என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ukrain"

    • ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.
    • பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

    பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.

    அதில், உக்ரைன் - ரஷியா போர் குறித்து ப்ரீட்மேன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ரஷியா மற்றும் உக்ரைனுடன் இந்தியா நல்ல நட்புறவை கொண்டுள்ளது. ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.

    அதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உங்களுக்காக உலகில் எத்தனையோ மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். போரில் நம்மால் ஒருபோதும் நல்ல முடிவை எட்ட முடியாது' என்று எடுத்துக்கூற முடியும்.

    உக்ரைன் - ரஷியா போர் தொடங்கிய நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சவாலானதாக இருந்தது. ஆனால், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.

    பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை நிறுத்த முடியும். பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

    இந்தப் போரில் இந்தியா யாருக்கும் ஆதரவாக இல்லை. ஆனால், அமைதியின் பக்கமும் சமாதானத்தின் பக்கமும் இந்தியா நிற்கிறது. இந்தப் போரினால் உலக நாடுகளே பாதிப்பு அடைந்துள்ளது.

    இந்த போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அமைதியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். நான் நடுநிலையானவன் கிடையாது. நான் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறேன்'' என்று தெரிவித்தார்.


    • சுமார் 650 வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்
    • முழு உலகமும் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்திக்கும்.

    டெல்லியில் நடைபெறும் 18 ஆவது ஆசிய ஆசிய-பசிபிக் வணிக மாநாட்டில் கலந்துகொள்ள ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்திறங்கிய அதிபர் ஓலாஃப் பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார்.

     

    ஜெர்மானிய வணிகத்திற்கான இந்த ஆசிய பசிபிக் மாநாட்டில் ஜெர்மனி, இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சுமார் 650 வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டைப் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஓலாஃப் இணைந்து தொடங்கி வைத்து உரையாற்றினர்.

    மாநாட்டில் பேசிய மோடி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பம் இந்திய திறமையுடன் இணையும் போது, உலகத்திற்குச் சிறந்த எதிர்காலத்தை அளிக்கும்.

    உலகில் பதற்றம், குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதுபோன்ற தீவிர பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நமது பொருளாதார ஒத்துழைப்பு மேம்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சர்வதேச தொழிலதிபர்கள் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.

     

    ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பேசுகையில், உக்ரைனுக்கு எதிரான மிருத மிருகத்தனமான ரஷியா வெற்றி பெற கூடாது. அவ்வாறு ரஷியா வென்றால் ஐரோப்பாவின் எல்லைத் தாண்டியும் அதன் விளைவுகள் இருக்கும். முழு உலகமும் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்திக்கும். ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு நம்மால் ஒருங்கிணைந்து இதுவரை ஒரு தீர்வை ஏற்படுத்த முடியவில்லை என்பது நமது இயலாமையின் வெளிப்படுத்துகிறது என்று பேசினார்.  

    ஏ.என் 32 ரக போர் விமானத்திற்கான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய லஞ்சம் பெற்ற பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #NarendraModi #RahulGandhi
    புதுடெல்லி :

    உக்ரைன் நாட்டிடம் இருந்து ஏ.என் 32 ரக போர் விமானத்திற்கான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்வதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக உக்ரைன் அரசு விசாரனை நடத்தி வருவதாக நேஷனல் டெய்லி எனும் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
    இது குறித்து உக்ரைன் நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் தொடர்ப்பு இருப்பதாக சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது :-

    ஏ.என் 32 ரக போர் விமானத்திற்கான உதிரி பாகங்கள் கொள்முதல் தொடர்பாக இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உக்ரைன் அரசிடம் இருந்து லட்சக் கணக்கான அமெரிக்க டாலர் பணத்தை துபாயில் லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டின் பாதுகாவலன் என சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் பிரதமர் மோடி அவர்களே, இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உங்கள் அரசின் ஊழல் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” 

    என அவர் தெரிவித்துள்ளார். #NarendraModi #RahulGandhi
    ×