என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumavalvan"

    • வி.சி.க. சார்பில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
    • இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்.

    திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை காலடிப்பேட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அன்ன தானம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். அதன்பின், செய்தியாளர்களிடம் தமிழிசை பேசியதாவது:

    மத்திய நிதி மந்திரி, ஜனாதிபதி என பெண்களுக்கு பல இடங்களில் பா.ஜ.க. முன்னுரிமை அளித்து வருகிறது. இங்குள்ள பெண்கள் சமையலறையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    திருமாவளவன் மதுவைப் பற்றி பேசும்போது ஏன் மதத்தைப் பற்றி பேசவேண்டும். திமுக கூட்டணியில் இருந்தால் 2026-ம் ஆண்டு வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்துகொண்டு விட்டார்.

    திருமாவளவன் நடத்தப் போகும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்பது புரியவில்லை. தி.மு.க.வில் இருக்கும் கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.

    தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என கூறியது தவறு. தேசிய கல்விக் கொள்கையில் அப்பட்டமான அரசியலை ஸ்டாலின் அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.

    • நாங்க கேட்குற டிமாண்ட்-லாம் பேசி, நிபந்தனையெல்லாம் உத்தரவாதப்படுத்தி அதுக்கப்பறம் அறிவித்தால் வெற்றிக்கரமாக நடத்த முடியும்.
    • அதிமுக போன்ற கட்சிகள் முன்கூட்டியே சொன்னால் கூட அதுக்கு மதிப்பு இருக்கு.

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார்.

    த.வெ.க. மாநாட்டில் கூடிய இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தின் அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணியை வரவேற்று அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தை விஜய் அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    மேலும் அவர் கூறியுள்ளதாவது:- உதாரணத்திற்கு விசிக, தவெக-வுடன் இணைவது என்றால் அதை நான் தான் ப்ரோபோஸ் பண்ணணும். அது டிமாண்ட். நாங்கள் உங்களுடன் வருவது என்றால் எத்தனை இடங்களை தருவீர்கள், என்ன மாதிரியான அதிகாரத்தை பகிர்ந்த கொள்ள முடியும். அப்போ நான் கேட்கலாம். எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்க. 4 பேருக்கு நல்ல அதிகாரம் உள்ள பதவி கொடுங்க. எங்களுக்கு 25 இடமாவது தாங்க. இதெல்லாம் தான் டிமாண்ட். நாங்க கேட்குற டிமாண்ட்-லாம் பேசி, நிபந்தனையெல்லாம் உத்தரவாதப்படுத்தி அதுக்கப்பறம் அறிவித்தால் வெற்றிக்கரமாக நடத்த முடியும்.

    அடுத்து, ஏற்கனவே 25 சதவீத ஓட்டை வைத்துக்கொண்டு இருக்கும் அதிமுக போன்ற கட்சிகள் முன்கூட்டியே சொன்னால் கூட அதுக்கு மதிப்பு இருக்கு. விஜய் பூஜ்ஜியத்தில் இருந்து தான் தொடங்கணும். அவர் இன்னும் களத்தில் வரலை. இதில் என்ன தெரிகிறது என்றால் நாம் ஆட்சிக்கு வரபோறதில்லை. சும்மா சொல்லிவைப்போம். சலசலப்பை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு. அவரே சொல்றாரு தனியா ஜெயிப்போம்... ஆட்சிக்கு வருவோம் என்கிறார். அது அவருடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வாழ்த்தணும். மக்கள் தான் அதை முடிவு பண்ணப்போறாங்க. ஓபன் அஜண்டாவை சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கும் போதே முன் கூட்டியே அறிவிக்கும்போது சுமார் 75 வருட அரசிய களத்தில் அனுபவம் பெற்ற அதிமுக, திமுகவும் எப்படி டீல் பண்ணும், கலைச்சி விடணும்-ங்கறது தெரியும்ல... என்றார். 

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொம்பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). இவர் நெய்வேலி என். எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்ஜோதி பாசு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×