என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruppugazh"

    • முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது.
    • கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் சீக்கிரமே திருமணம் நடைபெறும்.

    வைகாசி மாதத்தில் பூரணச்சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள்.

    விசாக தினத்தில் காலையில் குளித்துப் பூசை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்து.

    நைவேத்தியம் சமர்ப்பித்து பூசிக்க வேண்டும்.

    திருப்புகழ், கந்தர் சஷ்டிகவசம், கந்தர் அநுபூதி ஆகிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

    பூசை மேற்கொண்ட தினத்தில் இரவில் பால் மட்டும் உண்டு விரதமிருந்தால் பூரண பலன் கிடைக்கும்.

    கோவிலில் சென்று முருகனை அபிஷேக ஆராதனைகளுடனும் வழிபடலாம்.

    முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது.

    சந்நிதியில் நெய் விளக்குப்போடுவது சாலச்சிறந்தது.

    கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் சீக்கிரமே திருமணம் நடைபெறும்.

    • சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
    • சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ்-விஜயலட்சுமி தம்பதியின் மகள் விதுலா ஸ்ரீ (வயது 2).

    இந்த நிலையில் சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவரை அவரது பாட்டி அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிகளுக்கு பரத கலை ஆசிரியை ஒருவர் பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த சிறுமி விதுலா ஸ்ரீ தானாகவே பரதம் ஆட தொடங்கி உள்ளார். சிறுமியிடம் இருந்த திறமையை அந்தப் பரத நாட்டிய ஆசிரியை மட்டுமல்லாமல் கோவிலில் கூடி இருந்த அனைவரும் வியந்து பாராட்டினர். இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய திறமையா என மனதார பாராட்டினர்.

    இதையடுத்து விதுலா ஸ்ரீக்கு திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆட அந்த ஆசிரியை கற்றுக் கொடுத்தார்.

    பரத முத்திரைகள், சுலோகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்று கொடுத்தார். இதனை கற்பூரம் போல் உடனே பற்றிக் கொண்ட சிறுமி விதுலா ஸ்ரீ திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடி கற்றுக் தேர்ந்தார்.

    இதனை தொடர்ந்து சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறுமி விதுலாஸ்ரீ பங்கேற்று திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடியபடியே பரதமுத்திரை மற்றும் சுலோகங்கள் கூறி சாதனை படைத்தார்.

    சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

    ×