என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "upendra"

    • பிரபல கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிக்கவுள்ளார்.
    • படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

    ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

    படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் முழு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் வெளிவரவில்லை.

    இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு மாசான பாட்டிற்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உபேந்திரா இதற்கு முன் விஷால் நடித்த சத்யம் படத்தில் நடித்து இருந்தார். இவர் கன்னடம் அல்லாது பிர மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    இவர் நடிப்பில் வெளிவந்த சன் ஆஃப் சத்யமூர்த்தி மற்றும் கானி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட்டானது. உபேந்திரா நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்து யூஐ என்ற கன்னட படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சத்யராஜ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.
    • உபேந்திரா கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராவார்.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

    கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.

    தற்பொழுது படத்தில் உபேந்திரா நடிக்கவுள்ளதை படக்குழு அதிகார்ப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தில் அவர் கலீஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். உபேந்திரா கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராவார். இவர் சத்யா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கியுள்ளார்.
    • பான் இந்தியா திரைப்படமாக Ui உருவாகி இருக்கிறது.

    'லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி. & வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி. மனோகரன் மற்றும் கே.பி. ஸ்ரீகாந்த் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் Ui. இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள Ui வருகிற டிசம்பர் 20 அன்று வெளியாகிறது.

    சமீபத்தில் இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சண்முகப்பாண்டியன், "உபேந்திரா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அப்பாவும் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். 'Ui' படத்தின் டிரெய்லரும் வித்தியாசமாக உள்ளது."

     


    "ஹாலிவுட் தரத்தில் நம்மால் படம் எடுக்க முடியாதா அவர்கள் செய்வதை நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும். அந்த ஏக்கத்தை இந்தப் படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை கன்னடப் படம் என்று மட்டும் பார்க்காமல் பான் இந்திய படமாகப் பார்த்து மக்கள் ஆதரவுக் கொடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கியுள்ளார்.
    • பான் இந்தியா படமாக Ui படம் உருவாகியுள்ளது

    ஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி. & வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி.மனோகரன் மற்றும் கே.பி. ஸ்ரீகாந்த் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் Ui. இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கி நடித்துள்ளார்.

    பான் இந்தியா படமாக உருவாகியுள்ள Ui படம் இன்று [டிசம்பர் 20] தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படம் ஆரம்பித்த உடனே தியேட்டர் திரைகளில் போடப்பட்ட கார்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

     

    அதாவது, புத்திசாலிகள் முட்டாள்களை போல் தெரிவார்கள், முட்டாள்கள் தங்களை புத்திசாலிகளை போல் காட்டிக்கொள்வார்கள், நீங்கள் முட்டாளாக இருந்தால் முழு படத்தையும் பாருங்கள், நீங்கள் புத்திசாலியாக இருந்தால் தியேட்டரை விட்டு வெளியேறுங்கள் என்ற வசனம் இடம் பெற்ற கார்டை படம் ஆரம்பிக்கும் போதே இடம்பெறச் செய்துள்ளனர்.

    இதை புகைப்படம் எடுத்த ரசிகர்கள் இணையத்தில் அதை பகிர்ந்து கமெண்ட்களை குவித்து வருகின்றனர். சிலர் இதை வரவேற்றுள்ள நிலையில், சிலர் இதை கொஞ்சம் ஓவர் என்றும் புலம்பி வருகின்றனர்.

    • உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் 'கப்ஜா'.
    • நடிகர் உபேந்திராவின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் டீசரை நடிகர் ராணா வெளியிட்டுள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் 'கப்ஜா'. கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஆர்.சந்துரு இயக்கியுள்ளார். இதில் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ஆர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

     

    கப்ஜா

    கப்ஜா

    இந்நிலையில் 'கப்ஜா' திரைப்படத்தின் டீசரை நடிகர் உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி நடிகர் ராணா டகுபதி இணையத்தில் வெளியிட்டுள்ளார். பிரம்மாண்டமாஅ உருவாகியுள்ள 'கப்ஜா' படத்தின் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்' என படக்குழு தெரிவித்துள்ளது. தெரிவித்திருக்கிறார்கள்.

    கப்ஜா

    கப்ஜா

     

    மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ஆர்.சந்துரு பேசியதாவது, "1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் 'கப்ஜா'. இந்த படத்திற்கு 'தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா' எனும் டேக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம்" என்றார். 

    ×