search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகர் உபேந்திரா
    X

    கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகர் உபேந்திரா

    • பிரபல கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிக்கவுள்ளார்.
    • படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

    ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

    படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் முழு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் வெளிவரவில்லை.

    இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு மாசான பாட்டிற்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உபேந்திரா இதற்கு முன் விஷால் நடித்த சத்யம் படத்தில் நடித்து இருந்தார். இவர் கன்னடம் அல்லாது பிர மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    இவர் நடிப்பில் வெளிவந்த சன் ஆஃப் சத்யமூர்த்தி மற்றும் கானி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட்டானது. உபேந்திரா நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்து யூஐ என்ற கன்னட படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    Next Story
    ×