என் மலர்
நீங்கள் தேடியது "umpire"
- 18வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
- விராட் கோலி ஆர்.சி.பி. அணிக்காக விளையாடுகிறார்.
விளையாட்டுத் துறையில் எதுவும் நடக்கலாம். 2008ம் ஆண்டு ஐ.சி.சி. நடத்திய அண்டர் 19 (U19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அன்று தொடங்கி விராட் கோலியின் இன்று சர்வதேச கிரிக்கெட் இதுவரை கண்டிராத தலைசிறந்த வீரராக உருவெடுத்துள்ளார்.
எனினும், அண்டர் 19-இல் விராட் கோலியுடன் விளையாடிய அனைவரும் இன்று கிரிக்கெட் துறையில் சாதனையாளர் ஆகிவிடவில்லை. எனினும், விராட் கோலி தற்போது 18-வது ஐ.பி.எல். தொடரில் விளையாட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிக்காக உள்ளார். இந்த நிலையில், அண்டர் 19 இந்திய அணியில் தன்னுடன் விளையாடிய தன்மே ஸ்ரீவஸ்தவா விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் அம்பயராக களமிறங்குகிறார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தன்மே ஸ்ரீவஸ்தவா தனது 35-வது வயதில் இருந்து அம்பயரிங் செய்து வருகிறார். இவர் 2008-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு அதிக ஸ்கோர் அடித்த வீரராக திகழ்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் விளையாடினார்.
அம்பயரிங் செய்வது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்மே ஸ்ரீவஸத்வா கூறும் போது, "நான் தலைசிறந்த வீரராக இருந்ததை புரிந்து கொள்கிறேன். ஒருகட்டத்தில் ஐ.பி.எல். விளையாட முடியுமா என்ற சூழல் உருவானது. அப்போது, தொடர்ந்து வீரராக விளையாட வேண்டுமா அல்லது வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்ஸில் கவனம் செலுத்த வேண்டுமா என முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது," என்று தெரிவித்தார்.
- நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
- 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.
அதுமுதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார். 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.
தற்போது 61 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.
- வங்காளதேசம் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் ஹசரங்கா இடம் பெற்றிருந்தார்.
- நடுவரை கேலி செய்ததால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கையும் ஒருநாள் தொடரை வங்காளதேசமும் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் கடந்த வருடம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹசரங்கா இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஹசரங்காவுக்கு 2 டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது நடுவரிடம், தான் கொடுத்து வைத்திருந்த தொப்பியை பிடுங்கியதுடன், அவரை கேலியும் செய்தார். இது வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயலாகும்.
இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டன. ஏற்கனவே 5 தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றிருந்த ஹசரங்காவுக்கு அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 8 தகுதி இழப்பு புள்ளி என்பது 4 இடைநீக்க புள்ளியாக எடுத்துக் கொள்ளப்படும்.
4 இடைநீக்க புள்ளி என்பது 2 டெஸ்ட் அல்லது 4 ஒரு நாள் அல்லது நான்கு 20 ஓவர் போட்டிக்கு தடை விதிப்பதற்கு சமமானது. அவருக்கு எந்த போட்டி முதலில் வருகிறதோ அதற்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில் முதலில் வங்காளதேசத்துக்கான இரு டெஸ்ட் நடக்க இருப்பதால் அவர் அதில் விளையாட முடியாது. இதனால் ஹசரங்கா ஐ.பி.எல். தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
- டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
- அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார்.
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஜூன் 8 ஆம் தேதி ஆஸ்திரேலயா மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார். ஆனால் அப்பந்து டெட் பாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அப்பந்தை தவிர்த்தார். ஆனால் அம்பயர் நித்தின் மேனன் அப்பந்தை டெட் பால் என அறிவிக்கவில்லை.
இதனால் கோபமுற்ற வேட் அம்பயரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். கிரிக்கெட் விதிமுறைகளை மீறி அவதூராக பேசி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் ஐ.சி.சி. சார்பில் ஆஸ்திரேலயா வீரர் வேட் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். எனினும், இந்த சம்பவத்தில் மேத்யூ வேட் தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேத்யூ வேட்-க்கு இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது.மேலும் தான் அம்பயரிடம் அவ்வாறு பேசியது தவறுதான் என்று ஒப்புக்கொண்டார்.
- நேஷனல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ரெயின்போ 1 கிரிக்கெட் அணியும் சோகோ ரேன்சர்ஸ் என்ற அணியின் மோதியது.
- இந்த போட்டியில் ரெயின்போ அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
நேஷனல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ரெயின்போ 1 கிரிக்கெட் அணியும் சோகோ ரேன்சர்ஸ் என்ற அணியின் மோதியது. இந்த போட்டியில் 45 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் விளையாடிய சோகோ ரேன்சர்ஸ் அணி 230 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து விளையாடிய ரெயின்போ அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த ப்ரான்சிஸ் கடைசி பந்தை சிக்சராக விளாசினார்.
இதனையடுத்து வெற்றியை கொண்டாடும் விதமாக பேட்டை பறக்கவிட்டார். அந்த பேட் நடுவரின் காலில் வந்து தாக்கியது. வலியால் துடித்த நடுவர் அந்த சமயத்திலும் பணியை சிறப்பாக செய்யும் விதமாக சிக்சர் என சிரித்தப்படி வழங்கினார். நடுவர் மீது பேட் பட்டத்தை கண்டும் காணாமல் இருந்த பேட்டர் கொண்டாடுவதை நிறுத்தவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது.
- இதனால் இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் ஜோசப்பின் பெயர் இடம்பெறவில்லை.
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியின் போது கள நடுவர்களிடம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் அநாகரிமாக நடந்து கொண்டதாகவும் அவர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஐசிசி நடத்தை விதிகள் படி வீரர்கள் போட்டி நடுவர்களிடம் மோதல் போக்கை கொண்டிருப்பது குற்றமாகும். அதனடிப்படையில் தற்போது அல்சாரி ஜோசப்பிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீத கட்டணம் அபராதமாக விதிக்கப்படுகிறது என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்சாரி ஜோசப்பும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவர் மேற்கொண்டு விசாரனைக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் ஐசிசி கூறியுள்ளது.
அதேசமயம் அல்சாரி ஜோசப்பின் இந்த அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது. இதனையடுத்து இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் அல்சாரி ஜோசப்பின் பெயரானது இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் மார்க்வினோ மைண்ட்லிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரிச்சர்ட் கெட்டில்பரோவை தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது.
- டோனி ரன் அவுட் ஆகும் போது களத்தில் நின்ற ரிச்சர்ட், ஷாக் ரியாக்ஷன் கொடுத்து பிரபலமானவர்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித். இவரது பேட்டிங் ஸ்டைலில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நடனம் ஆடுவார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கால் சுழன்று கொண்டே இருக்கும்.
பந்து கீப்பரிடம் சென்ற பிறகு பேட்டை வைத்து ஸ்டைலாக போஸ் கொடுப்பார். மேலும் தடுப்பாட்டம் ஆடிய பிறகு எதிர் முனையில் இருக்கும் பேட்டரிடம் பேட்டை வைத்தே நில் என சைகை காட்டுவார். அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் அவரது பேட்டிங் ஸ்டைலை போல இந்தியாவில் ஒரு சிறுவன் அவரை போலவே பேட்டிங் ஆடியுள்ளார். இந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்தியாவின் ஸ்டீவ் ஸ்மித் என தலைப்பிட்டுள்ளார்.
ரிச்சர்ட் கெட்டில்பரோவை தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது களத்தில் நின்ற ரிச்சர்ட் ஷாக் ரியாக்ஷன் கொடுப்பார். அந்த ரன் அவுட் மூலம் மிகவும் பிரபலமானவர் இவர். இவர் களநடுவராக இருந்தால் இந்தியா தோல்வியடையும் என்ற நிலை இருந்து வந்தது. அந்த நிலையை கடந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வந்தது.
நியூசிலாந்து - இந்தியா மோதிய போட்டியில் மீண்டும் இவரே கள நடுவராக பணியாற்றினார். இதனால் இந்த போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவும் என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அதை முறியடிக்கும் விதமாக இந்தியா அந்த போட்டியில் வெற்றி பெறும்.
இப்படி இந்திய ரசிகர்களால் அதிக கவனம் ஈர்த்த இவர் அடிக்கடி இந்திய கிரிக்கெட் சம்மந்தமாக பல வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்காமக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த வீடியோ பதிவிட்ட நிலையில் இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.