என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » tried commit suicide
நீங்கள் தேடியது "tried commit suicide"
வேலை கிடைக்காத விரக்தியில் அளவுக்கு அதிக மாக மாத்திரை தின்று பெண் தற்கொலைக்கு முயன்றதால் ஜிப்மர் ஆஸ்பத்திரி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் காவலாளிகள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த வேலைக்கு டெண்டர் எடுத்தவரிடம் வானூர் அருகே சின்ன காட்ராம்பாக்கத்தை சேர்ந்த மதி என்பவரின் மனைவி சரசு (32) உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஆண்டு இந்த பணிகளுக்கு வேறு ஒருவர் டெண்டர் எடுத்ததால் சரசு உள்ளிட்டவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பணிகளை டெண்டர் எடுத்தவரே மீண்டும் பணிகளை டெண்டர் எடுத்து இருந்தார்.
ஆனால், டெண்டர் எடுத்தவர் பழைய ஆட்களை வேலைக்கு அமர்த்தாமல் புதிய ஆட்களை நியமித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சரசு உள்ளிட்ட 40 பேர் இன்று காலை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அவர்கள் பணிகளை டெண்டர் எடுத்த சூப்பர் வைசரிடம் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி முறையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
அந்த நேரத்தில் திடீரென சரசு தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனே சரசுவிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்து வீசினர்.
எனினும் வேலை கிடைக்காது என்ற விரக்தியின் உச்சத்துக்கு சென்ற சரசு அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை விழுங்கினார்.
இதில் மயங்கி விழுந்த சரசுவை அவருடன் வேலை கேட்டு வந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் காவலாளிகள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த வேலைக்கு டெண்டர் எடுத்தவரிடம் வானூர் அருகே சின்ன காட்ராம்பாக்கத்தை சேர்ந்த மதி என்பவரின் மனைவி சரசு (32) உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஆண்டு இந்த பணிகளுக்கு வேறு ஒருவர் டெண்டர் எடுத்ததால் சரசு உள்ளிட்டவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பணிகளை டெண்டர் எடுத்தவரே மீண்டும் பணிகளை டெண்டர் எடுத்து இருந்தார்.
ஆனால், டெண்டர் எடுத்தவர் பழைய ஆட்களை வேலைக்கு அமர்த்தாமல் புதிய ஆட்களை நியமித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சரசு உள்ளிட்ட 40 பேர் இன்று காலை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அவர்கள் பணிகளை டெண்டர் எடுத்த சூப்பர் வைசரிடம் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி முறையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
அந்த நேரத்தில் திடீரென சரசு தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனே சரசுவிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்து வீசினர்.
எனினும் வேலை கிடைக்காது என்ற விரக்தியின் உச்சத்துக்கு சென்ற சரசு அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை விழுங்கினார்.
இதில் மயங்கி விழுந்த சரசுவை அவருடன் வேலை கேட்டு வந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
×
X