search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur Spirits"

    திருவாரூர் அருகே சாராய பாக்கெட்டுகளை கிராம மக்கள் ரோட்டில் வீசி அழித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே நாகக்குடி ஊராட்சிக்குட்பட்ட பன்ணை விளாகத்தில் ரவி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாக்கெட் சாராயத்தை மறைமுகமாக விற்பனை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாக்கெட் சாராயத்தை குடித்து அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் சாராய விற்பனையை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும் போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை பாக்கெட் சாராயம் விற்பனை செய்த ரவி, பாரதிமோகன், நெடுமாறன் ஆகிய 3 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், அங்கிருந்த சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை வீசினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சாராய வியாபாரிகள் 3 பேரையும் கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்’ என்று கூறினர். இதையடுத்து போலீசார், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடப்பட்டது. கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×