என் மலர்
நீங்கள் தேடியது "TN Minister"
- பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும்.
- அனைத்துப் பள்ளிகளிலும் உடற் கல்வி மேம்படுத்தப்படும்.
பெரம்பலூரில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்டத்தில் தனி அலுவலகம் அமைத்து "ஆசிரியர் மனசு" என்ற பெட்டி வைக்கப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும் ஆசிரியர் மனசு என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சிறப்பான தேர்வு முடிவுகளை கொடுத்து தமிழ்நாட்டிற்கு முன்னோடி மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்களை பார்த்து மற்ற மாவட்ட ஆசிரியர்களும் தங்களது மாவட்டம் முன்னுக்கு வருவதற்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளரகளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்சோ சட்டத்தில் கைதான கரூர் மாவட்டம், பொம்மாநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மீது முதன்மை கல்வி அதிகாரியின் அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும் என்றும், ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றனர். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை அவரது அமைச்சகத்தில் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அமைச்சர்கள் அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதிக்குழு 2017-18-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியத்தின் 2-வது தவணையாக ரூ.1,390 கோடி ஒதுக்குவதற்கு நீங்கள் தலையிட்டு, தொடர்ச்சியாக உதவி புரிந்ததற்காக நன்றி தெரிவிக்கிறோம்.
2017-18-ம் ஆண்டு செயல்திறன் மானியமாக ரூ.560.15 கோடியும், நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான 2018-19-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ.3,216.05 கோடியும் வழங்கவேண்டியது நிலுவையில் உள்ளது.
தமிழக மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்குவதற்கு நிதி இல்லாமல் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தவித்து வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியம் மற்றும் செயல்திறன் மானியம் ஆகியவற்றை மத்திய நிதி குழு ஒப்புதல் அளித்து விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் தமிழ்நாடு பொதிகை இல்லத்துக்கு அமைச்சர்கள் திரும்பினர். அப்போது அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
14-வது நிதிக்குழு மானியத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை உடனே பெற்றுத்தருமாறு ராணுவ மந்திரியிடம் கோரிக்கை வைத்தோம். கஜா புயலுக்கும் நிவாரண நிதியை உடனே அளிக்குமாறு கேட்டோம். நிதி கேட்க டெல்லிக்கு தொடர்ந்து வந்ததால்தான் 2 தவணைகள் வாங்க முடிந்தது.
தேர்தல் கூட்டணி பற்றி முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முடிவு எடுப்பார்கள். கூட்டணி பற்றி நாங்கள் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக எம்.பி.க்கள் நடத்திய கூட்டத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். தமிழகத்துக்கு எதிரான அந்த கூட்டத்தில் ஏன் பங்கேற்றீர்கள்? என்று அவரிடம் கேட்டீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்டார்.
அதற்கு வேலுமணி பதில் அளிக்கையில், கர்நாடகத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி. என்ற முறையில் அவர் அந்த கூட்டத்துக்கு போயிருப்பார். மேகதாது அணையால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள், பிரச்சனைகளை சொல்வதற்காகக்கூட போயிருக்கலாம். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அவரும் அப்படித்தான் இருப்பார் என்று நம்புகிறோம் என்றார்.
நிதி தொடர்பான கோரிக்கை வைக்க நிதித்துறை மந்திரி இருக்கும்போது, ராணுவ மந்திரியை சந்திக்க காரணம் என்ன? என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் கூறுகையில், உங்களது கண்ணோட்டமே தவறு. நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். கஜா புயலால் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் அதற்கு தேவையான நிதியை பெற்றுத்தருமாறு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் அவரை சந்தித்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்றார்.
பின்னர் அமைச்சர் தங்கமணி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அமைச்சர் வேலுமணி இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். #TNMinisters #SPVelumani #thangamani
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நிதி மந்திரியும் மின்சாரத்துறை மந்திரியுமான பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோருதல் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து பேச்சு நடத்தினார்கள்.
மத்திய அரசின் ஜவுளித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கைத்தறி ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் சார்பில் தேசிய அளவில் 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கான 28-வது ‘கைத்தறி ஏற்றுமதியாளர்கள் விருது’ வழங்கும் விழா சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு கைத்தறி ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் தலைவர் கே.என்.பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி பேசும்போது, ‘இந்தியாவில் சாதாரண நெசவாளர்களின் மாத வருமானம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தான் இருக்கும். எனவே மாதம் ரூ.20 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் சரக்கு சேவை வரியை செலுத்த தேவை இல்லை என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெளிவாக கூறி உள்ளது. இதனால் சிறு, குறு, நெசவாளர்கள் ஜி.எஸ்.டி.யை பற்றி கவலைப்பட தேவை இல்லை. இந்த கருத்தை நாம் அனைவரிடமும் எடுத்து செல்ல வேண்டும்’ என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு பதில் அளித்தார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து, 6 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்.