என் மலர்
நீங்கள் தேடியது "traffic violations"
- வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேர் போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.
- மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக பயணிப்பவர்கள், ஒருவழிப்பாதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாகன சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போதிலும் கடந்த 2 மாதங்களாக மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2½ மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 82 ஆயிரத்து 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து சந்திப்புகளில் ஸ்டாப் லைன் என்று அழைக்கப்படும் நிறுத்த கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக 3 ஆயிரத்து 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேரும் போலீசில் சிக்கி இருக்கிறார்கள். 3 ஆயிரத்து 328 பேர் செல்போன் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டியதால் பிடிப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வணிக வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றதாக 7 ஆயிரத்து 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 33 ஆயிரத்து 331 பேர் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்று விடுபட்டு இருக்கிறார்கள். சீட் பெல்ட் அணியாமல் அவர்களை ஓட்டிச்சென்ற 2 ஆயிரத்து 26 1 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை போலீசார் வாகன சோதனை மூலமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் பிடித்து வருகிறார்கள்.
இதன்படி சென்னை மாநகரில் தாமாகவே முன் வந்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 293 சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலமாகவும் வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் எந்த சந்திப்பாக இருந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை இயக்காவிட்டால் நிச்சயம் மாட்டிக் கொள்வது உறுதி. இதுபோன்ற அபராதங்களை தவிர்க்க வேண்டும் என்றால் விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் வாகனங்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னையில் 10 போக்குவரத்து துணை கோட்டங்களிலும் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
- அண்ணாநகர் போக்குவரத்து துணை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.
புதிய சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து போலீசார் முதல் நாளான நேற்று அதிரடியாக அபராதம் விதித்தனர். சென்னையிலும் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டினார்கள்.
அந்த வகையில் சென்னையில் நேற்று முதல் நாளில் மட்டும் போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.15½ லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1100 பேரிடம் இருந்து உடனடியாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 10 போக்குவரத்து துணை கோட்டங்களிலும் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போலீசில் சிக்கினர். சென்னை மாநகர் முழுவதும் முதல் நாளான நேற்று மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள 1,500 பேருக்கு கையில் பணம் இல்லாததால் அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் உடனடியாக பணத்தை கட்ட முடியாவிட்டால் அவர்களிடம் அபராத ரசீது தொகையை போலீசார் கொடுத்து விடுவார்கள்.
அபராத தொகை நிலுவையில் இருப்பதாக பதிவு செய்து ரசீதை மட்டும் வழங்குவது வழக்கம். அந்த வகையில்தான் தற்போது பிடிபட்ட 2,600 பேரில் 1,500 பேருக்கு அபராதத்தை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் ஆன்லைன் வழியாக அபராதத்தை செலுத்தி கொள்ளலாம்.
அண்ணாநகர் போக்குவரத்து துணை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 99 பேரிடம் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 10 பேரிடம் இருந்து ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் பகுதியில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டிய 10 பேரும் போலீசில் சிக்கினர். இவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வகையில் அபராதம் வசூலித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் 2-வது நாளான இன்றும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு பலர் பயணிப்பார்கள். அதுபோன்று அறிமுகம் இல்லாத நபர்களை லிப்ட் கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர்களும் சிக்கினர். அவர்களுக்கும் போலீசார் ரூ.100 அபராதம் விதித்ததையும் காண முடிந்தது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், யாருக்கும் பாரபட்சம் காட்டப்படாது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என்று அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.
- சென்னையில் உள்ள போக்குவரத்து துணை கோட்டங்களில் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
- கடந்த 3 நாட்களில் மட்டும் போக்குவரத்து காவல்துறை 6,187 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை சமீபத்தில் தொடங்கியது. புதிய சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து போலீசார் அதிரடியாக அபராதம் விதித்தனர். சென்னையிலும் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டினார்கள். அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது போக்குவரத்து காவல்துறை
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும். யாருக்கும் பாரபட்சம் காட்டப்படாது என தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
- கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
- ஓட்டுனர் உரிம வழக்குகளை பொறுத்தவரையில் இதற்கு முன்னர் மாதம் 3500 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அது 589 ஆக சரிந்துள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அபராத நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000மும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இது போன்று பல்வேறு விதிமீறல்களுக்கும் நூற்றுக்கணக்கில் இருந்த அபராத தொகை ஆயிரங்களை தாண்டி உள்ளது. சென்னையிலும் புதிய அபராத வசூலில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2 மாதங்களில் ரூ 17 கோடியே 47 லட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. புதிய அபராத தொகை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு சென்னையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 27 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
ஆனால் புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு இந்த வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவாகும் வழக்குகள் ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளன. 97 ஆயிரம் வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீசார் விதிமீறலில் ஈடுபடுபவர்களை பிடித்து கடுமையாக அபராத தொகையை வசூலிப்பதால் போக்குவரத்து விதிமீறல்கள் வெகுவாக குறைந்துள்ளன.
அந்த வகையில் 60 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்திருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் பழைய அபராத முறை அமலில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எவ்வளவு? புதிய அபராத முறை அமலான பின்னர் பதிவாகி இருக்கும் வழக்குகள் எவ்வளவு? என்பது பற்றிய விவரம் வருமாறு:-
பழைய அபராத தொகை வசூலிக்கப்பட்டபோது ஒரு மாதத்தில் 94723 ஹெல்மெட் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. புதிய முறை அமலான பின்னர் இந்த வழக்கின் எண்ணிக்கை 41,790 ஆக குறைந்துள்ளது.
அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பழைய அபராத தொகையின்போது மாதத்துக்கு சராசரியாக 2461 என்கிற அளவில் இருந்துள்ளது. இது தற்போது 713 ஆக குறைந்துள்ளது.
சிக்னலை மீறி செல்பவர்கள் மீது போடப்பட்ட வழக்கு முன்னர் 7580 ஆகவும், தற்போது 2356 ஆகவும் உள்ளது. புதிய அபராத தொகை அமலான பின்னர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இந்த விதிமீறல் வழக்கின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது.
இதற்கு முன்னர் மாதத்துக்கு 11,788 வழக்குகள் போடப்பட்ட நிலையில் தற்போது சுமார் 4 ஆயிரம் வழக்குகளே பதிவாகி வருகின்றன.
ஓட்டுனர் உரிம வழக்குகளை பொறுத்தவரையில் இதற்கு முன்னர் மாதம் 3500 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அது 589 ஆக சரிந்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
புதிய அபராத முறை அமலுக்கு வந்த பிறகு போக்குவரத்து விதிகளை மீறினால் அபராத தொகை 5 முதல் 10 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள். இதன் காரணமாகவும், போக்குவரத்து போலீசாரின் தொடர் விழிப்புணர்வு காரணமாகவும் போக்குவரத்து விதிமீறல்கள் சென்னையில் குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்.இ.டி. கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.
- பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறக்கையில் கூறியிருப்பதாவது:-
* அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் நிறுவப்பட்ட TROZ ஒரு வெற்றிகரமான திட்டம் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 7,000 சலான்களை தானாக உருவாக்குகிறது.
மேலும் ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் TROZ புதிதாக நிறுவ ரூ.10.5 கோடி நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
* போக்குவரத்து விதிமீறல்களைப் பதிவு செய்ய 11 சந்திப்புகளில் 15 கேமராக்கள் நிறுவப்பட்டு ஐ.டி.ஆர்.எஸ் அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியில்லாத வழியில் செல்பவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டுபவர்களையும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்பவர்களையும் கண்டறிந்து தானாகவே இ-சலான் உருவாக்குகிறது.
* வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள இ-சலான் பற்றிய தகவல்களைப் பெற 12 அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்டது இந்த அழைப்பு மையங்கள் மூலம் மொத்தம் ரூ.28,97,46,750/-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்.இ.டி. கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.
பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது
பொதுமக்களுக்கு அதிக காவலர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக 186 முக்கிய சந்திப்புகளில் ரிமோட் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன.
* பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய 104 சந்திப்புகளில் ஒலிபெருக்கி மற்றும் பாடல்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
* சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள 47 ரோந்து வாகனங்கள் மூலம் விபத்து அழைப்புகள், 103 அழைப்புகள், சமூக ஊடக அழைப்புகள் வரும் இடங்களுக்கு விரைந்து சென்றும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளிலும் ரோந்து வாகனங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
* அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களுக்கு விபத்துக்கள் நடைபெறுவதற்கான நேரில் சென்று பார்வையிட்டு, காரணங்களை அறிந்து நெடுஞ்சாலை துறையினர், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் போக்குவரத்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் அடங்கிய குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும்.
சென்னை:
சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி இருக்கிறது.
மேலும் பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளதை போலீசார் உணர்ந்தனர். எனவே பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5 ஆயிரத்து 904 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர்கள், அதிவேகமாக வாகனத்தை சென்றவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்தனர்.
சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
- பதிவெண் கொண்ட வாகனங்களை மடக்கி பிடித்து உரிய அறிவுரைகளை வழங்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
- வேப்பேரி, புரசைவாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த அபராத வசூல் வேட்டை நடைபெற்றது.
சென்னை:
கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் வாகன பதிவெண்களில் பலர் கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் போட்டோக்களை எழுதி வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ பதிவெண்களை அரசின் விதிமுறைகளுக்கு முரணாக சிறியதாகவோ அல்லது தடிமனாகவோ அமைத்திருப்பர்.
இதுபோன்ற பதிவெண் கொண்ட வாகனங்களை மடக்கி பிடித்து உரிய அறிவுரைகளை வழங்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஒரு மாதமாக முறையாக வாகன பதிவெண்களை பராமரிக்காத நபர்களை பிடித்து போலீசார் எச்சரித்து வந்தனர்.
இந்தநிலையில் பதிவெண்களை முறைகேடாக அமைத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் இன்று அதிரடியாக தொடங்கினர்.
சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த அபராத வசூல் வேட்டை நடைபெற்றது. முதல்முறை சிக்கினால் ரூ.500 அபராதமும் 2-வது முறை பிடிபட்டால் ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
வேப்பேரியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு தலைமையிலான போலீசார் பதிவெண்களை முறையாக எழுதாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இது தொடர்பான நோட்டீஸ்களையும் வண்டியில் ஒட்டினர்.
சென்னை மாநகரம் முழுவதும் இந்த அதிரடி வேட்டை நடைபெற்றது.
- தினமும் 150 பேர் வரையில் மதுபோதையில் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.
- சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை மாநகரில் விபத்துகளை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதும், விபத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் மேற்பார்வையில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய தினமும் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 47 ரோந்து படையினர் போதை ஆசாமிகளை பிடிப்பதற்கு களம் இறக்கப்பட்டுள்ளனர்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை சோதனை செய்யும் போலீசார் மது குடித்திருக்கிறார்களா? என்பது பற்றி பரிசோதனை செய்கிறார்கள். இதில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அபராத தொகை உயர்த்தி வசூலிக்கப்படுவதால் போதையில் வீட்டுக்கு செல்பவர்கள் தவியாய் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தினமும் 150 பேர் வரையில் மதுபோதையில் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போதையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் வார இறுதி நாட்களில் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பெரும்பாலானோர் மது விருந்தில் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள் விருந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது போலீசார் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் மதுபோதையில் கும்பலாக சென்றும் பலர் மாட்டிக்கொள்கிறார்கள்.
இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் 250 பேர் வரை போலீசாரிடம் சிக்குகிறார்கள். இப்படி மாட்டிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுபோன்ற நேரங்களில் குடிமகன்களுக்கு ஒட்டுமொத்த போதையும் இறங்கி விடுகிறது என்றே கூறலாம். போலீசாரிடம் சிக்கியதும் சிலர், `என்ன... சார் தண்ணி அடிக்க மொத்த செலவே 500 ரூபாய்தான் ஆனது. நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறீர்களே' என்று வாக்குவாதம் செய்பவர்களும் உண்டு.
இவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அபராதம் விதித்த பின்னர் வாகனத்தை பறிமுதல் செய்து மாற்று வாகனத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.
ரூ.10 ஆயிரம் அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அவரது அசையும் சொத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட வாகனம் உள்ளிட்ட ஏதாவது அசையும் சொத்தை ஏலத்தில் விட்டு ரூ.10 ஆயிரம் அபராதத்தை வசூலிக்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற போலீசாரின் அதிரடியால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே குடிமகன்கள் தினமும் திண்டாடும் நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டூர்புரத்தை சேர்ந்த ராகுல், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவம்சி, கொருக்குபேட்டை அஜய், லோகேஷ் ஆகிய 4 வாலிபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தி.நகர் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
- போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
- குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கயம் :
காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனா்.
அதன்படி, காங்கயம் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய வாகனச் சோதனையில் குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக 625 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வளாா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.
- குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது.
- கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை செலுத்தாவிட்டால் அவர்களது வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கோர்ட்டு மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது.
- போதையில் வாகனம் ஓட்டுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
சென்னை:
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து போக்குவரத்து போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகிறார்கள். இப்படி போதையில் சிக்குபவர்களில் பலர் அபராதத்தை கட்டாமல் ரசீதை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள்.
இதுபோன்று அபராதம் செலுத்தாமல் இருப்பவர்களை கண்டுபிடித்து அபராதம் கட்ட வைப்பதற்காக போலீசார் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் குடிமகன்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது. இதன் காரணமாகவே போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்க திட்டமிட்டு அதை நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டு உள்ளது. ரூ.10 ஆயிரம் அபராதத்துக்கு பயந்து பலர் மது குடித்த பின்னர் வாகனங்களை ஓட்டுவதில்லை.
அதே நேரத்தில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்று போதையில் வாகனம் ஓட்டி அபராதம் கட்டாமல் 8119 பேர் போலீசாரை ஏமாற்றி வருகிறார்கள்.
இதுபோன்ற நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராத தொகையை வசூலிக்க போலீசார் கோர்ட்டு வரை சென்று வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவுகளையும் வாங்கி வைத்துள்ளனர். சென்னையில் 361 பேருக்கு எதிராக இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அவர்களது அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது போன்று அபராதம் கட்டாமல் தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் அனைவரது வாகனங்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுபோதையில் சிக்கி அபராதம் கட்டாதவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தை வசூலிக்க சென்னையில் 10 இடங்களில் அழைப்பு மையங்களை ஏற்படுத்தி போலீசார் அபராத வசூலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 2 மாதங்களில் இந்த அழைப்பு மையங்கள் மூலமாக 8674 போதை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.8 கோடியே 97 லட்சத்து 27ஆயிரம் 400 அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.
எனவே மதுபோதையில் சிக்கி அபராதம் கட்டாமல் இருப்பவர்கள் உடனடியாக தங்களது அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆன்லைனில் பணம் செலுத்தும் அனைத்து வழிகளிலும் பணத்தை செலுத்தலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.
- அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.
Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.
போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடையில் கேமராவைபொருத்தி வாகன போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்.
போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் கூடிய ரசீது மின்னஞ்சல், குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்.
அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.