.
தந்தையை பார்த்து விட்டு ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பும்போது தேஜ்பிரதாப் யாதவ் திடீரென மாயமானார். போதிகயாவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது அவர் மாயமானார். தேஜ்பிரதாப் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. #TejPratapYadav

இந்த நிலையில் தேஜ் பிரதாப் நேற்று பாட்னாவில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஐஸ்வர்யாவுடன் தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பவில்லை. ஏனெனில் இருவருக்கும் இணக்கமாக செல்வதில் பிரச்சினை உள்ளது. எனவே விவாகரத்து அளிக்கும்படி வேண்டுகிறேன்’ என்று கூறப்பட்டு உள்ளது.
கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பின்பு ராஞ்சி நகரில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் தந்தை லாலு பிரசாத்தை, தேஜ் பிரதாப் சந்தித்து பேசினார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #TejPratapYadav