என் மலர்
நீங்கள் தேடியது "Traffic regulations"
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் வேப்பேரி பகுதியில் விதிகளை கடைபிடித்த பயணிகளை பாராட்டினர்.
- போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் போலீசார் செயல்பட்டு வருகிறார்கள்.
சென்னை
சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை வேப்பேரி பகுதியில் இன்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாமல் முறைப்படி வாகனங்களை ஓட்டியவர்களை போக்குவரத்து போலீசார் பாராட்டினார்கள்.
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடியும் கார்களில் சீட் பெல்ட் அணிந்த படியும் பயணம் செய்த 100 பேருக்கு ரோஜா பூ வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையிலான போலீசார் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பயணம் செய்தவர்களை பாராட்டி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
- போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
- தனித்தனியாக சீருடைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கைகள் பல்வேறு பணிகளில் பணியாமத்தப்படுவார்கள் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்க ப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதற்காக தனி தனியாக சீருடைகளும் வடிவமைக்க பட்டு வருகின்றன. திருநங்கை படையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருநங்கை படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.
அதற்கு பிறகு ஐதராபாத் மாநகர பகுதியில் திருநங்கை படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.