என் மலர்
நீங்கள் தேடியது "TTD"
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- ஸ்ரீ வாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஏழுமலையானை தரிசனம் செய்தால், துன்பங்கள் நீங்கி, பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்பதால் திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் என தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி தொடங்கும் 2 ந்தேதியில் இருந்து 11-ந் தேதி வரை தினமும் 2000 பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஸ்ரீ வாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. அதன்படி ஸ்ரீ வாணி டிரஸ்ட்க்கு ரூ.10 ஆயிரமும், தரிசனத்திற்கு ரூ.300 என ரூ.10,300 செலுத்தி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பக்தர்கள் பதிவு செய்தனர்.
இந்த டிக்கெட் பெற்ற பாக்தர்கள் மகா லகு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 68,469 பேர் தரிசனம் செய்தனர். 27,025 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- சொர்க்கவாசல் தரிசனத்தில் 10 நாட்கள் அனுமதி.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்று 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- சொர்க்கவாசல் தரிசனத்தில் 10 நாட்கள் அனுமதி.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- ஜனவரி 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
- நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதை முன்னிட்டு 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. இதனால், 27-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
எனவே இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
- பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், பிப்ரவரி மாதத்திலும் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் 9-ந்தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
- பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், பிப்ரவரி மாதத்திலும் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 20 நாட்களுக்கான 5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
- பிப்ரவரி மாதத்திற்கு 7 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரும் 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 20 நாட்களுக்கான 5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்களுக்கான 7 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 12 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
நாளை காலை பிப்ரவரி 28-ந்தேதி வரைக்கான தங்கும் அறை வாடகை முன்பதிவு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
பக்தர்கள் அறை வாடகையை முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 67,169 பேர் தரிசனம் செய்தனர். 21,222 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.
- காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை சார்பில் தினமும் காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.
தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அன்னதானத்திற்காக நாளொன்றுக்கு சுமார் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 டன் முதல் 7.5 டன் வரை காய்கறிகளும் பயன்படுத்துவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.
எனவே அன்னதானம் வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் ஒரு நாளைக்கு தேவையான அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலுத்தலாம்.
மேலும் காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அன்னதான செலவுத் தொகையை வழங்கும் பக்தர்கள் அன்னதானம் செய்யும் நாள் அன்று அவர்களே முன் நின்று அன்னதானம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
- குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.
திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.
மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- 7 நாளைக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
- சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்தில் உள்ள தங்க தகடுகள் பதித்து நீண்ட நாட்கள் ஆனதால் புதியதாக தங்கத் தகடுகள் பதிக்கும் பணிக்காக தேவஸ்தானம் சார்பில் பாலாலயம் நடந்தது. இதனால் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 7 நாட்களுக்கு ரூ.300 ஆன்லைன் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தங்க தகடுகள் பதிக்கும் பணி தாமதமாகும் என கூறப்பட்டதால் சர்வதேச அளவில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு உள்ளது. இதனால் தங்க தகடுகள் பதிக்கும் பணி 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதனால் ஆன்லைன் தரிசனம் ரத்து செய்யப்பட்ட 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 7 நாளைக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இதேபோல் மார்ச் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனை டிக்கெட்டுகளை இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டது.
பக்தர்கள் அங்கப்பிரதட்சன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருப்பதியில் நேற்று 80,969 பேர் தரிசனம் செய்தனர். 26,777 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- மாலை 4 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது.
- ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலமாக தரிசிக்க மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத ஒதுக்கீட்டை இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை அதில் அடங்கும்.
அதேபோல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீதமுள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் லக்கி டிப் (குலுக்கல் முறை) பதிவு செயல்முறை இன்று காலை 10 மணியில் இருந்து 24-ந்தேதி காலை 10 மணி வரை இருக்கும். லக்கி டிப்பில் டிக்கெட் பெற்றவர்கள் பணம் செலுத்தி உறுதிப்படுத்த வேண்டும். பக்தர்கள் இந்த நடைமுறைகளை கவனித்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று பிற்பகல் 2 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
- உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த மாதத்துக்கான (மார்ச்) ரூ.300 தரிசன டிக்கெட் ஒதுக்கீடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று பிற்பகல் 2 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
அதேபோல் மார்ச் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் கவனத்தில் கொண்டு தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.