என் மலர்
நீங்கள் தேடியது "TRB Raja"
- தமிழ்நாட்டின் GSDP கடந்த பல ஆண்டுகளாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில்தான் உள்ளது.
- விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், என்ன சாதனை செய்துவிட்டதாக தொழில் துறை மந்திரி கூறுகிறார் என்பது விந்தையாக உள்ளது.
அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் GSDP கடந்த பல ஆண்டுகளாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. 1960-ம் ஆண்டு முதலே தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு சில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் 8 முதல் 9 சதவீதமாகத்தான் இருந்து வருகிறது.
ஆனால் தொழில்துறை மந்திரி 26.1.2025 அன்று வெளியிட்ட அறிக்கையில், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டை இரண்டாம் இடத்திற்கு விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுதான் கொண்டு வந்ததுபோல் கூறுகிறார்.
1960-61-ல் 8.7%-ஆக இருந்த பங்களிப்பை, 2023-24-ல் 8.9% ஆக உயர்த்தியது திமுக-வின் பெரும் சாதனை என்று அவர் கூறுகிறார்.
அமைச்சர் கூறியபடி பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் இந்திய உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்களிப்பு கீழ்க்கண்டவாறு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1960-61 - 8.7%
1970-71 - 7.3%
1980-81 - 6.9%
1990-91 - 7.1%
2000-01 - 8.3%
2010-11 - 8.4%
2020-21 - 8.9%
2023-24 - 8.9%
மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைபடி GSDP அளவு
2016-17ல் 8.46%
2017-18ல் 8.57%
2018-19ல் 8.62%
2019-20ல் 8.68%
2020-21ல் 8.90%
2021-22ல் 8.72%
2022-23ல் 8.81%
2023-24ல் 8.90% என உள்ளது.
2023-24-ம் ஆண்டுக்கான, மேற்குறிப்பிட்டுள்ள விபரங்கள்கூட, முதற்கட்ட மதிப்பீடுதான். இறுதி மதிப்பீட்டில் இந்தப் புள்ளி விவரம்கூட மாறலாம்.
எனவே, 2020-21-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த, அதே 8.90% அளவிலேயே இந்தப் பங்களிப்பு உள்ளது.
நிலைமை இப்படி இருக்க, விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், என்ன சாதனை செய்துவிட்டதாக தொழில் துறை மந்திரி கூறுகிறார் என்பது விந்தையாக உள்ளது.

வெற்றறிக்கை வெளியிட்டு வரும் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், இந்த இரண்டாவது இடத்தைக்கூட குஜராத்தோ, உத்திரப் பிரதேசமோ பிடித்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டதுதான் உண்மை. தொழில்துறை மந்திரியின் பதிலைப் பார்ககும்போது, சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் வரும் என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது.
மேலும், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உள்நாட்டுத் தொழில் முதலீடுகள் மூலம் தமிழகத்தில் 10.07 லட்சம் கோடி முதலீடு என்று தொழில்துறை மந்திரி குறிப்பிடுவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே. பிற மாநிலங்களைப்போல டாவோஸ் நகரில் தமிழ்நாடு ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவில்லை என்பதற்கு பதில் இல்லை.
19.17 லட்சம் பேருக்கு 'நேரடி வேலை வாய்ப்பு' மற்றும் 31.53 லட்சம் பேருக்கு 'மொத்த வேலை வாய்ப்பு' என்ற அவரது கூற்று மீண்டும் ஒரு கற்பனையான விவரம்தான். உண்மையான முதலீடு எவ்வளவு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் கேட்ட கேள்விக்கு நேரடி பதில் இல்லை. மேலும், தொழிற்சாலைகள் வாரியாக விபரங்கள் தரப்படவுமில்லை. தமிழகத்தில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு உருவாக்கத்தின் தாக்கம் உண்மையில் இதுவரை தென்படவில்லை.
மொத்தத்தில் இந்தப் புள்ளி விவரம் ஒரு ஏட்டு சுரைக்காய்தான். அம்மாவின் ஆட்சிக் காலத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுபோல் உண்மையான முதலீட்டு விவரங்களைக் கேட்டு அம்மா அரசின் மீதும், தனிப்பட்ட முறையில் எங்களைக் குறிவைத்துத் தாக்கியும் அறிக்கை வெளியிட்டபோதுகூட 'அரைவேக்காடு' என்ற வார்த்தைகளை அம்மாவின் அரசு ஒருபோதும் பயன்படுத்தவில்லை.
ஆனால், தற்போது அரசுப் பதவியில் உள்ள விடியா திமுக-வின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், புள்ளி விவரத்துடன் கேட்கப்படும் எங்களது அறிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தனிப்பட்ட முறையில், அரசுப் பதவியில் இருக்கிறோம் என்ற நெறிமுறை சிறிதும் இன்றி வசைபாடி, குற்றம்சாட்டி சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கின்றனர்.
எங்கள் கேள்விகளுக்கு நேரடியான பதில் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்றும்; தற்போது, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எத்தனை போடப்பட்டது என்றும், அதில் இதுவரை உண்மையாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்றும், எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் எழுப்பிய கேள்விகளுக்கு, பிரச்சனையை திசை திருப்பாமல் நேரடியான, சரியான புள்ளி விவரங்களை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தொழில் துறை மந்திரி பதில் அளித்தால் நல்லது.
இவ்வாறு எஸ்.பி. வேலுமணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே!
- எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தியவர்களை மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா?
அவர்கள் எல்லாருமே குஜராத் ராஜஸ்தான் ஹரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு இரத்தம் கொதிக்கிறது.
ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள்.
இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே ?
இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!
இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களை போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?
அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா !? ஒரு கண்டனம்... கொஞ்சம் எதிர்ப்பு... அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அது கூடவா முடியாது?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது.
- ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன.
ஜப்பானைச் சேர்ந்த முரட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
மல்டிலேயர் செராமிக் கேபாசிட்டர் என்ற உதிரிபாகத்தை இந்த ஆலையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முராட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், "ஓராண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பயன் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும்" என்றார்.