search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tigers Died"

    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு 2023-ம் ஆண்டில் புலிகள் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
    • உத்தரபிரதேசத்தில் புலிகளின் தாக்குதலுக்கு 59 பேரும், மத்தியபிரதேசத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கையாகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலில் 349 பேர் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் மட்டும் 200 பேர் புலிகள் தாக்கியதில் பலியாகி உள்ளனர்.

    தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின் படி, 2019-ம் ஆண்டு 96 புலிகளும், 2020-ம் ஆண்டு 106 புலிகளும், 2021-ம் ஆண்டு 127 புலிகளும், 2022-ம் ஆண்டு 121 புலிகளும் மற்றும் 2023-ம் ஆண்டு 178 புலிகளும் இறந்துள்ளன. 2012-ம் ஆண்டுக்கு பிறகு 2023-ம் ஆண்டில் புலிகள் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

    மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன்சிங், 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021-ம் ஆண்டு 59 பேரும், 2022-ம் ஆண்டு 110 பேரும், 2023-ம் ஆண்டு 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் புலிகளின் தாக்குதலுக்கு 59 பேரும், மத்தியபிரதேசத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதம் ஆகும்.

    ×