என் மலர்
நீங்கள் தேடியது "Trains Stopped"
- வந்தே பாரத் ரெயில் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
- ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை 20 நிமிடம் காலதாமதமானது.
மேலும் அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரெயிலும் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.
அதன் பின்னர் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதன் வழித்தடத்தில் இயக்கப்பட்டன.
இதனால் ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
- ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை.
கரூர்:
கரூர்-திருச்சி ரெயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனை அப்பகுதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கலியமூர்த்தி பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறுதி செய்து கொண்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அதனை விரைவாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் சீரமைக்கும் இடத்திற்கு அருகிலும், வாஸ்கோடகாமா-வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் மாயனூர் ரெயில் நிலையத்திலும், கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் பாதி வழியிலும் நிறுத்தப்பட்டன.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு தண்டாவாளம் சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்கள் புறப்பட்டுச் சென்றன. ரெயில்வே பாதையில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த மாதம் கரூர்-திண்டுக்கல் ரெயில் பாதையில் மர்ம நபர்கள் இரும்பு துண்டு வைத்து தண்டாவாளத்தை சேதப்படுத்திய நிலையில், இன்று தண்டாவாளத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சதி செயல் உள்ளதா என ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.