search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thodar"

    • கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.
    • இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

    இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தில் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது.

    இந்தநிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் உள்ள மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்து கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சி போல் கூரைவேயும் நிகழ்ச்சி இவர்களுக்கு முக்கியமானதாகும்.

    இதற்காக கோரக்குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கிடைக்கும் மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் புல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். தொடர்ந்து தங்களின் பாரம்பரிய உடை அணிந்து கூரை வேய்ந்தனர். அதன்பின் நேற்று மாலை கோவில் முன்பு அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சியில மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கோவில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். எனவே ஒருமாதமாக ஆண்கள் விரதம் மேற்கொண்டனர்.

    • தோடர் பழங்குடியினத்தில் இருந்து வரப்போகும் முதல் மருத்துவர். இது பெரிய சாதனை.
    • நீத்துசின் நீட் தேர்வில் 145 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

    ஊட்டி:

    நடப்பாண்டு நீட் நுழைவு தேர்வு கடந்த மே 7-ந் தேதி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 691 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

    நீட் தேர்வு முடிவுகள் கடந்த 13-ந் தேதி வெளியானது. இதில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி நீத்துசின் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    ஊட்டி கார்டன் மந்தை சேர்ந்தவர் நார்ஷ்தோர் குட்டன். இவரது மனைவி நித்யா. இந்த தம்பதியரின் மகளான நீத்துசின் நீட் தேர்ச்சி பெற்ற முதல் தோடர் இன மாணவி ஆவார்.

    மேலும் மருத்துவம் படிக்க போகும் முதல் மாணவி என்ற பெருமைக்குரியவர் என தோடரின மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து நீத்துசின் கூறும்போது, எங்கள் தோடர் இனத்தில் இருந்து மருத்துவம் படிக்கும் முதல் மாணவியான நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

    நான் மருத்துவம் பயின்று, வசதியற்ற மக்களுக்கும், எனது சமுதாயத்துக்கும் சேவை புரிவதே எனது நோக்கம் என்றார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் பிரியா நாஷ்மிகர் கூறியதாவது:-

    தோடர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நீத்து சின் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    இவர் தோடர் பழங்குடியினத்தில் இருந்து வரப்போகும் முதல் மருத்துவர். இது பெரிய சாதனை. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இவருக்கு கைகொடுத்தது. இவரின் சாதனை தோடர் பழங்குடியினருக்கு பெருமை சேர்ப்பதாகும்.

    இவரது வெற்றிக்குப்பிறகு பழங்குடியின குழந்தைகள் அனைவரும் உத்வேகத்துடன், தடைகளை தகர்த்து பெரிய உயரங்களை எட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நீத்துசின் நீட் தேர்வில் 145 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். எஸ்.டி. பிரிவு மாணவர்கள் தேர்ச்சி பெற 109 மதிப்பெண்கள் போதுமானது.

    ×