என் மலர்
நீங்கள் தேடியது "thoraipakkam"
- சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 47 வீடுகளை அகற்ற நோட்டீசு வழங்கப்பட்டது.
- வீடுகள் இடிக்கப்படுவதை கண்டதும் லட்சுமி என்பவர் மயங்கி விழுந்தார்.
சோழிங்கநல்லூர்:
துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம், வி.பி.ஜி. அவென்யூ மகாலட்சுமி நகர் பகுதியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இதனை அகற்ற வனத்துறையினர் முடிவு செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 47 வீடுகளை அகற்ற நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளு டன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் வீடுகளை இடிக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடம் துரைப்பாக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்மா, பன்னீர்செல்வம், ராஜா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடுகள் இடிக்கப்படுவதை கண்டதும் லட்சுமி என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கைதான அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
சோழிங்கநல்லூர்:
துரைப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள மகளிர் விடுதியில் காவலாளியாக பணியாற்றி வருபவர் காமராஜ்.
இவர் இரவு அறையில் தூங்கி கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது செல்போன் திருடு போனது தெரியவந்தது.
இந்நிலையில் காமராஜ் தனது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசியவர் நான்தான் செல்போனை திருடி உள்ளேன். 5000ரூபாய் கொடுத்தால் தான் செல்போனை கொடுக்க முடியும். திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே வந்து பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார்.
இது குறித்து காமராஜ் துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் பேரில் திருவான்மியூர் சென்று பணத்தை கொடுத்து விட்டு செல்போனை வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் திருச்சி துவரக்குறிச்சியை சேர்ந்த அப்துல் ஹமீம் என்பது தெரியவந்தது.அவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.