என் மலர்
நீங்கள் தேடியது "Tour"
பெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அரியலூர்:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
மதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ?பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.
பின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
மதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ?பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.
பின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கைலாஷ் மானசரோவருக்கு சுற்றுலா சென்ற திருப்பூர் பக்தர்கள் பத்திரமாக உள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
சீனா-நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.
இங்கு சுற்றுலா செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இந்த நிலைலயில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரையாக சென்றார்கள்.
தற்போது நேபாள நாட்டின் மலை பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தமிழக பக்தர்கள் 24 பேர் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களில் திருப்பூரை சேர்ந்த 12 பக்தர்களும் ஆவார்கள்.
திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஞானாலயா வள்ளலார் கோட்டதின் சார்பில் கைலாய மலைக்கு யாத்திரை சென்றனர். தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள்.
இது குறித்து ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் தலைவர் குமாரவேல் கூறியதாவது-
திருப்பூர் குமார் நகர் உள்பட பல பகுதிகளில் இருந்து 12 பேர் மற்றும் சேலம், கோவை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 18 பேர் கடந்த 23-ந் தேதி ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் சார்பில் திருஞானானந்தா சாமிகள் தலைமையில் கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா புறப்பட்டனர்.
அவர்கள் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் திருப்பூர் வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் நோபாள நாட்டில் சிமிகோட் பகுதியில் கடும் மேகமூட்டம், பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளனர்.
அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ மூலம் என்னிடம் பேசினார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி இருக்கிறார்கள்.
அங்குள்ள நிலைமைமையும் வீடியோ காட்சியாக படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளனர். பனிப்பொழிவு குறைந்ததும் அவர்கள் திருப்பூர் திரும்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனா-நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.
இங்கு சுற்றுலா செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இந்த நிலைலயில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரையாக சென்றார்கள்.
தற்போது நேபாள நாட்டின் மலை பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தமிழக பக்தர்கள் 24 பேர் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களில் திருப்பூரை சேர்ந்த 12 பக்தர்களும் ஆவார்கள்.
திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஞானாலயா வள்ளலார் கோட்டதின் சார்பில் கைலாய மலைக்கு யாத்திரை சென்றனர். தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள்.
இது குறித்து ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் தலைவர் குமாரவேல் கூறியதாவது-
திருப்பூர் குமார் நகர் உள்பட பல பகுதிகளில் இருந்து 12 பேர் மற்றும் சேலம், கோவை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 18 பேர் கடந்த 23-ந் தேதி ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் சார்பில் திருஞானானந்தா சாமிகள் தலைமையில் கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா புறப்பட்டனர்.
அவர்கள் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் திருப்பூர் வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் நோபாள நாட்டில் சிமிகோட் பகுதியில் கடும் மேகமூட்டம், பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளனர்.
அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ மூலம் என்னிடம் பேசினார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி இருக்கிறார்கள்.
அங்குள்ள நிலைமைமையும் வீடியோ காட்சியாக படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளனர். பனிப்பொழிவு குறைந்ததும் அவர்கள் திருப்பூர் திரும்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் உற்சாகமாக பணியாற்றுவதற்காக அந்தந்த தொகுதியில் உள்ள தொண்டர்களை இன்ப சுற்றுலா அழைத்து செல்ல அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வை பலப்படுத்தவும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 5 ஆயிரம் அ.தி.மு.க.வினரை குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அவர்களை சொகுசு பஸ்களில் அழைத்துச்செல்லவும், ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கி இருந்து குளித்து மகிழவும், உணவு, விருந்து உள்பட அனைத்துக்கும் அவரே ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கரூர் பாராளுமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான தம்பித்துரை மணப்பாறை தொகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களை புதன்கிழமை குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல 6 பஸ்களை ஏற்பாடு செய்து இருந்தார். இந்த 2 நாள் சுற்றுலாவின் போது திருச்செந்தூர் கோவிலுக்கும் சென்று வந்தனர்.
கரூர் தொகுதியில் உள்ள பஞ்சாயத்து அளவிலான அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் 200 பேரை, தம்பித்துரை இந்த மாதம் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச்செல்ல இருக்கிறார். வருகிற 21-ந்தேதி டெல்லி செல்லும் இவர்கள் ஆக்ரா மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்கள்.
திருச்சி எம்.பி. குமார் தனது ஆதரவாளர்கள் 50 பேரை நேற்று டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.
“நாங்கள் முதல் முறையாக விமானத்தில் செல்கிறோம். டெல்லியில் பாராளுமன்றம், மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு” செல்வோம். என்று அவர்கள் கூறினர்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கியுள்ளன. எனவே, அ.தி.மு.க. தொண்டர்களை உற்சாகப்படுத்துவற்காக இந்த சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினால், அவர்கள் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க.வினரை தயார்படுத்த முடியும். அதற்காகவே இந்த சுற்றுலா ஏற்பாடு என்று கூறப்படுகிறது.
இது போன்று அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்துவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் நடைபெறுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.வை பலப்படுத்தவும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 5 ஆயிரம் அ.தி.மு.க.வினரை குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அவர்களை சொகுசு பஸ்களில் அழைத்துச்செல்லவும், ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கி இருந்து குளித்து மகிழவும், உணவு, விருந்து உள்பட அனைத்துக்கும் அவரே ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கரூர் பாராளுமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான தம்பித்துரை மணப்பாறை தொகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களை புதன்கிழமை குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல 6 பஸ்களை ஏற்பாடு செய்து இருந்தார். இந்த 2 நாள் சுற்றுலாவின் போது திருச்செந்தூர் கோவிலுக்கும் சென்று வந்தனர்.
கரூர் தொகுதியில் உள்ள பஞ்சாயத்து அளவிலான அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் 200 பேரை, தம்பித்துரை இந்த மாதம் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச்செல்ல இருக்கிறார். வருகிற 21-ந்தேதி டெல்லி செல்லும் இவர்கள் ஆக்ரா மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்கள்.
திருச்சி எம்.பி. குமார் தனது ஆதரவாளர்கள் 50 பேரை நேற்று டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.
“நாங்கள் முதல் முறையாக விமானத்தில் செல்கிறோம். டெல்லியில் பாராளுமன்றம், மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு” செல்வோம். என்று அவர்கள் கூறினர்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கியுள்ளன. எனவே, அ.தி.மு.க. தொண்டர்களை உற்சாகப்படுத்துவற்காக இந்த சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினால், அவர்கள் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க.வினரை தயார்படுத்த முடியும். அதற்காகவே இந்த சுற்றுலா ஏற்பாடு என்று கூறப்படுகிறது.
இது போன்று அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்துவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் நடைபெறுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, கனடா நாடுகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒருவார பயணமாக முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று புறப்பட்டு சென்றார். #MaharashtraCM
மும்பை:
மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார்.
அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு செல்லும் அவர், அங்குள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பார்வையிடுவதுடன் அந்த தொழில்நுட்பங்களை மகாராஷ்டிர மாநிலத்தில் கையாள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
மேலும், மும்பை நகரை புனேவுடன் இணைக்கும் அதிநவீன சாலை வசதி தொடர்பான ஒப்பந்தத்தை செய்துள்ள விர்ஜின் குழுமத்தின் சான்பிரான்சிஸ்கோ நகர தலைமையகத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
பின்னர், கனடா நாட்டின் மான்ட்ரியல் நகருக்கு செல்லும் பட்னாவிஸ், உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை துறைகளில் செயற்கை நுன்னறிவை பயன்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். #tamilnews #MaharashtraCM
கோவை, திருப்பூர், நீலகிரியில் தொடங்க இருந்த நடிகர் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
கோவை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
கடந்த மாதம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர் இளைஞர்கள், மாணவர்களுடன் உரையாடினார்.
இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஜூன் 8, 9, 10-ந் தேதிகளில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் கோவை மண்டலத்தில் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த பயணத்தின் போது கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே கமல்ஹாசன் மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருந்தார்.
அந்த பொதுக்கூட்டங்களை விட கோவை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் வகையில் கொடிசியாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அவரது சுற்றுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரியில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி பணிகளில் தலைவர் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேர்காணல் சென்னையில் நடந்தது.
ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பெண் உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் அதனை சந்திக்க தயாராகும் வகையில் கட்சிக்கு தேவையான அடிப்படை வேலைகளை செய்து வருகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் அவரது கோவை மண்டல சுற்றுப்பயணம் தள்ளிப் போய் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
கடந்த மாதம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர் இளைஞர்கள், மாணவர்களுடன் உரையாடினார்.
இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஜூன் 8, 9, 10-ந் தேதிகளில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் கோவை மண்டலத்தில் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த பயணத்தின் போது கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே கமல்ஹாசன் மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருந்தார்.
அந்த பொதுக்கூட்டங்களை விட கோவை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் வகையில் கொடிசியாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அவரது சுற்றுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரியில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி பணிகளில் தலைவர் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேர்காணல் சென்னையில் நடந்தது.
ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பெண் உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் அதனை சந்திக்க தயாராகும் வகையில் கட்சிக்கு தேவையான அடிப்படை வேலைகளை செய்து வருகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் அவரது கோவை மண்டல சுற்றுப்பயணம் தள்ளிப் போய் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
கவர்னர்களின் மாத ஊதியத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.3½ லட்சமாக உயர்த்திய மத்திய அரசு, அவர்களுக்கான படிகளையும் உயர்த்தி தற்போது அறிவித்து உள்ளது. #Governor #Allowance
புதுடெல்லி:
மாநில கவர்னர்களின் மாத ஊதியம் மற்றும் படிகளை அந்தந்த மாநில அரசுகளே வழங்கி வருகின்றன. கவர்னர்களின் மாத ஊதியத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.3½ லட்சமாக உயர்த்திய மத்திய அரசு, அவர்களுக்கான படிகளையும் உயர்த்தி தற்போது அறிவித்து உள்ளது.
அதன்படி கவர்னர்களுக்கான சுற்றுப்பயணம், விருந்தினர் உபசரிப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவின படிகள் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காள கவர்னர் ரூ.1.81 கோடி பெறுகிறார். அடுத்ததாக தமிழக கவர்னருக்கு ரூ.1.66 கோடியும், பீகார் கவர்னருக்கு ரூ.1.62 கோடியும், மராட்டிய கவர்னருக்கு ரூ.1.14 கோடியும் வழங்கப்படும்.இதைப்போல கவர்னர் மாளிகை அலங்காரங்களை மாற்றுவதற்கான செலவினம், பராமரிப்பு செலவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் மேற்கு வங்காள கவர்னர் மாளிகை அலங்காரங்களை மாற்றுவதற்கு ரூ.80 லட்சமும், கொல்கத்தா, டார்ஜிலிங்கில் உள்ள கவர்னர் மாளிகைகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.72.06 லட்சமும் ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அலங்கார மாற்றுக்கு ரூ.7.50 லட்சமும், சென்னை மற்றும் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகைகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.6.5 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது. #Governor #Allowance #tamilnews
மாநில கவர்னர்களின் மாத ஊதியம் மற்றும் படிகளை அந்தந்த மாநில அரசுகளே வழங்கி வருகின்றன. கவர்னர்களின் மாத ஊதியத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.3½ லட்சமாக உயர்த்திய மத்திய அரசு, அவர்களுக்கான படிகளையும் உயர்த்தி தற்போது அறிவித்து உள்ளது.
அதன்படி கவர்னர்களுக்கான சுற்றுப்பயணம், விருந்தினர் உபசரிப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவின படிகள் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காள கவர்னர் ரூ.1.81 கோடி பெறுகிறார். அடுத்ததாக தமிழக கவர்னருக்கு ரூ.1.66 கோடியும், பீகார் கவர்னருக்கு ரூ.1.62 கோடியும், மராட்டிய கவர்னருக்கு ரூ.1.14 கோடியும் வழங்கப்படும்.இதைப்போல கவர்னர் மாளிகை அலங்காரங்களை மாற்றுவதற்கான செலவினம், பராமரிப்பு செலவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் மேற்கு வங்காள கவர்னர் மாளிகை அலங்காரங்களை மாற்றுவதற்கு ரூ.80 லட்சமும், கொல்கத்தா, டார்ஜிலிங்கில் உள்ள கவர்னர் மாளிகைகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.72.06 லட்சமும் ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அலங்கார மாற்றுக்கு ரூ.7.50 லட்சமும், சென்னை மற்றும் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகைகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.6.5 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது. #Governor #Allowance #tamilnews
கேரளாவில் 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை வழங்கி உள்ளார். #nipahvirus
திருவனந்தபுரம்:
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலர் உயிர் இழந்து உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் நர்சு என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்திருந்தனர்.
கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியான நர்சு லினிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நர்சுகள் அஞ்சலி செலுத்திய காட்சி.
நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்சு லினிக்கு திருவனந்தபுரத்தில் நர்சுகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #nipahvirus
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலர் உயிர் இழந்து உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் நர்சு என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்திருந்தனர்.
கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர், தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியான நர்சு லினிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நர்சுகள் அஞ்சலி செலுத்திய காட்சி.
நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்சு லினிக்கு திருவனந்தபுரத்தில் நர்சுகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #nipahvirus