search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traditional kittibull game"

    • தமிழர்களிடையே நட்பு மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய பாரம்பரிய விளையாட்டுகள் பல காணாமல் போய்விட்டன.
    • பொதுவாக சிறுவர்கள் மட்டும் விளையாடும் கிட்டிப்புல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் 1950-ம் ஆண்டு வரை நாட்டுப்புற விளையாடப்பட்டதாக இருந்தது.

    புதுச்சேரி:

    தமிழர்களிடையே நட்பு மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய பாரம்பரிய விளையாட்டுகள் பல காணாமல் போய்விட்டன.

    நொண்டி அடித்தல், பரமபதம், கில்லி - தாண்டு, கோலி குண்டு, பம்பரம், பச்சை குதிரை ஏறுதல், கண்ணாமூச்சி, தாயம் போன்ற விளையாட்டுகள் மறந்து, செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளாக மாறிவிட்டன. கில்லி எனப்படும் கிட்டிப்புல் தமிழர்களின் பழமையான விளையாட்டு.

    பொதுவாக சிறுவர்கள் மட்டும் விளையாடும் கிட்டிப்புல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் 1950-ம் ஆண்டு வரை நாட்டுப்புற விளையாடப்பட்டதாக இருந்தது.

    உடல் ஆரோக்கியம், உற்சாகம் மட்டுமின்றி குழு மனப்பான்மை, ஒற்றுமை உணர்வு, நட்பை பலப்படுத்துதல், துரித முடிவெடுக்கும் திறன் போன்ற அம்சங்களை இந்த விளையாட்டு உள்ளடக்கியிருந்தது.

    தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் புதுவையை சேர்ந்த கில்லி பாய்ஸ் குழு இறங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி புதுவை தேங்காய்திட்டு ஆச்சார்யா பள்ளி எதிரே கிட்டிபுல் போட்டியை இக்குழு நடத்தியது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிட்டி புல் குழுவினர் பங்கேற்றனர்.

    அமைச்சர் தேனீஜெயக்குமார் போட்டிகளை தொடங்கிவைத்தார்.

    விழாவில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பா.ஜனதா பிரமுகர்கள் சாம்ராஜ், காமராஜ், கில்லி பாய்ஸ் குழு தலைவர் பாரதி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாண்டிமெரினா மக்கள் மேடையில் பரிசளிப்பு இன்று  நடக்கிறது.

    போட்டிக்கான உதவிகளை சின்னதம்பி, சரவணன், முனியன், மகேஷ், கோவிந்தராஜ், சுரேஷ் உட்பட பலர் செய்திருந்தனர்.

    ×