என் மலர்
நீங்கள் தேடியது "Tiger Sanctuary"
- 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தனர்.
- அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலய பகுதி வழியாக 3 பேர் சென்றுள்ளனர். நேபாளத்திற்கு செல்லும் வழி பாதையான இப்பகுதி வழியாக வன விலங்குகள் கூட்டமாக செல்வது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக சென்ற 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் 'செல்பி' எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 3 பேர் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் யானைகள் கூட்டமாக செல்லும் போது அவைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- சின்னமனூர் தென் பழநி வன சோதனை சாவடியில் விவசாயிகள் போராட்டம்.
- அரசு நாற்று பண்ணையில் கிடைக்கும் காபி, ஏல நாற்றுகளை செக்போஸ்டில் தடுக்கப்படுகிறது.
மேகமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
பட்டா விவசாய பூமியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புக்கு குடிநீர் வசதி செய்யவும், பழுது அடைந்த குடியிருப்புகளை சரி செய்ய தேவையான உபகரணங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது, அரசு நாற்று பண்ணையில் கிடைக்கும் காபி, ஏல நாற்றுகளை செக்போஸ்டில் தடுப்பது, பட்டா விவசாயிகள் ஏலம், தேயிலை, காபி ஸ்டோர்களை பழுது பார்க்க தடை செய்வது உள்பட பல செயல்களை கண்டித்து மேகமலை விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

சின்னமனூர் தென் பழநி வன சோதனை சாவடியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். விடியலை மறைக்கும் மேகமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.